கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கு வராமலா இருப்பான்?பத்து நாள் முன்னாடி செல்வா மேல எனக்கு கோவம் இருக்குன்னு சொன்னேன். அவன் என்னை செல்லுல கூப்பிட்டப்பல்லாம், அவன்கிட்ட பேசாம லைனை கட் பண்ணேன். இப்ப இவர்கிட்ட செல்வா வரலையான்னு என் வெக்கத்தை விட்டு கேட்டா இவர் சிரிக்க மாட்டாரா?

நேத்து பிள்ளையழைப்புக்கே வருவான்னு எதிர்பார்த்தேன். வரலே. நான் ஏன் அவன் மொகத்தைப் பாக்கணும்ன்னு இப்படி கிடந்து துடிக்கிறேன்… அவ இன்னும் என் கண்ணுல படவேயில்லையேன்னு ஏன் தவிக்கறேன்… ஏன் நிலைகெட்டு அலையறேன்?

சம்பத்தும், அனுவும், ஒண்ணா ரெண்டு பேருமே அவன் வீட்டுக்குப்போய் இன்வைட் பண்ணதுக்கு அப்புறமும், மேரேஜ்க்கு வரலேன்னா அவன் மனசுக்குள்ள என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கான்? முகூர்த்த நேரம் வேற நெருங்குதே? சுகன்யாவின் மனம் ஓரிடத்தில் நிற்கவில்லை.

“அப்ப திங்கட்கிழமை தில்லிக்கு போயிடுவே…?” நீண்ட பெருமூச்சொன்று நடராஜனின் கண்டத்திலிருந்து எழுந்தது.

“போய்த்தானே ஆகணும் மாமா…” முணகியவாறே வேகமாக எழுந்தவள் சூடாக காஃபியை கொண்டுவந்து அவர் கையில் திணித்தாள்.

“சுகன்யா… இன்னைக்கு தேதி பதினாறு. அடுத்த பதினெட்டாம் தேதி உன் ஃப்ரெண்டு மீனாவுக்கு கல்யாணம். இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. இப்பவே உன்னை நான் பர்சனலா கல்யாணத்துக்கு அழைக்கிறேன். ரெண்டு நாள் முன்னாடியே வந்து எங்களோட இருக்கணும்…” சுகன்யாவின் முகத்தை தன் ஓரக்கண்ணால் பார்த்தார்.

“என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? மீனா எனக்கு ஃப்ரெண்டு மட்டும்தானா?” சுகன்யாவின் குரல் திடீரென தழைந்தது.

“சுகன்யா… உன்னை என் வீட்டு மருமகளா… மீனாவோட அண்ணியா, அவ கல்யாணத்தை நீயே முன்னே நின்னு நடத்தும்மான்னு உன்னை நான் கேட்டுக்கிட்டேன்.”

“ஆமாம்…”

“மீனா கல்யாணத்தை நடத்துங்கன்னு நீ சொன்னதுக்கு அப்புறம்தானேம்மா நான்… மேற்கொண்டு காரியத்தை நடத்த ஆரம்பிச்சேன்…”

“ம்ம்ம்…”

“மீனா மேரேஜ் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கலாம். ஆனா இப்பவும் சொல்றேன்… என் வீட்டுக்குள்ள நீ மட்டும்தான் என் மருமகளா நுழையமுடியும்… எப்ப உன் வீட்டுக்கு வர்றேங்கறதை நீதான் முடிவு பண்ணி எனக்குச்சொல்லணும்.” நடராஜன் மென்மையாக புன்னகைத்துக்கொண்டே சுகன்யாவின் முதுகை தட்டிக்கொடுத்தார். திருமண மண்டபத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

“மாமா…”

“சொல்லுடா கண்ணு…” நடராஜன் நின்ற இடத்திலிருந்து திரும்பிப்பார்த்தார்.

“அவரு வரலையா?” சுகன்யாவின் குரல் குளறியது. விழிகள் இளம் சிவப்பாகிக்கொண்டிருதன.

“நேத்து ராத்திரியே இங்கே வந்தானே? நீ பாக்கலையா அவனை..?”

“இல்லே அங்கிள்…”

“அவனை இப்ப நிஜமாவே பாக்கணுமா உனக்கு?”

“ஆ… ஆ… ஆமாம்ம் அங்கிள்…” சுகன்யாவின் பேச்சு அவள் உதடுகளிலேயே சிக்கி சிக்கித் திணறலுடன் வந்தது.

“கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு…” சொல்லிவிட்டு முகத்தில் புன்சிரிப்புடன் நகர்ந்தார்.

சீனுவும், செல்வாவும், டிஃபன் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். சுகன்யா அவர்கள் பக்கம் திரும்பியதும் சீனு அவளை நோக்கி உற்சாகமாக கையை ஆட்டினான். சீனுவின் பக்கத்தில் செல்வா தன் தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான்.

“ஹாய் சீனு…” செல்வாவைப் பார்த்ததும் தன் முகம் குப்பென சிவக்க, அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தாள் சுகன்யா.

“மச்சான்… நம்ம வீட்டு பெரிசு நகர்ந்துடுச்சு… சுகன்யா தனியா இருக்கா.. சான்ஸை விட்டுடாதே….
“ சீனு முணுமுணுத்தான்.

“என்னடா பண்ண சொல்றே?”

“போடாங்ங்க்… நல்லா வருதுடா வாயிலே எனக்கு.. பட்டுன்னு கையைப் புடிச்சிக்கிட்டு ஒரு கதறு கதறிடுங்கறேன்…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.