கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“அவன் ஷூவை தொடைச்சு பாலீஷ் போட்டு… எத்தனை நாள் ஆச்சோ? பாக்கறதுக்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கான்னு என் ஃப்ரெண்டு வித்யா சொன்னா…”

“யாரைப் பத்திடீ சொல்றே..?” மனசு எக்காளமாக கூவியது.

“நிஜமாவே தெரியலியா நான் யாரை சொல்றேன்னு..?” காய்ந்த தலை முடியை வகிடெடுக்காமல் நெற்றிக்குப் பின்னால் தள்ளி ரப்பர் பேண்டால் இறுக்கினாள் சுகன்யா.

“எங்கிட்ட கொஞ்சாதடீ… உன் மனசுல யார் இருக்கறதுன்னு எனக்கெப்படித் தெரியும்…?”

“அதான்.. என் செல்வா…?”

“என்னது… உன் செல்வாவா?”

“பின்னே.. எங்களுக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் செல்வாதான்..”

“அட்ரா சக்கை… உன் கையைப் பிடிச்சு நெறிச்சவன்… தனியா வாடீன்னு கூப்டானே… அன்னைக்கு ஏன்டீ நீ அவன் பின்னால போவலே?”

“அதான் இன்னைக்கு அவனை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேனே?”

“நல்லா இருக்குதுடீ உன் கூத்து… நீ டெல்லியில இருக்கும் போது… நாலு தரம் உனக்கு போன் பண்ணான். நீ தானேடீ திமிர் பிடிச்சிப் போய் செல்லை ஆஃப் பண்ணே..?

“அப்ப எனக்கு அவன் மேல இருந்த கோவம் முழுசா தீரலை..”

“இப்பத் தீந்து போச்சா..?”

“கோவமா… அவனைப் பாத்தா என் வயிறு எரியுது..? முகத்தில் இலேசாக ரோஸ் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டாள்.

“எதுக்குடீ..?”

“என் செல்வா யாருமேயில்லாத அனாதை மாதிரியில்லா ராத்திரி பூரா எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கானாம்?” கன்னங்களில் படிந்திருந்த பவுடரை மெல்ல உள்ளங்கைகளால் அழுத்தி தேய்த்தாள்.

“அவன் மேல இவ்வளவு அக்கறை இருக்குல்ல உனக்கு?”

“ம்ம்ம்…”

“என்னடீ முனகறே..? வாயைத் தொறந்து சொல்லேன்..?”

“ஆமாம்.. ஐ லவ் ஹிம் சோ மச்… எப்பவும் என் மனசுக்குள்ளவேதான் அவன் இருக்கான்… அவன் எனக்கு பிரசண்ட் பண்ண மோதிரத்தை இன்னைக்கு வரைக்கும் நான் என் விரல்லேருந்து கழட்டவேயில்லே…” சுகன்யாவின் மனதில் பனியாக உறைந்திருந்த காதல் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது.

“சரி.. இப்ப அவன்… அதான்டீ உன் செல்வா… உன் வீட்டுக்கு வந்தா.. அவனை வான்னு கூப்பிட்டு பேசுவியா?”

“ம்ம்ம்.. என் அம்மா பெர்மிஷன் குடுத்தா… அவங்க பேசவிட்டா பேசுவேன்..?’

“அப்புறம்…?”

“அவனைக் என் ரூமுக்கு இழுத்துக்கிட்டு வந்து அப்படியே கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்ட முத்தம் வாங்கிப்பேன்..?”

“அம்மா என்னடீ அம்மா நடுவுலே? ரொம்பத்தான் நல்லப்பொண்ணு மாதிரி ஆக்டிங் குடுக்கறே?”

“எனக்கு என் அம்மாவும்தான் ரொம்ப முக்கியம்… என்னை வளத்த அவங்களும்தான் எனக்கு முக்கியம். மொதல்லே அவங்க; அப்புறம்தான் செல்வா; நான் டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ எங்கம்மாதானே எனக்கு புத்தி சொல்லி அனுப்சாங்க?”

“என்ன சொன்னாங்க…?”

“நீங்களா அடிச்சிக்கிறீங்க… நீங்களா கூடிக்கிறீங்க.. திரும்பவும் அடிச்சிக்கிறீங்க.. அடிச்சிக்கிட்டு என் நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணுன்னு இங்க வந்து எங்கிட்ட ஏன்டீ குதிக்கறே… கல்யாணங்கறது குழந்தைங்க விளையாடற சொப்பு விளையாட்டான்னு திட்டினாங்க?”

“ம்ம்ம்…”

“செல்வாவே திரும்பி வந்து… சுகன்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு என்னைக்கேக்கற வரைக்கும்… நீ பொத்திகிட்டு இருக்கணும்டீன்னு சொன்னாங்க…”

“அப்புறம்…?”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.