கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

நிசப்தமான அந்த இரவில், தன் தலைக்கு மேல் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் அவளை குளிப்பாட்டிக்கொண்டிருக்க, நிலவின் குளுமையை, அவள் தன் மெய்மறந்து, அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சந்திரனுக்கு இருபத்தேழு பெண்டாட்டியாமே? ஒவ்வொரு நட்சத்திரமும் அவனுக்கு ஒரு மனைவியாமே? தலைக்கு மேல் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில், பூர்ணசந்திரன் மெதுவாக உலா வந்து கொண்டிருந்தான். இன்னைக்கு ஒரு ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் மனசொத்து வாழறதே கஷ்டமாயிருக்கறப்ப, இருபத்தேழு பெண்களை, அஸ்வினியிலேருந்து ரேவதி வரைக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்திரன், எப்படி ஓரே நேரத்துல அவங்களை சமாளிச்சு இருப்பான்?

இளம் வயதில் சுந்தரி சொல்லியிருந்த புராணக் கதையொன்று சுகன்யாவின் நினைவுக்கு வர உதடுகளில் இளம் புன்முறுவல் ஒன்று எழுந்தது. இப்ப என் அனு என்ன பண்ணிக்கிட்டு இருப்பா? ம்ம்ம்.. என்ன பண்ணுவா? அத்தான் சம்பத்தோட செல்லுல, குசுகுசுன்னு எதையாவது பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பா… காதலர்களுக்கு பேசறதை தவிர வேற வேலை என்ன இருக்கு?

தில்லியில் ட்ரெய்னிங் முடிந்ததும், அனு சென்னை ஆஃபிசில் சேருவதற்கான போஸ்டிங் ஆர்டருடன், தமிழ்நாட்டுக்கு கிளம்பிப்போய் இரண்டு வாரங்களாகி விட்டிருந்தபோதிலும் இன்னும் ட்யூட்டியில் அவள் சேர்ந்திருக்கவில்லை. தனது சொந்த ஊரான பாண்டிச்சேரியில், தனக்கு கிடைத்த ஜாய்னிங் டயமை, பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருந்தாள்.

சுகன்யா… நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டீ…!! ஊருக்கு வந்த ரெண்டு நாள்லே, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறேங்கற சாக்குல, ஒண்ணுமே சொல்லாம கொள்ளாம, என் சம்பத், தன் அப்பா, அம்மாவோட, எங்க வீட்டுக்கு தீடீர்ன்னு காலையிலேயே வந்து நிக்கறாரு. அன்னைக்கு நான் எழுந்து குளிக்கக்கூட இல்லேடீ.

எங்கம்மா கதவைத் தொறந்தப்ப, நான் வீட்டு ஹால்லே, சோஃபாவுல கால் மேல கால் போட்டுக்கிட்டு கேஷுவலா நைட்டிலத்தான் படுத்திருந்தேன். அவங்க எல்லோரையும் ஒண்ணாப் பாத்ததும் எனக்கு கையும் ஓடலே; காலும் ஓடலே; அப்படியே திகைச்சு போய் நின்னுட்டேன்டீ.

நான் சாதரண நேரத்துல எப்படி இருப்பேன்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பினாங்களாம். உங்கத்தைக்கும், மாமாவுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சுடீ. அவங்க எங்கக் மேரேஜுக்கு அவங்க விருப்பத்தை, சம்மதத்தை, அப்பவே அங்கேயே என் எதிர்லேயே சொல்லிட்டாங்க.

சுகன்யா… உங்க அத்தையும் மாமாவும் ரொம்ப பெருந்தன்மையானவங்கன்னு, நீ சொன்னப்ப நான் நம்பவே இல்லே; நேர்ல அவங்களை பாத்து பேசினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, உங்கத்தைக்கு ரொம்பவே தாராள மனசுடி. அவங்க என்னை பிடிச்சிருக்குன்னு தன் வாயால மட்டும் சொல்லலேடி; சட்டுன்னு தான் போட்டுக்கிட்டிருந்த தங்கச்செயினை கழட்டி என் கழுத்துலே போட்டு அழகு பாத்தாங்கன்னா, பாத்துக்கோயேன்.