உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

மறுநாள். .. !!!
குளித்துவிட்டு வந்து நான் தயாராகிக் கொண்டிருக்கும்போது.. நீ.. உன் தோழிகளுடன் வந்தாய். நீங்கள் மூவரும் உள்ளே வராமல்.. கேட்டுக்கிட்டேயே நின்று பேசிக்கொண்டிருந்தீர்கள்.!
நான் எட்டிப் பார்க்க… முதலில் என்னைப் பார்த்த நசீமா. .
” அலோ…சார்.. எங்களையெல்லாம் கூப்பிட மாட்டிங்களா.. ? ” எனச் சிரித்தவாறு கேட்டாள்.
” எங்க. .. ? ” நான் கேட்க.
” ம்.. உங்க வருங்கால பொண்டாட்டியப் பாக்க. . ”
” தாராளமா வாங்க…நசீ.. ! ஆனா உடனே முடிவு பண்ணிர வேண்டாம். . என் பொண்டாட்டினு.. ”
தன் பங்குக்கு.. தங்கமணி ஒரு பக்கம். .
” அண்ணா… பாத்தீங்களா..! எங்களுக்கு ட்ரீட் வெய்ங்க.. ” என்றாள்.
” ட்ரீட்லாம் முடிவானப்பறம்தான்.. ரங்கமணீ.. ” என நான் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்ய….
அவளும்..” ரங்கமணீ.. இல்லண்ணா… தங்கமணின்னு கூப்பிடுங்கனு.. எத்தனை தடவ சொல்றது.. ” என்றாள்.
” அப்றம்… இன்னிக்கு காலேஜ் லீவா. . ?”
நசீமா. ” அதனாலதான் இங்க நிக்கறோம்.. ”
” ரோட்லயே நிக்காட்டி என்ன. . உள்ளதான் வந்து நின்னு பேசுங்க. . ” என்றேன.
” இங்க நின்னாலாவது.. நாலு பசங்கள லுக்கு விடலாம்.” எனச் சிரித்துக்கொண்டு சொன்னாள் நசீமா.
” அதுசரி.. காலேஜ்ல.. எத்தனை பேர.. சுத்தல்ல விடறீங்க ரெண்டு பேரும். . ?”
உடனே சொன்னாள் தங்கமணி.
” நா.. இல்லண்ணா.. இவதான். . நாலஞ்சு பசங்கள.. லோ.. லோனு அலைய விடறா..! ”
” அவங்க அலையறதுக்கு. . நான் என்ன பண்றது.. ? ” என முகத்தில் பெருமிதம் பொங்கச் சொன்னாள் நசீமா.
”அவங்க உன் முகத்த பாத்துருக்காங்களா..? ”
” இல்லண்ணா.. இவதான் முழுசா மூடிருப்பாளே. கண்ணத்தவற வேற எதையுமே எங்க காலேஜ்ல எவனும் பாத்ததில்ல..” என்றாள் தங்கமணி.
நசீமா ” எங்களெல்லாம் பாக்காமயே இப்படி அலையறானுகனா.. பாத்தா என்னாவானுக..? ” எனச் சிரித்தாள்.!
நசீமா சொல்வது பொய்யல்ல.
உண்மையிலேயே அவள் நல்ல அழகிதான்…! அதோடு கூடுதல் நிறமும் கொண்டவள்..! வெளியில் அவளை பர்தா இல்லாமல் பார்க்கவே முடியாது. ! உன் வீட்டிற்கு வரும்போது மட்டும். . தலையில் கருப்புத் துணியை முக்காடாகப் போட்டுக் கொண்டு வருவாள்.! இப்போது முக்காடு மட்டும்தான் பர்தாவில் இல்லை. . !!
அங்கே நின்று பேசிக் கொண்டிருந்த நீங்கள் மூவரும் திபுதிபென ஓடிவந்து. . உன் வீட்டிற்குள் புகுந்து கொண்டீர்கள்.
” ஏன்… என்னாச்சு. . ? ” நான் புரியாமல் கேட்க. .
நீதான் சொன்னாய் ” நசியோட சிச்சா வர்ராரு.. வீட்டு முன்னால நிக்கறதப் பாத்தாருனா அவ்வளவுதான். . ”
உங்களை விட்டு. .. நான் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க… நசீமா கதவருகே வந்து நின்று..
”என்ன பண்றீங்க.. ?” எனக் கேட்டாள்.
இறுதியாக முகத்துக்கு பவுடர் அடித்துக் கொண்டிருந்தவன்..எட்டிப் பார்த்து..
” வா.. நசீமா. . ” என்றேன்.
” ஒரு சின்ன ஹெல்ப்பு.. ”
” ம்.. சொல்லு..? ”
” ஒரு ஹண்ட்ரெட் ருப்பீஸ் கடனா தரமுடியுமா.. ப்ளீஸ்.. ” எனக் கேட்டாள்.
உடனே பணத்தை எடுத்து நீட்டீனேன்.
வீட்டிற்குள் வந்து வாங்கிக் கொண்டாள் ”தேங்க்ஸ் ”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.