உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” நூறு போதுமா.. ? ”
”போதும். . போதும். . ! கடனாத்தான். நான் வேலைக்குப் போனதும் மொத மாச சம்பளம் வாங்கினவுடனே உங்க கடன செட்டில் பண்ணிட்டுத்தான் மறுவேலை”என சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” யாரு.. நீ.. வேலைக்குப் போயி…?”
” ஆமா. . நம்புங்க சார்…! நாங்கல்லாம் குடுத்த வாக்கையும். . வாங்கின கடனையும் மறக்கற பரம்பரைல பொறக்கல.. ”
” ஓகே. .. ஓகே. . ”நான் சிரிக்க.
” ஒண்ணு சொல்லியே ஆகணும்” என்றாள்.
” என்ன. .? ”
” இந்த ட்ரஸ்ல.. ஆள் சூப்பரா இருக்கீங்க. .! நிச்சயமா பொண்ணுக்கு உங்கள புடிச்சிரும்..! ஐஸ் வெக்கல! நெஜமாதான் சொல்றேன்.”
” தேங்க் யூ.. ”
கையை நீட்டினாள் ” பெஸ்ட் ஆப் லக்.. ”
அவள் கையைப் பிடித்து. .மறுபடி… ” தேங்க்ஸ் ” என்றேன்.
அவளது பிறந்த நாளுக்கப்பறம் அவள் கையை இப்போதுதான் பிடிக்கிறேன்.! மிகவும் மிருதுவான கை அவளுக்கு. .! அதோடு அந்தக் கை மிக மிகக் குளிர்ச்சியாகவும் இருந்தது !!!

பெண் பெயர்..மதுமிதா. .! படிப்பு. பி எஸ் ஸி.. மேத்ஸ்.! வேலை இல்லை..! வீட்டில்தான். நடுத்தர வர்க்கம். ! நிறம் மா நிறம். !எல்லாம் ஓகே. ! ஆனால் பெண் கொஞ்சம் குண்டாகவும். . உயரம் குறைவாகவும் இருந்தாள்.!!
” பொண்ண.. புடிச்சிருக்காடா.?” குமுதா கேட்டாள்.

” குண்டா இருக்காளே ” என்றேன்.
” சருக்கு வெளையாடு..” எனச் சிரித்தாள்
” உனக்கு புடிச்சிருச்சா. ?” நான் கேட்க.
” நா பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன்..”
திடுக்கிட்டேன் ” அடிப்பாவி.. ”
சிரித்து ” என்ன முடிவுனு கேளு.. ” என்றாள்.
” சொல்லு.. ”
” உனக்கு இது ஒத்துவராது ” எனப் பாலை வார்த்தாள்.!!!

இடது கையில் முகம் தாங்கி… கவலையோடு உட்கார்ந்திருந்த நீ… என்னைப் பார்த்துக் கேட்டாய். !
” என்னாச்சு. . போன காரியம் ?”
சட்டையைக் கழற்றிச் சுவற்றில் மாட்டிவிட்டுத் திரும்பினேன்.
” ம்.. சக்சஸ்.. ” என்றேன்.
” பொண்ண.. புடிச்சிருக்கா.. ?”
”ம்..ம்.. ”
சோகம் கப்பிய முகத்துடன் என்னைப் பார்த்தாய். உடனே பெருமூச்செறிந்தாய்.
” அழகா இருப்பாளா… ? ”
” செம்ம ஆழகு… ! பாத்தவொடனே அசந்துட்டேன். என்ன.. ஒரு ஆழகுடா சாமி..” நான் சிரிக்காமல் சொல்ல.. என்னையே பார்த்தாய்.
என் அம்மா .. இன்னும் குமுதா வீட்டில் இருப்பதால்.. நானே தண்ணீர் மோந்து குடித்தேன்.
” எல்லாம் பேசியாச்சா.? ” எனக் கேட்டாய்.
” ம்.. ம் .. ”
” எப்ப கல்யாணம். . ? ”
” நிச்சயம் பண்ணல.. ”
”நிச்சயம் எப்ப. . ? ”
” முடிவு பண்ணல.. ” என்றுவிட்டுக் கட்டிலில் சாய்ந்தேன்.
” தூங்கப் போறீங்களா..? ”
” ம்.. ம்… ” என நான் சொல்ல.. உடனே எழுந்து போய்விட்டாய்.
நான் கண்களை மூடினேன். மனக்கண்ணில் நான் பார்த்துவிட்டு வந்த பெண் வந்தாள்.! குண்டான அவளது உடம்பு மேலும் விரிவதுபோல இருந்தது.!
அவளுக்கு நீ பலமடங்கு தேவலை எனத் தோண்றியது.!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.