கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“என்னடீ சொல்றான் அவன்…?”

“நல்லா இருக்கியான்னு கேட்டாரும்மா..”

“என்னடீ விஷயம்… திரும்பவும்
“அவன்”…
“அவர்” ஆகறான்” சுந்தரி பெண்ணை முறைத்தாள்.

“போம்மா… நீதானேம்மா சொன்னே… கல்யாண வீட்டுல எல்லார்கிட்டவும் மரியாதையா பேசணும்ன்னு…” சுகன்யா தன் இடுப்பில் செருகியிருந்த சாவியை உருவி தாயிடம் நீட்டினாள். திரும்பினாள். செல்வா சீனுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளையே வெறித்துக்கொண்டிருந்தான்.

“பொண்ணும், பிள்ளையும் மனையில உக்காந்தாச்சு… உன் அத்தை உன்னை கூப்பிடறாங்க…” சுகன்யாவை இழுத்துக்கொண்டு நடந்தாள் சுந்தரி.

“மச்சான்… வெண்பொங்கல் சூப்பரா இருக்கு. அப்புறம் சுகன்யா என்னடா சொன்னா…?” நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சீனு சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.

“என்னத்த சொன்னா… வேணும்ன்னே என்னை வெறுப்பேத்தறா… பூஜை நேரத்துல கரடியா அவளோட அம்மாவும் வந்துட்டாங்க…”

“மாமா… இவருக்கு கொஞ்சம் கொத்சு போடுங்க… டேஸ்டா இருக்காம்; ஆனா கேக்கறதுக்கு கூச்சப்படறார்.” செல்வாவின் மனத்தவிப்பை புரிந்துகொள்ளாதது போல், அவன் இலையைக் காட்டினான் சீனு.

“மாப்ளே… சுந்தரி அத்தை முகத்தைப்பாத்தியா…? என் ஆளு கையை நான் புடிச்சிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் உர்ன்னு என்னை மொறைச்சாங்க… என் மேல ரொம்பவே கோவமா இருக்காங்கன்னு தோணுது…” செல்வா தன் புலம்பலை ஆரம்பித்தான்.

“பேஷா… வேணுங்கறதை கேட்டு பொறுமையாச் சாப்பிடுங்கோ சுவாமி… உங்க ரெண்டு பேரையும் ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லி எனக்கு உத்தரவு ஆயிருக்கு…”

“யார் சொன்னது மாமா?” சீனுவின் கண்களில் ஏகத்திற்கு வியப்பு.

“ரகு சாரோட அக்கா உங்களுக்கு என்ன உறவு ஆகணும்? அவாதான் சொன்னா…”

“ஓய்… இங்கே பாரும்… சாரோட பேரு செல்வா… இவர்தான் அவாளோட மருமகனா ஆகப்போறார்….”

“அப்படியா பேஷ் பேஷ்… உங்களுக்கும் ஒரு அரை கரண்டி பொங்கல் போடட்டுமா? சூடா இருக்கு இட்லி.. இல்லே முறுகலா ஊத்தப்பம் ஒண்ணு சாப்பிடறேளா… ?” பரிசாரகர் தன் வெற்றிலைக்காவி ஏறிய பற்களை சீனுவிடம் காட்டினார்.

“மாமா… ஊத்தப்பம் வாக்கறதுல நீங்க எக்ஸ்பர்ட்டுன்னு கேள்விப் பட்டிருக்கேன்..” சீனு தன் முகமெங்கும் புன்னகையை ஓடவிட்டான்.

“யாருடா இது? எனக்குத் தெரியாம பாண்டிச்சேரில புது மாமா உனக்கு?

“மச்சான்… பூணூல் போட்ட ஆளை மாமான்னு கூப்பிடறது எங்களுக்குள்ள சகஜம்டா.. மாமான்னு மரியாதை கொடுத்ததும் என்னை அந்தாளு எப்படி விழுந்து விழுந்து உபசரிச்சான் பாத்தியா… ரெண்டு நிமிஷம் பொறு… நெய் ஊத்தப்பம் வரப்போவுது பாரு…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.