கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“பின்னே… தெரியாத்தனமா புத்திகெட்டுப்போய் ஒருத்தனை என் மனசுக்குள்ள ஆசைப்பட்டாலும் பட்டுட்டேன்; முன்னேயும் போக முடியலே… பின்னாலயும் போகமுடியலே… இனி நான் காலம் பூரா இப்படியே அழுதுதான் தீரணும்…”

“சுகா… என்னடீ ஆச்சு…” சுந்தரி விருட்டென எழுந்து அவள் பக்கத்தில் வந்து மகளின் தலையை வருட ஆரம்பித்தவள், தன் மனதில் எழுந்த பதைப்பை முகத்தில் காட்டவில்லையே தவிர, உள்ளுக்குள் இலேசாக அதிர்ந்துதான் போனாள் அவள்.

“நீ செல்வாவைப் பாக்காதேங்கறே… அவன்கிட்ட பேசாதேங்கறே… அவன் என்னடான்னா… காலங்காத்தால போன் பண்ணி, பத்து நிமிஷத்துலே, என்னை நீ பாக்க வரலேன்னா கடல்லே விழுந்து செத்துடுவேன்னு என் உயிரை எடுக்கறான்..”

“கண்ணு.. என்னம்மா பேசறே நீ? நீ எதுக்காக யாருக்காக காலம் பூரா அழுவணும்?” சுந்தரி புருவத்தை உயர்த்தி தன் கீழ் உதட்டைக் கடித்தாள்.

“நான் யார் பேச்சைக் கேக்கறது…? உன் பேச்சை கேக்கவா? இல்லே அவன் பேச்சைக் கேக்கவா? எல்லாம் என் தலையெழுத்து…” தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்ட சுகன்யாவின் உடல் குலுங்கியது.

“சிவ.. சிவா.. என்னது அவன் சாகறேன்னு சொன்னானா?” சிவதாணு மெல்ல முணுமுணுத்தார்.

“ஆமாம் தாத்தா… நேத்து ராத்திரி பூரா செல்வா அவன் வீட்டுக்கே போவலே… டின்னருக்கு வந்தவன் அங்கேயும் சாப்பிடலை… கொலைப்பட்டினியா பீச்சுல கிடந்திருக்கான்…”

“ப்ச்ச்… அப்றம்…” குமார் தன் பெண்ணின் முதுகை வருடினார்.

“செல்வா ஒரு லூசுப்பா… வாயால உளறுவானே தவிர அவன் ஒரு கோழைப்பா… மனசு நொந்து போய் அவனுக்கு இருக்கற வெறுப்புல, எக்குத்தப்பா அவன் எதாவது பண்ணித் தொலைச்சுடப் போறானேன்னு ஓட்டமா ஓடி, பீச்சுலேருந்து அவனை இழுத்துக்கிட்டுப்போய், அவன் வீட்டுல விட்டதும்தான் எனக்கு நிம்மதி ஆச்சு.”

“சிவ சிவா…” சிவதாணு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

“எங்ககூட சாப்பிடும்மான்னாரு நடராஜன் மாமா.. மீனாவும் ஓரே பிடிவாதம் பிடிச்சா.. மாட்டேன்னா சொல்லமுடியும் நான்.. சரின்னு அங்கேயே சாப்பிட்டுட்டேன்…”

“ம்ம்ம்..”

“உங்கப்பாவுக்கு வடைகறின்னா ரொம்ப புடிக்கும்… கொஞ்சம் எடுத்துட்டுப்போடீன்னு மல்லிகா அத்தை ஆசையா குடுத்ததை எங்கேயாவது விசிறியடிச்சுட்டா வரமுடியும்…?” சுகன்யா தன் வழக்கப்படி கண்ணைக் கசக்கிக்கொண்டே தன் தாயிடம் கூவ ஆரம்பித்தாள்.

“செல்வா வேற என்னடீ சொன்னான்..” இப்போது பெற்றவள் பெண்னை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு பெண்ணின் கூந்தலைப் பிரித்து கோத ஆரம்பித்தாள்.

“என்னை விடு நீ… எங்கிட்டே பேசாதே நீ?” தாயின் மடியில் கிடந்த பெண் கோபத்தில் முரண்டியது.

“சரிடீ… உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து…”

“நீ சும்மா சும்மா என்னைத் திட்டறதை நிறுத்து… நானும் நிறுத்திக்கிறேன்..”

“சாரிடாச் செல்லம்… நீயே என் கிட்டே கோச்சிக்கிட்டா நான் எங்கடீ போவேன்? உன் தலை ஈரமா இருக்கு… தலை முழுகினா ஒழுங்கா உலர வெச்சுக்க வேணாமா?” பெண் மிஞ்சியதும், தான் பெற்றதை தாய் கொஞ்ச ஆரம்பித்தாள்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.