கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“யெஸ்… யெஸ்… சொல்லுங்க சங்கர்… ஹவ் ஆர் யூ?”

“நல்லாருக்கேன்… சுகா; உன் அத்தானோட மேரேஜ்ல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா…” சங்கரின் குரலில் உற்சாகமில்லை.

“எந்த கொறையும் இல்லாம கல்யணம் முடிஞ்சுது… நீங்க இன்னைக்கு டின்னருக்கு வர்றீங்தானே?”

“இப்ப நீ எங்கேருக்கே சுகன்யா?”

“மாம்பலத்துலே, ஃபங்கஷன் நடக்கற இடத்துலேதான் இருக்கேன். நாளைக்கு நைட் டெல்லிக்குப் போறேன். காலையில உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்.”

“ம்ம்ம்.. சாரி சுகன்யா… இன்னைக்கு டின்னருக்கு எங்களால வரமுடியாது….
“ சங்கரின் குரலில் சிறிது கலக்கமும், பதட்டமும் இருப்பது போல் அவளுக்குப்பட்டது.

“என்னாச்சு.. ஏன்…? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க… சங்கர்…” சுகன்யா பரபரப்படைந்தாள்.

“வேணிக்கு உடம்பு சரியில்லே… இடுப்பு வலி ஸ்டார்ட் ஆயிடுச்சி… இது அந்த பெயின்தான்னு சொன்னா; இப்பத்தான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணேன்… நார்மல் டெலிவரி ஆகுமான்னு தெரியலே… சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்னு டாக்டர் சொல்றாங்க;”

“இதுக்கு ஏன் பயப்படணும்…?”

“சுகன்யா… எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு…”

“இந்த நேரத்துல நீங்கதானே அவளுக்குத் தைரியம் சொல்லணும்… அதை விட்டுட்டு கொழந்தை மாதிரி கலங்கறீங்க..!”

“அப்பாவும் அம்மாவும் பெங்களூர் போயிருக்காங்க… நாளைக்கு காலையில வர்றாங்க…”

“இப்ப அவ கூட லேடீஸ் யார் இருக்கறது?”

“நம்ம பக்கத்து வீட்டம்மா இருக்காங்க… ராத்திரிக்கு அவங்க திரும்பி போகணுமில்லே…”

“சரி…”

“ஆஸ்பத்திரியிலே எல்லாத்தையும் நாங்க கவனிச்சுக்கறோம் அப்படீங்கறாங்க… ஆனாலும் வேணி… உன்னை கொஞ்சம் கூப்பிடுங்கறா… உங்க வீட்டு பங்கஷனை விட்டுட்டு உன்னால எப்படி வரமுடியும்ன்னேன்?”

“சங்கர்.. என்ன பேசறீங்க நீங்க…? டின்னரை விடுங்க… நான் இல்லேன்னா அது நடக்காதா? அது பாட்டுல அது நடக்கும்… எந்த ஹாஸ்பிட்டலே வேணி இருக்கா? மொதல்லே அதைச் சொல்லுங்க…”

“என் வீட்டுக்கு பக்கத்துலேதான்.. உனக்கு ஞாபகம் இருக்கா… செல்வாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப அவர் இருந்தாரே அதே ஹாஸ்பெட்டல்தான்…”

“டோண்ட் வொர்ரீ… ட்வ்வென்டி மினிட்ஸ்லே நான் வந்துடறேன்.. வேற ஏதாவது வேணுமா… சொல்லுங்க… வர்ற வழியிலே வாங்கிட்டு வந்துடறேன்…”

“ஓண்ணும் வேண்டாம்… வேணியோட அம்மாவும் சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க… விடியறதுக்குள்ள வந்து சேர்ந்துடுவாங்க.. இப்போதைக்கு அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்… ஒரு மாரல் சப்போர்ட் எனக்கு வேணுங்கறா… அவ்வளவுதான்….”

“ராத்திரி பூரா வேணியோட நான் இருக்கேன்… நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க…” சுகன்யா எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். போகவேண்டிய இடத்தைச்சொல்லி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

* * * * *

“வந்துட்டியாடீ சுகா.. ரொம்ப தேங்ஸ்டீ… உன்னைப் பாத்ததும் எனக்கு நிம்மதியா இருக்குடீ” சுகன்யாவின் கைகளை பற்றி இறுக்கினாள் வேணி.

“வேணி.. உரல்லே தலையை விட்டுட்டே.. உலக்கைக்கு பயந்தா முடியுமாடீ?” வேணியின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

“வலி உயிர் போவுதுடி … உனக்கு கிண்டலா இருக்கா?” சுகன்யாவின் இடுப்பைக் கிள்ளினாள் வேணி.

“சாரி டியர்.. தமாஷுக்கு சொன்னேன்..”

“நான் பயப்படலேடி.. அதுதான் ரொம்ப பயப்படுது… உன்னை கூப்பிடறேன்னு சொன்னதே அதுதான்… அதும் மூஞ்சைப்பாத்தேல்ல…
“வேணீ ரொம்ப வலிக்குதாம்மா..?’ இனிமே உன்னை நான் தொடவே மாட்டேன்னு அழுவுது… சிஸ்டருங்க வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கறாங்க.. என் மானத்தை வாங்காதே… வெளியிலே போன்னு அதுங்கிட்ட கத்திட்டேன்…” அத்தனை வேதனையிலும் தன் கணவனை நினைத்து பெருமையுடன் சிரித்தாள் வேணி.

“பிரசவ வைராக்கியம் பொம்பளைக்குத்தான்னு என் பாட்டி சொன்னாங்க.. இங்கே கதை தலை கீழா இருக்கு..” வேணியின் பறக்கும் தலைமுடியை அவள் காதுக்குப்பின்னால் தள்ளினாள்.

“எனக்கு வைராக்கியம்ல்லாம் இல்லடீ.. எத்தனை வலிச்சாலும் பொறுத்துக்குவேன்.. எனக்கு ஒண்ணு இல்லே; நாலு குழந்தை வேணும்டீ…” வேணி தன் இடது கண்ணை சிமிட்டினாள்.

“ஒண்ணைப் பெத்தேன்.. அதுக்கு ஒரு கல்யாணத்தை ஒழுங்காப்பண்ண முடியலேன்னு… என் அம்மா சலிச்சிக்கிறாங்க..!” சுகன்யாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

“உங்க ரெண்டு பேரோட லடாய் இன்னும் முடியலியாடீ… யம்மா…” வேணி தன் கேள்வியை முடிக்க முடியாமல் முனகினாள்.

“என்னடீ வேணி..?”

“சுகா… என்னமோ நழுவுற மாதிரி இருக்குடி… சீக்கிரமா டாக்டரை கூப்புடுடீ…யம்ம்ம்மா…” வேணி கூவினாள்.

சங்கர் கையை பிசைந்து கொண்டு அறையின் உள் ஓடிவந்தான். மிஸ்டர்… நீங்க கொஞ்சம் வெளியிலே ஹால்லே உக்காருங்க… முழுசாக இருபது கூட முடியாத ஒரு வெள்ளை கவுன் அணிந்திருந்த இளசு சங்கரை வெளியில் துரத்தியது. வேணி லேபர் ரூமுக்கு உடனடியாக மாற்றப்பட்டாள். லாபியில் இரும்பு சேர்கள் காலியாக கிடக்க சங்கர் தன் கண்களை மூடிக்கொண்டு ஒற்றைக்காலில் சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.