கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

ஏன் இவன் இப்படி பரிதவிச்சிப்போறான்…? அழுதாலும் பிள்ளையை அவதானே பெத்து எடுக்கணும்? பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசையா இவனுக்கு? சங்கரின் அருகில் சென்று நின்றாள் சுகன்யா… ஏனோ தெரியவில்லை அவளுக்கு அடக்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது.

“என்ன சுகன்யா… என்னைப்பாத்தா உனக்கு சிரிப்பு வருதா?”

“ரொம்பவே பயப்படறீங்களே…?” சுகன்யா ஆதரவாக அவன் கையைப் பற்றி இழுத்து சேரில் உட்கார வைத்தாள். தானும் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

“சுகன்யா… ஐ லவ் வேணி வெரி மச்… யூ நோ… அவ வலியிலே துடிக்கிறாளே…?” சங்கரின் குரல் தழுதழுத்தது.

“ஐ நோ…” தன் விழிகளால் பதிலளித்தவள் சங்கரின் இடது கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

“இந்தாங்க… இந்த காஃபியை சாப்பிடுங்க… யூ சீம் டு பி வெரி டயர்ட்…” சுகன்யா அவனை நோக்கி புன்னகைத்தாள்.

“சாரி சுகன்யா… நீ எப்படி இருக்கேன்னுகூட உன்னை ஒரு வார்த்தை கேக்கலே நான்… அயாம் ஸோ செல்ஃபிஷ்…
“வெட்கத்துடன் சிரித்தான் அவன்.

“வேணியை நினைச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு? சுகன்யா இனிமையாக புன்னகைத்தாள். காஃபியை நீளமாக உறிஞ்சி, ரசித்து குடித்தாள்.

“ஏன்…?”

“உங்களை மாதிரி ஒரு கேரிங் ஹஸ்பெண்டு எத்தனை பேருக்கு கிடைப்பாங்க?”

“இல்லை சுகன்யா… வேணி மாதிரி ஒரு பொம்பளை கிடைக்க நான்தான் குடுத்து வெச்சிருக்கணும்…” சுகன்யா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். செல்வாவின் முகம் அவள் மனதில் வந்தாடியது..

“உங்களை எங்கெல்லாம் தேடறேன் நான்?” வெள்ளை கவுன் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. சங்கர் வேகமாக அவளை நோக்கி ஓடினான்.

“கங்கிராட்ஸ்… உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கான்… உங்க வைப் ரொம்ப கோஆப்ரேட் பண்ணாங்க… நார்மல் டெலிவரிதான்…” சிரித்தாள் அந்த இளம் பெண்.

“என்னோட வாழ்த்துக்கள்” சங்கரின் கையை இறுகப்பற்றி குலுக்கினாள் சுகன்யா.

“தேங்க் யூ சுகா…” சுகன்யாவின் வலது கையை உயர்த்தி, கண்களில் நட்புணர்ச்சி ததும்பி வழிய, மென்மையாக அவள் புறங்கையில் முத்தமிட்டான் சங்கர்.

மெல்லிய வாடைக்காற்று உடலுக்கு இதமாக வீசிக்கொண்டிருந்த விடிந்தும் விடியாத நேரத்தில் சுகன்யா தன் வீட்டையடைந்தாள். வீட்டின் முன்புறத்திலிருந்த சிறிய தோட்டத்தில் நீலமும், வெண்மையுமாக, பூத்திருந்த சங்குப்பூக்களை, சுந்தரி பறித்துக்கொண்டிருக்க, புல் தரையில் விழுந்திருந்த பவழமல்லிகளை திரட்டி மாலையாக கோத்துக்கொண்டிருந்தாள் பாட்டி கனகா. தான் வந்த ஆட்டோவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவள் பூத்தொடுத்துக்கொண்டிருந்த பாட்டியை இறுக கட்டிக்கொண்டாள்.

“குளிச்சிட்டு சுத்தபத்தமா பூஜைக்காக பூ கட்டறவங்களை ஆஸ்பத்திரியிலே வந்ததும், வராததுமா கட்டிப்புடிக்கறியே?ஏன்டீ… கொஞ்சமாவது புத்தி இருக்கா உனக்கு?” சுந்தரி தன் விழிகளை உருட்டி, புருவத்தை நெறித்தாள். னாள்.

“சுந்து… கொழந்தையை விரட்டாதேடீ… எனக்கு தெய்வமெல்லாம் இந்தக்கொழந்தைக்கு அப்புறம்தான்…”

“அப்படி சொல்லுங்கப்பாட்டீ…” சுகன்யா தன் தாயை நோக்கி வாயைக்கோணி பழிப்புக்காட்டினாள்.

“வேணி எப்படி இருக்காடீ?”

“நல்லா இருக்காம்மா… இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சனையில்லே… வசந்தி அத்தை வந்தாச்சு… அவளோட பேரண்ட்ஸும் அரைமணி நேரத்துக்கு முன்னாடீ வந்து சேர்ந்துட்டாங்க.. அதான் நான் கிளம்பி வந்துட்டேன்..”

“கண்ணு.. இந்தக் காப்பியை குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கும்மா… சாயந்திரம் நீ ஊருக்கு கிளம்பணும்மா…” சிவதாணு அவளிடம் ஒரு கப்பை நீட்டினார்.

“தேங்க்ஸ் தாத்தா…” காஃபியை வாங்கிக்கொண்டவளின் கண்கள் இலேசாகக் கலங்கியது.

“ஏம்மா?”

“உங்களைல்லாம் விட்டுட்டு போகணுமே… அதை நெனைச்சேன்.. கண்ணுல தன்னால தண்ணி வருது தாத்தா…” சுகன்யா கண்களைத் துடைத்துக்கொண்டவள் தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. தோட்டத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த சொர்ணபட்டி பூக்கள் தங்கமாக மின்ன ஆரம்பித்தன.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.