ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

அமுதா, “வனிதா, இந்தக் கட்டத்தில் நீங்க ரெண்டு பேரும் என்னோடு தனிதனியா பேசி நடந்ததுக்கான காரணங்களை அலசிப் பார்த்துட்டு அடுத்த கட்டமா நீங்க ரெண்டு பேரும் அவைகளை மனம் விட்டுப் பேசணும்ன்னு சொல்லி இருந்தேன். இந்தக் கட்டத்தில் என்னோடு பேச உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லைன்னு தெரியுது. பரவால்லை. நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசாம இந்த கவுன்ஸிலிங்க் முடிஞ்சதா நான் சொல்ல மாட்டேன். நான் ஜட்ஜ்கிட்டே என்ன ரிப்போர்ட் கொடுப்பதுங்கறது உங்க ரெண்டு பேர் கையிலும் இருக்கு”

விஸ்வா எதுவும் சொல்வதற்கு முன் வனிதா, “நீங்க இந்த விவாகரத்து கொடுக்கக் கூடாதுன்னு சொன்னா விஸ்வா நான் நடத்தை கெட்டவன்னு சொல்லி விவாகரத்து வாங்கப் போறதா சொல்லி இருக்கார். அவர் அப்படிச் சொல்லி வாதாடினா அதுக்கு நான் ஆட்சேபணை தெரிவிக்கப் போறது இல்லை”

எதிரில் இருந்த இருவரும் மலைத்துப் போய் வனிதாவைப் பார்த்துக் கொண்டு இருக்க …

தொடர்ந்து வனிதா, “விஸ்வா, நடந்தது எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன் திறமையில் நம்பிக்கை வெச்சு இந்த வேலை இல்லைன்னா உனக்கு வேற வேலை கிடைக்கும்ன்னு நான் உன் கிட்டே வாதாடி இருக்கணும். நீ கோவப் பட்டதையும் ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் இருப்பதையும் இப்போ மாதிரி என் கிட்டே பேசறதையே நிறுத்தியதையும் பார்த்து என் ஆதங்கத்தில் எனக்கு வீட்டில் நிம்மதி கிடைக்கணுங்கற சுயநலத்தில் நான் சந்திரசேகர் கேட்டதுக்கு ஒத்துகிட்டேன். I tried consoling you. But didn’t try hard enough and took the easy way out” இதைச் சொல்லச் சொல்ல வனிதாவின் குரல் சிறிது உடைந்து கரகரத்தது …

விஸ்வா, “காரணம் நீதான்னு சொல்லி மறைமுகமா என்னை காரணம் காட்டறே. As if you didn’t enjoy sleeping with him”

வனிதா, “Yes, I enjoyed it with him, it was a different experience for me. நான் ஒரு மெஷின் இல்லை விஸ்வா. I am human after all. அதை நான் மறுக்க முடியாது. அப்படி என்ஜாய் பண்ணறேன்னு கில்டியா ஃபீல் பண்ணினேன் அடுத்த மூணு வாரமும் அவர் கேட்டதுக்கு இணங்கி விரும்பிப் போனேன். மனசுக்குள்ளே உனக்காகத் தான் இதைச் செய்யறேன்னு என்னை நானே ஏமாத்திகிட்டேன். உனக்கு துரோகம் செய்யறதா நினைக்கலை. அவர் கேட்டதுக்கு ஒப்புதல் கொடுத்ததுக்கு அவர்கூட செக்ஸ் வெச்சுகிட்டதுக்கு, அதில் என்ஜாய் பண்ணினதுக்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணம்”

விஸ்வா, “What about six months before I caught you?”

வனிதா, “அதுக்கும் நான் தான் காரணம். நீ உன் வேலையில் ரொம்ப பிசியா இருந்தே. வீட்டுக்கு வரும் போது ரொம்ப டையர்டா இருந்தே. நம் வீட்டுக்கு வந்த பிறகு அந்த டெல்லி ஃபேருக்கு போற வரைக்கும் உன்னால் கொடுக்க முடிஞ்சதுக்கும் மேல வேணும்ன்னு ஆசைப் பட்டேன். உலகத்தில் செக்ஸே இல்லாம எத்தனையோ தம்பதிகள் இருக்காங்க. அதை நான் உணறலை. என் மேலயே பரிதாபப் பட்டேன். அது என் முதல் தப்பு. ஒரு சமயம் நீ வெறுப்போடு வைப்ரேட்டர் வாங்கித் தரேன்னு சொன்னப்ப வாங்கித் தான்னு சொல்லி இருக்கணும். அது அடுத்த தப்பு”

விஸ்வா, “மறுபடி என்னை குறை சொல்லறே”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.