கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“சுகு… ஐ லவ் யூம்மா… பழையபடி என் கிட்ட நீ ஆசையோட பேசமாட்டியா…?” செல்வாவின் குரல் உடைந்து போயிருந்தது.
என் செல்வா அழறானா என்ன? குரல் கலங்கின மாதிரி இருக்கே? மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தாள் சுகன்யா. டைனிங் ஹாலில், காலையில் செல்வா தன் மணிக்கட்டைப் வலிமையுடன் இறுக்கிப்பற்றியது அவள் நினைவுக்கு வந்தது. அவன் கையின் வலிமையை நினைத்தபோது உடல் சிலிர்த்தது அவளுக்கு. இன்னமும் இலேசாக சிவந்திருந்த தன் புறங்கையை ஒரு முறைப் பார்த்தாள். அவன் தனக்கு ஆசையுடன் போட்ட மோதிரத்தை ஒரு முத்தமிட்டாள். செல்வா தொட்ட தன் புறங்கையை கன்னத்தில் ஒற்றிக்கொண்டு மனசுக்குள் இலேசாகக் கிளுகிளுத்தாள்

“நீங்க என்ன சொல்றீங்க… நீங்க… என்னை லவ் பண்றீங்களா?” சுகன்யா அவனை சீண்டி விளையாட விரும்பினாள்.

“சுகு… ஐ லவ் யூடாச்செல்லம்…”

“நிஜமாவா?”

“சத்தியமா சொல்றேன் சுகன்யா… ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…” சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டு அவன் சொன்னதை ரசித்தாள்.

“உங்களை நான் நம்பலாமா?”

“சுகன்யா… உனக்கு என் மேல இன்னமும் கோவம் மீதி இருந்தா… நேரா வந்து என்னை நாலு அடி அடிச்சுடு… ஆனா இப்படில்லாம் பேசி என் மனசை புண்படுத்தாதே…”

“நான் எதுக்கு உங்களை அடிக்கணும்?”

“சரி… என் மேல உனக்கு கோவமில்லேன்னும் தெரியும்… எனக்கு உன்னைப் பாத்தே ஆகணும்… எனக்கு உங்கிட்ட பேசியே ஆகணும்… ஒரு அஞ்சு நிமிஷம் என்னை வந்து பாத்துட்டுப் போடீ…” செல்வாவின் குரலில் அவள் மேல் அவனுக்கிருந்த உரிமை கொப்பளித்துக்கொண்டு வந்தது.

“நான் எப்ப சொன்னேன்? உங்க மேல இருக்கற கோவம் எனக்குத் தீந்து போச்சுன்னு?”

“சரிம்மா… உனக்கு என் மேல கோவம் இருக்கு… ஆனா உனக்கு கோவம் தீந்து போச்சுன்னு நான் நெனைச்சேன்… அதுவும் என் தப்புதான்…”

“ஏன் அப்படி நினைச்சீங்க நீங்க?”

“என் அப்பாவை மாமா… மாமான்னு கூப்பிட்டு, அவர் திக்குமுக்காடி போற அளவுக்கு அவரை நீ உபசரிச்சே… காலையில உன் கையை பிடிச்சேன்… நீ எதுவுமே சொல்லலே… நான் கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம என் கூடவே வந்தே… நான் நல்லாயிருக்கேனான்னு சிரிச்சுக்கிட்டே விசாரிச்சே?”

“ஹால்லே நாலு பேரு முன்னாடி நீங்க என் கையை பிடிச்சீங்க… நான் சட்டுன்னு உங்க கையை உதறிட்டு போயிருந்தா அங்கே இருந்த முகம் தெரியாத நாலு பேரு என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க… உங்களையும் தப்பா நினைச்சிருப்பாங்க…”

“சுகன்யா… எதையும் யோசிக்காம, புத்திக்கெட்டுப்போய், உன்னை நான் அழவெச்சிட்டேன்… அதுக்காக பதிலுக்கு பதில் இப்ப என்னை நீ அழவெக்காதே… ப்ளீஸ்…”

“விளையாட்டுக்குக்கூட உங்களை அழவெக்கறதுக்கு, உங்ககிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னு எனக்குத் தெரியும்… ஆயிரம்தான் இருந்தாலும்… நீங்க என் ஃப்ரெண்டு மீனாவோட அண்ணன். சீனு உங்களோட ஃப்ரெண்ட்… அவரும் என்னோட ஃப்ரெண்டுதான். அதனாலத்தான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு ஒரு மரியாதைக்குக் கேட்டேன்…”

“சரி… நீ என்னைவிட புத்திசாலி.. நான் வடிகட்டின மடையன்னு ஒத்துக்கறேன்… இந்த மடையனை நீ மன்னிச்சுடு.. இப்ப உன்னை நான் தனிமையிலே சந்திக்கணும்…”

“தனியா வந்தா திரும்பவும் கண்டதைப் பேசி என்னை நீங்க அழ வெக்க மாட்டீங்களே?”

“சுகன்யா… ஐ பிராமிஸ்… இனிமே எந்த காரணத்துக்காகவும் என்னால உன் கண்ணுல கண்ணீரே வராது…”

“சரி.. உங்களை நான் மீட் பண்றேன். ஆனா…. இன்னைக்கு வேண்டாம்… வர்ற சனிக்கிழமையன்னைக்கு நான் டில்லிக்கு திரும்பிப்போறேன்… அன்னைக்கு காலையில பாக்கலாம்.”

“சுகன்யா… உன் விளையாட்டெல்லாம் போதும்… இப்ப நீ வரப்போறியா இல்லையா?” இதுவரை அவளிடம் கெஞ்சலாக பேசிக்கொண்டிருந்தவன், செல்வா நறுக்கென பேசத்தொடங்கினான்.

“வரல்லேன்னா என்னப் பண்ணுவீங்க…?” சுகன்யா கேலியாக சிரிப்பதாக உணர்ந்தான் அவன்.

“நீ இருக்கற இடத்துக்கே வந்து உன்னை என்னால தூக்கிட்டுப்போக முடியும்…” செல்வாவின் குரல் சற்றே உயர்ந்தது.

“வெரிகுட் மிஸ்டர் செல்வா… இப்ப நான் ஹால்லேதான் இருக்கேன்… உங்களால முடிஞ்சா… சட்டுன்னு வந்து என்னை கொஞ்சம் தூக்கித்தான் பாருங்களேன்…” களுக்கென சிரித்த சுகன்யா காலை கட் பண்ணிணாள்.

அயாம் சாரிடா செல்வா… உன்னை அழவெக்கணுங்கறது என் எண்ணம் இல்லேடா… செல்வா சீக்கிரம் வாடா… நம்மக் குடும்பத்துல இருக்கற எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க… எப்படி இருக்கே சுகன்யான்னு எல்லார் முன்னாடியும் ஒரே ஒரு தரம் கேளுடா…

எல்லோருமே உங்கிட்டேருந்து இதைத்தான் எதிர்பாக்கறாங்க… அப்படியே எங்க கல்யாண தேதியையும் ஃபிக்ஸ் பண்ணுங்கன்னு அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லுடா… எங்கம்மாவுக்கு உன் மேல இருக்கற கோபமும் தீர்ந்து போயிடும்… சுகன்யா மனதுக்குள் பித்தானாள். கலங்கிய தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.