கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

கல்யாணச்சத்திரத்தின் மாடியில், கைப்பிடி சுவரில் தன் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு அசைவில்லாமல் நின்றிருந்தான் செல்வா.

“மச்சான்… ?”

“ம்ம்ம்…”

“சுகன்யாகிட்ட பேசிட்டியா?”

“ப்ச்ச்ச்.. விடுடா மாப்ளே”

“என்னடா ஆச்சு… கீழே எல்லாரும் கிளம்பறாங்கடா..”

“சுந்தரி அத்தை என் மேல கோவமா இருக்காங்களாம். எது சொல்றதா இருந்தாலும் போன்லே சொல்லுங்கறா… இப்ப நான் வரமுடியாதுன்னு கிளியரா சொல்லிட்டா….” செல்வாவின் முகம் சிவந்து தொங்கிப்போயிருந்தது.

* * * * *

“சுகன்யா… சீனு பேசறேன்..” சீனு தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

“சொல்லுங்க…”

“என்னம்மா இது…? வரட்டுப்பிடிவாதம் பிடிக்காதே…. இதனால யாருக்கும் லாபம் இல்லே… ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வந்து செல்வாவைப் பாத்துட்டு போகக்கூடாதா?”

“சீனு… நீங்களுமா என்னை புரிஞ்சுக்கலே…?” குரலில் வலுவில்லை.

“சரி… உங்கம்மாவுக்கு செல்வா மேல அப்படி என்ன கோவம்…?”

“செல்வா என்னை சந்தேகப்பட்டதை… தன்னையே சந்தேகப்பட்டதா அவங்க ஃபீல் பண்றாங்க…”

“என்ன சொல்றே சுகன்யா?” சீனு திடுக்கிட்டுப்போனான்.

“நூலைப் போல சேலை… நான் நூல்… என் பொண்ணு சுகன்யா சேலை… செல்வா சேலையை சந்தேகப்பட்டுட்டான். நான் வளர்த்த என் பொண்ணை அவன் சந்தேகப்பட்டா அது என்னையே சந்தேகப்பட்ட மாதிரிதான்னு என் அம்மா அவரு மேல கோவமா இருக்காங்க.. எங்கப்பா எவ்வளவோ சொல்லிப்பாத்து இருக்காங்க… ஆனா இன்னும் அவங்க கொஞ்சம் மனவருத்தத்துலேத்தான் இருக்காங்க..”

“ஓ… மை… காட்…” கேட்டுக்கொண்டிருந்த செல்வாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

“சுகன்யா இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்…
“ சீனு தீர்க்கமாக பேசினான்.

“எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலே சீனு… அதனாலத்தான் கொஞ்ச நாளைக்கு டில்லியிலேயே இருப்போம்ன்னு நான் முடிவெடுத்தேன்…”

“சுகன்யா நீ டில்லியிலே இருந்தா மட்டும் இந்த ப்ராப்ளம் சால்வ் ஆயிடுமா?”

“ஆகாது சீனு… நிச்சயமா ஆகாது… எங்க ப்ராப்ளம் எங்களோட இருக்கட்டும்… இதனால அடுத்தவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாதுன்னுதான் உங்க கல்யாணமாவது நேரத்துல நடக்கட்டுமேன்னு, எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கன்னு நடராஜன் மாமாகிட்ட ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டேன்.”

“சுகன்யா… உன் மனசைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்… ஆனா இந்த ரெண்டு மாசமா செல்வா உன்னை ரொம்பவே மிஸ் பண்றான்… அவன் ஒழுங்கா டிரஸ் பண்றது இல்லே; சாப்பிடறது இல்லே; அவனுக்கு பைத்தியம்தான் பிடிக்கலை; இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

“தெரியும்… சீனு… நீங்க என்ன நினைக்கறீங்க… நான் மட்டும் தில்லியிலே நிம்மதியா, சந்தோஷமா இருக்கேனா?”

“சே…சே… நான் அப்படி சொல்லலே சுகன்யா…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.