உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” ஐயோ. . அது இப்பவே செம குண்டுடா…! அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”
பாருக்குப் போய்.. ஏசி குளுகுளுப்பில் உட்கார்ந்து பீர் குடித்தவாறு நிறையப் பேசினோம்.!
இரண்டாவது பீர் குடிக்கும்போதுதான் சொன்னான்.
” வர வர ராமு. .. ரொம்ப மோசமா போறான்டா.. ”
நான் ஒண்றும் கேட்கவில்லை.
அவனே சோன்னான்.
” பெரிய பிரச்சினை பண்ணிட்டுத்திரியறான் கொஞ்ச நாளா..!.பொண்டாட்டியப் புடிச்சு ஆடிச்சிர்றான்.! அதும் அப்பப்ப கோவிச்சிட்டு போயிருது..! அப்றம் மறுபடி போய் சமாதாணப் படுத்தி கூட்டிட்டு வர்றான்.! அப்றம் இப்ப ரொம்ப பீல் பண்றான்டா.. அந்த கீதாவ நெனச்சு. .. ”
” ஏன். . ? ”
” அவள மிஸ் பண்ணிட்டான்னுதான். ”
” அப்ப அவளையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதுதான? ”
”அப்ப அவ சின்னப் புள்ளையா இருந்துருக்காடா.. அதோட ஜாதி வேற… அவங்கம்மா ஒரு மாதிரி. . வசதியும் கெடையாது. அவங்க வீட்டுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு போய்த்தான.. அவனுக்கு உடனடியா இதப் பாத்துக் கட்டிவெச்சுட்டாங்க. ”
” ஓ… !! ”
” இப்ப என்னடான்னா. ..! அவள நெனச்சு. . நெனச்சு. . ஓவரா இதுகூட சண்டை போட்டுட்டிருக்கான். இனி எங்க போய் முடியுமோ..? போனவாரம் தண்ணில ஒரே ஒப்பாரிடா.. !லாஸ்ட்டா ரெண்டு மூனு தடவ.. நிரோத் போடாம பையன் வெளையாண்டதுல.. அந்த புள்ள வயித்துலவேற.. ஆயிரருச்சான்டா.. அந்த கருவக் கலைக்கத்தான்… அந்தப் புள்ள… சூசைட் ட்ராமால்லாம் போட்ருக்கு..” என அவன் சொல்ல… எனக்குள் எதுவோ உடைந்தது. !!!
என்னுள் உண்டான அதிர்ச்சியை மிகவும் சிரமப்பட்டு. . நான் அடக்கினேன்.! அப்படியே தெரிந்த கொஞ்ச நஞ்ச அதிர்ச்சியையும் கவனிக்கும் நிலையில் காத்து இல்லை.!!!
உன்னைப் பற்றின… இந்தச் செய்தி.. மறுபடி என்னை பாதித்தது.!
இப்போது உன்மேல் எனக்கு காதலோ… நேசமோ.. இல்லையென்ற போதும் என் மனம் வருத்தமடைவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. !!!
பழைய கதையெல்லாம் மறந்து ஏதோ இப்போதுதான் உன்னுடன் கொஞ்சம் நன்றாகப் பழக ஆரம்பித்தேன்.! உன்மேல் எனக்கிருந்த கோபதாபங்களையெல்லாம்.. நமக்க்குள் ஏற்பட்ட.. உடற்சேர்க்கைதான் குறைத்திருந்தது.! ஆனால் இப்போது மீண்டும் அது எனக்குள் விஸ்வரூபம் எடுததது.!!!
அந்தக் கோபத்தில் உன்னோடு பேசுவதை நான் பெரிதும் தவிர்த்தேன். இரண்டு நாள் கடந்து. . மூன்றாம் நாள் இரவு..
நான் அககா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் படுக்க வீடு வந்து.. விளக்கைப் போட்டு. . பேண்ட். . சர்ட்டைக் கழற்றிவிட்டு. .. லுங்கியைக் கையிலெடுக்க..
நீ.. உள்ளே வந்தாய்.
நான் பேசவில்லை. நீயும் பேசவில்லை. ! நேராகச் சென்று கட்டில்மீது உட்கார்ந்து கொண்டாய்.
நான் லுங்கி கட்ட..
நீ பெருமூச்சுடன் கேட்டாய்.
” என்னாச்சு. . ?”
உன்மேல் ஏனோ கோபம் வந்தது. என் கோபத்தை அடக்கிக்கொண்டு சேரில் உட்கார்ந்தேன்.
மறுபடி.. ” என்மேல என்னதான் கோபம்.. ?” என நேரடியாகப் பார்த்துக் கொண்டு கேட்டாய். !
” உன்மேல.. எனக்கென்ன கோபம். .?”
” இல்ல.. என்னமோ இருக்கு?”
” ஒண்ணுல்ல. . ”
” அப்ப ஏன் மறுபடி என்னைப் பாத்தா மூஞ்சியத் திருப்பிட்டு போகணும்.. ?”
பதில் சொல்லாமல்.. நான் எழுந்து டிவியைப் போட்டேன்.
மறுபடி நான் உட்கார..
” சாப்பிடிங்களா.. ? ” எனக் கேட்டாய்.
” ம்.. ”
” நா.. ஏதாவது தப்பு பண்ணனா? எதா இருந்தாலும் சொல்லிருங்க ப்ளீஸ். .! என்னால் முடியல.. ரெண்டு. . மூனு நாளா.. பயங்கர டார்ச்சர். என்ன. . ரொம்ப. . படுத்தாதிங்கப்பா ப்ளீஸ். .! ”என வருந்தும் குரலில் பேசினாய்.
அதற்கு மேல் என்னால் அடக்க முடியவில்லை.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.