கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“குடியா முழுகிப்போச்சு… கொஞ்சம்கூட அடக்கம்ங்கறதே இல்லை உனக்கு… ஏன்டீ இப்படி குதிச்சிக்கிட்டு வர்றே?” சோஃபாவில் தன் கணவன் எதிரில் அமர்ந்திருந்த சுந்தரி திடுக்கிட்டு எழுந்தாள்.

“எல்லாம் என் தலையெழுத்து… நீ கொஞ்சம் நேரம் சும்மா இரும்மா…” ஹால் சுவரில் டீவிக்கு பக்கத்தில், ஆணியில் மாட்டியிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு தெருவை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடினாள் சுகன்யா.

“இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சா… அதுக்குள்ள கார் சாவியை எடுத்துக்கிட்டு எங்கேயோ போறாளே?” சுந்தரி குழம்ப ஆரம்பித்தாள்.

“என்னங்க… நான் சொல்றது உங்க காதுலேயே விழலையா?” அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்த குமாரசுவாமி தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். வேகமாக ஓடும் தன் பெண்ணின் பின்னால் அவரும் எழுந்து ஓட ஆரம்பித்தார். அவர் தோட்டத்தில் இறங்கியபோது, கார் தெருக்கோடியில் திரும்பி கண் பார்வையில் இருந்து மறைந்தது.

மேல் மூச்சு வாங்க கார் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தவர், தன் தலையை ஒரு முறை திருப்தியுடன் ஆட்டிக்கொண்டார். பின் நிதானமாக காம்பவுண்ட் கேட்டை மூடிக்கொண்டு, நீளமான ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குள் திரும்பவும் வந்தார் குமாரசுவாமி.

“என்னங்க… நான் பதறிப்போய் நிக்கறேன்… நீங்க என்னமோ பெருமாள் கோவில் மாடு மாதிரி சாவகாசமா தலையை ஆட்டிக்கிட்டு வர்றீங்க?” போர்வைகளை உதறி மடித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்த தன் கணவரின் தோளை உலுக்கினாள் சுந்தரி.

“ஏன்டீ… என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ? இந்த வயசுல வேகமா போற கார் பின்னால என்னால ஓடவா முடியும்?” தன் தோளை உலுக்கியவள் இடுப்பில் இரு கரங்களையும் தவழவிட்டு சுந்தரியைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் குமார்.

“எல்லாம் நீங்க அவளுக்குக்குடுக்கற செல்லம்…. அவ யாரையும் மதிக்கறதே இல்லே.. அதுவும் நான் கேக்கற கேள்விக்கு ஒழுங்கா எப்பவுமே பதில் சொல்றதே இல்லை; பத்தாக்குறைக்கு தாத்தா செல்லம் வேற அவளுக்கு நாளுக்கு நாள் அதிகமாயிகிட்டே போவுது…. காலங்காத்தால வயித்துக்கு எதுவும் திங்கமாக்கூட எங்கப்போறான்னு தெரியலையே?” தன் இடுப்பிலிருக்கும் அவர் கைகளை விலக்க முயற்சித்தாள் சுந்தரி. அவள் திமிற திமிற குமாரின் பிடியும், விரல்களின் அழுத்தமும் அவள் இடுப்புச்சதையில் அதிகமானது.

“விடுங்களேன்… விடிஞ்சதும் விடியாததுமா இது என்ன அழிச்சாட்டியம்?”

“என் பொண்டாட்டி இடுப்புல நான் கையைப்போட்டா அதுக்கு பேரு அழிச்சாட்டியமாடீ?” சட்டென அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி தன்னுடன் இறுக்கிக்கொண்டார் குமார்.

“வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கா.. நம்பளைப் பெத்தவங்க நம்மகூட வீட்டுல இருக்காங்க… உங்களுக்கு நேரம் காலம் எதுவுமே கிடையாதா…?” உதட்டில் வார்த்தைகள் சூடாக வந்தாலும், புருஷனின் மார்பை தன் மார்பால் மென்மையாக உரசிக்கொண்டே, தன் உதடுகளின் ஈரத்தை அவர் கன்னத்தில் இழைத்தாள் சுந்தரி.

“குழந்தை இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாளேங்கற ஏக்கத்துலத்தான்டீ உன்னை நான் உரசறேன்…” குமாரின் குரல் தழைந்தது. சுந்தரியின் இடுப்பில் இருந்த அவருடைய கரம் மெல்ல மெல்ல அவள் இடது மார்பை நோக்கி மேலேறத் தொடங்கியது.

“ராத்திரில்லாம் நான் கிட்ட வந்து கட்டிப்புடிச்சதுகூட தெரியாமா, காலை கெளப்பிக்கிட்டு தூங்கினீங்க..? கொழந்தை மேல இருக்கற பாசத்தை விடிஞ்சதும்தான் பொண்டாட்டி மேல காட்டுவீங்களா?” சுந்தரி குமாரை நெருங்கினாள். தன் இடதுமார்பின் காம்பை ரவிக்கையோடு சேர்த்து வருடிய அவர் கரத்தை தன் இடது கரத்தால் அங்கேயே அசையவிடாமல் நிறுத்தி இறுக்கமாக அழுத்தினாள்.

‘ஏன்டீ நீயும் அவ வயசுல என்னைக் காதலிச்சவதானே? உன் பொண்ணோட மனசு உனக்குப் புரியலியா? என்னைப் பாக்கப்போனா, உன் காலை வெட்டுவேன்னு உன் அம்மா சொன்னதை நீ கேட்டியா?”

“ஆமாம்.. அதுக்கென்ன இப்ப…? நான் என் ஆத்தா சொன்னதை சொன்னதை கேக்கலேன்னா… நான் சொல்றதை அவளும் கேக்கக்கூடாதா?” கண்களில் மிதமிஞ்சிய ஆசையுடன் தன் கணவனை நோக்கினாள் சுந்தரி. கணவனின் தடித்த கீழுதட்டை மெல்லக்கடித்தாள்.

“உன் பொண்ணு வேற எங்கடீ போயிடுவா… மிஞ்சி மிஞ்சிப் போனா, நமக்கு வரப்போற அந்த அரை லூசு மருமவனைப் பாக்கத்தான் அவ ஓடிகிட்டு இருப்பா….”

“அந்தக்கூறு கெட்டவனைப்பத்தி எங்கிட்ட எதுவும் நீங்க பேசாதீங்க்க்..” சுந்தரி தன் வார்த்தையை முடிக்குமுன் அவள் இதழ்கள், குமாரின் உதடுகளுக்குள் முழுமையாக சிறைப்பட்டுவிட்டன. அவளுடைய இடது மார்பு கசங்கிக்கொண்டிருக்க, கண்களுக்குப் பின்னால் அவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது.

“அந்த பையனை எதுக்குடீ மல்லு குடுக்கறே? நேத்து அய்யோன்னு டின்னர் ஹால்லே தனியா உக்காந்து இருந்தவனை பாக்கறதுக்கே எனக்கு பாவமா இருந்திச்சிடீ… காதலிக்கற பொம்பளையோ, கட்டிக்கிட்ட பொண்டாட்டியோ கொஞ்சம் பாக்கறமாதிரி கண்ணுக்கு நிறைவா இருந்துட்டா… பசங்களுக்கே மனசுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான்டீ செய்யும்…” குமார் அவளைத் தன் மடியில் தள்ளிக்கொண்டார்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.