கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“போதும்… போதும்.. இப்போதைக்கு ஒரு ஜோடி அடிச்சிக்கிட்டு தனித்தனியா நிக்கறது போதும். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டையைப் போட்டுக்கிட்டு மொகத்தை தூக்கி வெச்சுக்காதீங்க.. உங்களைப் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம்.” சீனு சிரித்தான்.

“ஒரு வாரத்துக்கு அப்புறமாவது என்னை நம்பி இந்த வீட்டுலே இருப்பியா? இல்லே உன் டீச்சர்கிட்ட போய் பர்மிஷன் கேப்பியா?சம்பத் அவள் கையைப்பிடித்தான்.

“அப்பவும் நான் சொல்றதை கேட்டுக்கிட்டு நீங்க ஒழுங்கா நடந்துகிட்டாத்தான், இங்கே நான் இருப்பேன்…” பொய்யான சிணுங்கலுடன் தன் உதட்டை அழகாகச்சுழித்தாள் அனு. அவளுடைய அழகான உதடுகளை கவ்விக்கொள்ளத் துடித்தான் சம்பத்.

“நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ… ப்ளீஸ் என்னை நம்புடீ…” சம்பத் தன் கண்களை சிமிட்டினான்.

“மூணாம் மனுஷன் நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்…” அவர்கள் கொஞ்சலை கண்டு முணகிய சீனு வெகுவாக வெட்கப்பட ஆரம்பித்தான்.
“மாமா.. வாங்க மாமா?” கல்யாண சத்திரத்துக்குள் தனியாக வெள்ளை வேட்டி சட்டையில் நுழைந்த நடராஜனைக் கண்டதும் மானாகத் துள்ளிக்கொண்டு அவரருகில் ஓடினாள் சுகன்யா.

“நல்லாயிருக்கியாமா?”

நடராஜனின் கண்கள், தங்கமாக ஜொலித்துக்கொண்டிருக்கும், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை வேகமாக ஓடி மீண்டும் அவள் முகத்தில் வந்து நிலைத்தது. சுகன்யா கொஞ்சம் இளைச்சுப்போயிருக்கா. பாவம் தனியா இருக்கற பொண்ணு… நேரத்துக்கு சாப்பிடறாளோ இல்லையோ? என் புள்ளையால இவளுக்கு தேவையில்லாத மனவேதனை… அவருக்கு மனதில் சுருக்கென வலித்தது.

“நல்லாயிருக்கேன் மாமா.. அத்தை வரலையா?”

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லேம்மா… சென்னையில நடக்கப் போற ரிசப்ஷனுக்கு உங்க அத்தையும், மீனாவும் கண்டிப்பா வந்துடுவாங்க..”

நடராஜன் சுகன்யாவின் தலையை பாசத்துடன் ஒருமுறை வருடியவர், ஹாலில் சென்று உட்கார்ந்தார். மனையில் சிரித்த முகத்துடன் சம்பத் உட்கார்ந்திருக்க, புரோகிதர் கல்யாணச்சடங்குகளை ஆரம்பித்துக் கொண்டிருந்தார். சுகன்யாவின் கண்கள் கல்யாணச்சத்திர நுழைவாயிலில் இடமும் வலமுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளுடைய அலையும் விழிகளையும், முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும் நடராஜன் தன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார்.

சுகன்யா, செல்வாவைத்தான் தேடறா… மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சுக்கிட்டு இருக்கற பொண்ணு… ஒருதரம் வாயைவிட்டு அவன் எங்கேன்னுதான் என்னைக் கேட்டா இவ என்ன கொறைஞ்சா போயிடுவா? நடராஜன் மனதுக்குள் குறும்பு எட்டிப்பார்த்தது. தனக்குள் சிரித்துக்கொண்டார்.

“மாமா.. எழுந்து டிஃபன் சாப்பிட வாங்களேன்…”

“முகூர்த்தம் முடியட்டும்மா… மெதுவா சாப்பிட்டாப்போச்சு…”

“சூடா இருக்கும்போது ஒரு வாய் சாப்டுங்க மாமா… ப்ளீஸ் வாங்க மாமா..”

சுகன்யா, தன் கட்டியிருந்த இளம் நீலவண்ணப் பட்டுப்புடவை சரசரக்க, சூடியிருந்த மல்லிகை மணக்க, அவர் கையை, உரிமையுடன் பிடித்திழுத்துக்கொண்டு, டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.

சுகன்யாவின் கை தன் கரத்தைப் பற்றியதும், ஒரு வினாடி நடராஜனுக்கு உடல் சிலிர்த்து, சென்னையில் இருக்கும் தன் பெண் மீனாவின் நினைவு அவர் மனதுக்குள் வந்தாடியது. நடராஜனின் பக்கத்தில் உட்கார்ந்த சுகன்யா, பார்த்து பார்த்து, ஒன்றன் பின் ஒன்றாக டிஃபன் அயிட்டங்களை கொண்டு வரச்சொல்லி, அவரைத்தானே கனிவுடன் உபசரிக்க ஆரம்பித்தாள்

“எத்தனை நாள் லீவு போட்ருக்கேம்மா?”

“வெள்ளிக்கிழமை ரிசப்ஷன் முடிஞ்சதும்.. சனிக்கிழமை ஈவினிங் கிளம்பறதா இருக்கேன்..”

“போறதுக்கு முன்னே வீட்டுக்கு ஒரு தரம் வாயேம்மா…” கெஞ்சலுடன் அவள் முகத்தைப்பார்த்தார் நடராஜன்.

“சட்னி கொஞ்சம் போட்டுக்கங்க மாமா..” இலையில் ஒரு வடையை வைத்து, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து ஊற்றினாள். நடராஜனின் பக்கத்தில் நின்றிருந்த போதும், சுகன்யாவின் மனமும் விழிகளும் டைனிங் ஹால் முழுவதையும் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.