அமுதா, “சரி, நாளைக்கு டாக்டர் வாசன் ரிப்போர்ட் கிடைச்ச பிறகு முதலில் என் கிட்டே சொல்லு. மேற்கொண்டு விஸ்வா கூட என்ன பேசணும்ன்னு நான் சொல்லறேன். ஓ.கே?”
ராம், “சரி டாக்டர். இன்னொரு விஷயம். நான் இந்த கவுன்ஸிலிங்கில் இன்வால்வ் ஆகி இருப்பது வனிதாவுக்கு … ”
அமுதா, “சொல்லலை … I won’t”
ராம், “இன்னைக்கு நைட்டு டின்னருக்கு அவன் வீட்டுக்குப் போலாம்ன்னு இருக்கேன் … I want Vanitha to talk to me freely”
அமுதா, “ராம், நீயும் அங்கே இந்தப் பேச்சை எடுக்காதே”
அன்று அலுவலகத்தில் இருந்த வனிதாவை சுமதி அவளது கை பேசியில் அழைத்தாள் …
வனிதா, “சொல்லுங்க மேம்”
சுமதி, “உன் கூட கொஞ்சம் தனியா பேசணும் … எங்கே மீட் பண்ணலாம்?”
வனிதா, “நீங்க சொல்லுங்க”
சுமதி, “உன் வீட்டுக்குப் போற வழியில் இருக்கும் கேஃபே காஃபீ டேக்கு சாயங்காலம் ஒரு நாலு மணிக்கு வர முடியுமா? நாம் பேசினதுக்கு அப்பறம் நீ எப்பவும் போற நேரத்துக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”
வனிதா, “உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காஃபீ டேவில் மீட் பண்ணலாமே? இன்னைக்கு இங்கே இருந்து நான் வேற ஒரு இடத்துக்குப் போயிட்டு கொஞ்சம் லேட்டாத்தான் வீட்டுக்குப் போறதா இருந்தேன்”
சுமதி, “ஓ, டாக்டர் அமுதாவோட கவுன்ஸிலிங்க் சென்டருக்குப் போறதா இருந்தியா?”
Suber
Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .