வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ராமில் கண்கள் குளமாகி வழிந்தோடியது …
அடுத்த நாள் மாலை வனிதா அமுதாவை தொலைபேசியில் அழைத்தாள் ..
அமுதா, “ம்ம்ம் சொல்லு வனிதா. நாளைக்கு சாயங்காலம் மீட் பண்ணலாமா?”
வனிதா, “மேம், நீங்க சொன்ன அடுத்த கட்டம் … அதாவுது என்ன நடந்ததுன்னு சொல்லறது … நான் விஸ்வாகிட்டே நேரில் சொல்ல விருப்பப் படறேன்”
அமுதா, “என் கிட்டே சொல்லவே ரொம்ப தயங்கினே?”
வனிதா, “இல்லை மேடம். இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன். நான் உங்ககிட்டே சொல்லி அதை நீங்க அவர்கிட்டே சொல்லறதை நான் விரும்பலை”
அமுதா, “லாயரை மீட் பண்ணினியா?”
வனிதா, “எஸ். ஆனா, கோர்ட்டில் எதுவும் தாக்கல் செய்யலை. விஸ்வாகிட்டே பேசறதுக்கு முன்னாடி செய்ய வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன்”
ஏதோ உள் நோக்கத்துடன் வனிதா பேசுவதை உணர்ந்தாலும் அமுதாவால் சரியாகக் கணிக்க இயலவில்லை.
அமுதா, “சரி, நான் விஸ்வாவை நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வரச் சொல்லறேன்”
~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த நாள் மாலை நான்கு மணியளவில் வனிதா அமுதாவின் கவுன்ஸிலிங்க் செண்டரை அடைந்தாள் …
டாக்டர் அமுதாவுடன் விஸ்வாவும் அமர்ந்து இருந்தான் ..
வனிதா, “சாரி … கொஞ்சம் லேட் ஆயிடுச்சு”
அமுதா, “இட்ஸ் ஓ.கே வனிதா. இப்போத்தான் விஸ்வாவும் வந்தான்”
வனிதா, “ஓ” என்றவாறு தன் கணவனைப் பார்த்தாள். விஸ்வா அவள் பார்வையைத் தவிர்த்து அமுதாவைப் பார்த்தான் ..
Suber
Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .