கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணை மட்டும் பண்ணு; நான் சொன்ன மாதிரி அவளை மாடிக்குப் அழைச்சிக்கிட்டு போய்….”

“அழைச்சிட்டு போய் ஒரு கிஸ் அடிக்கவா?”

“அலையாதடா நாயே…”

“என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்கமுடியலே… எனக்கு ஒரு வழி சொல்லிட்டு டில்லிக்கு போ.. இல்லேன்னா.. நான் செத்துடுவேன்னு ஒரு பிட்டைப் போடு…”

“ம்ம்ம்…”

“பிலிம் காட்டிக்கிட்டு இருக்கும் போதே, மெதுவா உன் ஆளை ஒரசிப்பாரு… பத்திக்கற மாதிரி தெரிஞ்சா. பட்டுன்னு கட்டிபுடிச்சி.. சட்டுன்னு பச்சக் பச்சக்குன்னு உதட்டுலேயே நாலு கிஸ் அடிச்சுடு… எந்த பொண்ணும் இந்தக் கட்டிபுடி வைத்தியத்துல நார்மல் ஆயிடணும்…”

“ஆயிடுவாளா?”

“உன் கட்டத்துல என்ன இருக்கோ? எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்…? நானும் தான் அவஸ்தை படறேன்….”

“என்னடா சொல்றே?”

“ஹேங்க்… உன் தங்கச்சியும் ஒரு பொண்ணுதான்; அவளை புரிஞ்சுக்கறதும் கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்றேன். எப்ப சிரிப்பா.. எப்ப எட்டி ஒதைப்பான்னு ஒரு மண்ணும் புரியலே…”

“மீனாவுக்கும் எங்க அம்மாவுக்கு வர்ற மாதிரி சட்டு சட்டுன்னு கோவம் வருமே எப்படிடா சமாளிக்கறே அவளை…?

“மச்சான்… வாழ்க்கையில அப்பப்ப கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆவணும். எல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழின்னு போயிகிட்டே இருக்கணும்…”

“நம்ம வேலாயுதமும் இதைத்தாண்டா சொன்னான்.”

“ வேறென்ன சொல்லுவான்; நம்ம சிஸ்யன் தானே அவன்?” சீனு தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“சாமீ… இப்ப எனக்கு சிம்பிளா ஒரு வழி சொல்லுங்களேன்? செல்வா தன் நண்பனை விரக்தியாகப் பார்த்தான்.

“உன் பிகரை கட்டிப்புடிக்கறதுக்கு முன்னாடி உன் குலதெய்வத்தை ஒரு தரம் வேண்டிக்கோ… எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, மாரியாத்தா கோவுல்லே கூழ் ஊத்தி… கொழுக்கட்டை படைக்கிறேன்னு… மஞ்சாத்துணியிலே ஒரு ரூவா முடிஞ்சி வெய்டா… கொஞ்சமாவா அழும்பு பண்ணியிருக்கே நீ?”

“டேய்… என் தலையெழுத்து உன் எதிர்லே கைகட்டிக்கிட்டு உன் பேச்சையெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது…”

“மவனே… கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி, இந்த பக்கம் அந்த பக்கம் ஒரு தரம் பாத்துகோ… நம்ம எதிர்வீட்டு ராமசாமி மாதிரி பண்டாரப்பய எவனாவது அங்கே இங்கே நின்னுக்கிட்டு இருக்கப்போறானுங்க… அய்யோ அம்மான்னு கூவிடுவானுங்க… அப்புறம் ஊர் தெரியாத ஊர்ல இது ஒரு பெரிய வம்பாயிடப்போவுது…”

புரோகிதர்கள் மந்திரம் ஓத, பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் தங்களைச் சுற்றி நின்று மனமார வாழ்த்த, பெரியோர்கள் குறித்திருந்த நல்ல நேரத்தில், அனுராதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சம்பத்குமாரன்.

மாங்கல்யதாரணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியினர், குடும்பத்தில் மூத்தவர்களான சிவதாணு கனகா தம்பதியினரை முதலில் நமஸ்கரித்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள். நல்லசிவமும், ராணியும், சந்தோஷத்தில் கண்கள் கலங்க, தங்களின் ஓரே வாரிசின் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தவர்களுக்கு, நன்றிகூறி வழியணுப்பிக் கொண்டிருந்தார்கள்.

* * * * *

அனுவுக்கும், சம்பத்துக்கும் கல்யாண அன்பளிப்பாக வந்த பொருட்களை, ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள் சுகன்யா. உடன் தன்னுடைய துணிகளையும் சூட்கேஸில் அடுக்கியவாறு தன் அத்தை ராணியுடன் பேசிக்கொண்டிருந்தாள். சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் புதுமணத் தம்பதிகளுடன் அவளும் சுவாமிமலைக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்ததும், வரும் கால் செல்வாவிடமிருந்து இருக்குமோ என்ற உள்ளுணர்வினால், சுற்றுமுற்றும் பார்த்தாள். தானிருந்த அறையை விட்டு வெளியில் வந்தாள். நினைத்தது போல் செல்வாதான் அவளை அழைத்தான். சுகன்யா உதடுகளில் மெல்லிய சிரிப்புடன் கால் பட்டனை அழுத்தினாள்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.