உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

அப்ப அவ ஒரு பிரச்சினைல சிக்கியிருந்தா.. ! அவ அழுதது.. செத்துப்போறேன்னு சொன்னதெல்லாம் அன்னிக்குத்தான். அதுக்கு நா அவளுக்கு ஹெல்ப் பண்ணி அவளக் காப்பாத்திவிட்டேன். ஆனா அந்த விசயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டுதான் விசயத்தையே சொன்னா… ! அதுல ஒரு சின்ன இதுதான் நீ பாத்தது.” என நான் சொல்ல. .
” நீங்க சொல்ற பிரச்சினைக்கும்.. அன்னிக்கு அவ மாரக் கைல புடிச்சிட்டிருந்ததுக்கும் என்ன சம்பந்தம்.. ? ” எனக் கேட்டாய்.
” அது காமமில்ல.. ஒரு ட்ரீட்மெண்ட் ! அத இப்ப உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியமும் இல்ல. ! ஆனா அப்ப உன்கிட்ட விளக்கம் சொல்றதுக்காக நான் எவ்ளோ துடிச்சேன். ஒரே ஒரு நிமிசம் அன்னிக்கு நீ காது குடுத்துக் கேட்றுந்தீன்னா.. நம்ம வாழ்க்கைல இவ்வளவு மோசமான சம்பவங்களெல்லாம் நடந்துருக்கவே நடந்திருக்காது”
” அப்போ… நடந்ததுக்கெல்லாம் நான்தான் காரணம்னு சொல்றீங்களா…?”
” அப்படி இல்ல.. !!! அந்தச் சூழ்நிலைல பாத்தா… நீன்னு இல்ல… வேற யாராருந்தாலும் அப்படித்தான் முடிவு பண்ணிருப்பாங்க.! அது உன் தப்பு இல்ல. .. ஆனா அதுக்கப்பறம் நா என்ன சொல்லவந்தேன்னு கூட கேக்காம.. பேசுனபாரு… ஒரு பேச்சு. .. ! அதுதான் தப்பு. !!!
அன்னிக்கு நான் சுக்குநூறா ஒடஞ்சவன்தான் இன்னுமேஎன்னால மீள.. மீளமுடியல.. ! அதோட எல்லாம் முடிஞ்சிருந்தா பரவால்ல…! அதுக்கப்பறம் நடந்த சம்பவங்கள் எல்லாம் இருக்கே… அ…ப்…பா.. !!! கொடுமைடா சாமி… !!! மனுசங்களோட குணம்லாம் எப்படிப் பட்டதுனு… அப்பதான் தெரிஞ்சிகிட்டேன். ! அதுக்கு முன்னால.. ஒரு கேணத்தணமான வாழ்க்கை வாழ்ந்துட்டிருந்துருக்கேன்.! இத்தனைக்கும் காரணம் .. அன்னைக்கு நீ பாத்த அந்த ஒரே சம்பவம்தான்ங்கிறது.. எனக்கப்பறம் ..இன்னிக்கு. ..உனக்கு ஒருத்திக்கு மட்டும்தான் தெரியும். ! இந்த விசயம் உங்கக்காளுக்குக் கூட தெரியாது.!!! அவளூக்கு பண்ணிக் குடுத்த சத்தியத்தக் காப்பாத்தறதுக்காக.. என் வாழ்க்கைல நான் குடுத்த விலை ரொம்ப அதிகம் … ”
” அப்படி என்ன சத்தியம் அது.?”
” இத நீ அன்னிக்கு கேட்றுந்தா யோசிக்காம சொல்லிருப்பேன். அன்னிக்குனு இல்ல. .. என்னிக்குமே நா சொல்லிருவேன். ! ஆனா இவ்வளவு தூரம் நடந்து முடிஞ்சப்பறம்.. அதச் சொலறதுல எந்த நண்மையும் இல்ல. . ! அவளுக்கு பண்ணிக் குடுத்த சத்தியமாவது நெலைக்கட்டும்.! ”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.