உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” அப்ப. . உன் மாமா பையன்.. ? ”
” அவனுக்குத்தான் கல்யாணமாகிருச்சே… உங்களுக்கு தெரியாதா.. ?”
” அப்படியா.. ? அதெப்போ..? ”
” அதாகிக்கூட.. ஒருவருசமாகப் போகுது.. ”
” அப்ப. . உங்க லவ்வு…? ”
” லவ்வா… நாசமாப் போச்சு. .! அவனெல்லாம் லவ் பண்ணத நெனச்சு. . இப்ப வெக்கப்படறேன்” என வருந்தும் குரலில் சொன்னாள்.
” ஏய். . என்ன நடந்துச்சு.. நசீ. . ? சத்தியமா எனக்கு எதும் தெரியாது.! நீ இன்னும் உங்க மாமா பையன லவ் பண்ணிட்டிருக்கேனுதான் நான் நெனச்சிட்டிருக்கேன்..! ஸாரி. .! ஆமா. . என்னாச்சு. . ?”
” என்னவிட.. கொஞ்சம் வசதியான ஒருத்தி கெடச்சதும்..என்னை மறந்துட்டு.. அவளக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு.. எங்க மாமா. . ”
” அப்ப. . அவன். . ?”
”அவன்லாம்.. சுத்த டம்மி..! எங்க மாமா பேச்சுக்கு மறுபேச்சு இல்ல. ..! ”
” ச்ச.. இத்தன அழகா இருக்கற உன்னப் போய் வேண்டாம்ன்ட்டாங்களே..”
” எங்க இதுல அழகெல்லாம் ஒரு பெரிய இதே இல்ல. .! நகையும். . பணமும். . எவ்ளோ போடறாங்கன்னுதான் பாப்பாங்க.. ”
” ஸாரி. .. நசீ. . கேக்கவே வருத்தமாருக்கு. .” என்றேன்.
”பரவால்ல..” சிரித்து ”அதெல்லாம் நான் இப்ப மறந்துட்டேன்..! ”என்றாள்.
” அப்ப. . லவ் பண்ணலாங்கறியா.. ? ”
” ஐயோ. . இல்லப்பா. .. வேண்டாம். .நா… ஒரு இதுல சொல்லிட்டேன்.! பாவம் கீதா. . மருபடி அவ வாழ்க்கைல.. இன்னொரு சோதணை வேண்டாம். .” என்க
நான் திகைத்தேன்.!
” ஏய். . என்ன சொல்ற.. ? இதுல கீதா எங்க வந்தா..? ”
” இல்லப்பா.. !! நீங்க லவ் பண்றீங்கன்னு நான் சொல்லல. ஆனா. . நான் உங்கள லவ் பண்றேனு தெரிஞ்சா சத்தியமா அவளால அதைத் தாங்கிக்கவே முடியாது.. ! ஏதோ இப்பத்தான் மருபடி ரெண்டு பேரும் பிரெண்டாகிருக்கீங்க.. அத நா மருபடி கெடுக்கமாட்டேன். ”
”நீ… சொல்றது எனக்கு புரியல நசீ..! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.! ”
” அவளப் பத்தி… நான் உங்களுக்கு புதுசா சொல்லனும்னு.. இல்லேனு நெனைக்கிறேன். !! ஒரு நேரத்துல அவ உங்க மேல உயிரையே வெச்சிருந்தா.. ! நாங்கல்லாம் அவகிட்ட பலதடவ சொன்னோம். லவ்வ சொல்லிருடி..சொல்லிருடினு. ஆனா அந்தப் பாவி முண்டை.. உங்ககிட்ட வெளையாட்டுக் காட்றேன். .வெளையாட்டுக் காட்றேன்னு.. உங்ககிட்ட சொல்லவே இல்ல. . கடைசில என்னாச்சி. ..? ஒரு கோவத்துல எடுத்த முடிவால… செத்துப் பொழச்சதுதான் மிச்சம்… ” என அவள் சொல்ல. .. நான் திகைப்புடனே நின்றிருந்தேன்.
அவளே மெல்ல. . என்னோடு அணைந்தவாறு சொன்னாள்.
” இப்பக்கூட அவ உங்கள விரும்பத்தான் செய்றா… ஆனா இதுக்கு மேல.. நீங்க அவள ஏத்துக்க மாட்டிங்கன்னுதான். . அத சொல்லாம இருக்கா..! நீங்க வேற ஒருத்திய கல்யாணமே பண்ணிட்டாலும் சரி. . இல்ல அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டாலும் சரி. .. அவள்ளாம் சாகறவரைக்கும் உங்கள விரும்புவா…! ஏன்னா..
அவளோட கொழந்தை மனசுக்குள்ளருந்தே.. நீங்க வாழ ஆரம்பிச்சிட்டீங்க…! உங்கள அவ லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னப்ப அவளுக்கு என்ன வயசு தெரியுமா…?” எனக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்தாள் நசீமா. !
” சொல்லு.. ”என்றேன்.
” சொன்னா நம்ப மாட்டிங்க.. அப்ப பத்து வயசு அவளுக்கு. .! எனக்கெல்லாம் அப்ப லவ்வுன்னா என்னன்னுகூடத் தெரியாது.! ஆனா அவ அப்பவே உங்கள லவ் பண்றதா சொன்னா. .!! உங்களக் கல்யாணம் பண்ணிட்டு.. உங்ககூட எப்படியெல்லாம் வாழனும்னு.. கதை கதையா சொல்லுவா.. தெரியுமா…? அப்பல்லாம் நாங்க அவள பயங்கரமா நெக்கல் பண்ணுவோம்.!! உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் பாவி முண்ட… உங்கள வெறுப்பேத்தனும்ங்கற ஒரே காரணத்துக்காக.. அந்த லுச்சாப் பையன்கிட்டப் போய் வாழ்க்கைவே.. நாசக்கேடு பண்ணிட்டா. .! அப்பவும். . தங்கமணியெல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னா. . நீங்க அப்படி ஒண்ணும் கெட்டவரு இல்லே.. ஏதோ ஒரு இதுல.. ரம்யக்காகூட தப்பு பண்ணிருப்பாரு.. நீ நெனச்சா இப்பவே அவர மாத்திரலாம்னு.. கேட்டாளா.. இந்தப் பாவி…? ”
அவள் சொல்வதைக் கேட்ட எனக்கு… தலையே சுற்றுவது போலிருந்தது !

பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த. . நீ என்னைப் பார்த்ததும் நிமிர்ந்து நின்றாய்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.