கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“தள்ளிட்டு போயி…” செல்வா மெல்லியகுரலில் இழுத்தான்.

“டேய்… இப்ப நீ என்னை வெறுப்பேத்தறே? சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

“மாப்ளே என் நேரம் சரியில்லடா.. புது எடத்துல என்னை ஒதை பட வெக்காதேடா… நான் எது பண்ணாலும் அது தப்பாயிடுதுடா… சீரியஸா கேக்கறேண்டா…” அதற்கு மேல் ஏதாவது சொன்னால் செல்வா அழுதுவிடுவான் என சீனுவுக்குத் தோன்றியது.

“எல்லாம் என் தலையெழுத்துடா… உனக்கு எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்க வேண்டியதா இருக்கு…” சீனு துளிர் வெற்றிலையை, வாசனைப்பாக்குடன் மெல்ல ஆரம்பித்தான். ஹேவ்… என நீளமாக ஏப்பம் விட்டான்.

“மாப்ளே… கோச்சிக்காதடா…” செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான்.

“உன் கண்ணால பாத்தேல்லா… உன் அப்பாவை சுகன்யா எவ்வளவு பாசமா உபசரிச்சா…? அதான்டா உனக்கும் அவளுக்கும் இருக்கற வித்தியாசம்…”

“ம்ம்ம்…”

“அவ உன் பக்கத்துலே ஆசையா வந்து நின்னாளே, நாயே… நீ அவ இடுப்பைத்தானே மொறைச்சுக்கிட்டு இருந்தே… நாலு மாசம், உன்னை நெனைச்சு நெனைச்சு தனியா உருகிகிட்டு இருந்தாளே, ஒரு தரமாவது நிமிர்ந்து நேரா அவ மொகத்தை பாத்தியாடா…? அவ கண்ணுல இருந்த ஏக்கத்தைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணியா?”

“மாப்ளே…?”

“மீனா, நாலு நாளைக்கு ஒருதரம்
“என் அண்ணனை வெறுத்துடாதே… வெறுத்துடாதேன்னு’ அவகிட்ட அழுத கதையெல்லாம் உனக்கு என்னடாத் தெரியும்?”

“சுகன்யா… இளைச்சுப்போயிருக்கியே… ஒழுங்கா சாப்பிடறது இல்லையான்னு ஒரு வார்த்தை ஆதரவா கேட்டியாடா? அந்த மாதிரி ஒரு லுக்காவது வுட்டியாடா?”

“நான் ஒரு முண்டம்டா… ஒத்துக்கறேன்…”

“உன்னைப்பாத்ததும், நீ மெலிஞ்சிப் போயிருக்கேன்னு ஒரு அதிர்ச்சி; ஒரு பரபரப்பு அவ கண்ணுல வந்திச்சே… அதைக்கூட கவனிக்கலே நீ? கம்மினாட்டி… ஒரு பொம்பளை மனசை உனக்கு புரிஞ்சுக்கத் தெரியலே; உனக்குல்லாம் எதுக்குடா காதல்…?”

“சாரிடா மாப்ளே… இந்த நேரத்துல என்னை நீயும் வெறுப்பேத்தாதடா… ப்ளீஸ்…”

“அவ கையை புடிச்சியே… அவ விரலைப்பாத்தியா?”

“ஹூகூம்… இல்லைடா மாப்ளே?””

“உன் தோள் உரச நின்னாளே… அவ கழுத்தைப் பாத்தியா?”

“மாப்ளே.. என்னடா சொல்றே?”

“நிச்சயதார்த்ததுலே நீ போட்டியே அந்தச்செயின் அவ கழுத்துலே இருந்திச்சின்னு சொல்றேன்..”

“சாரிடா… எனக்கு இருந்த பதட்டத்துலே அதை நான் கவனிக்கலேடா…”

“அவ விரல்லே நீ போட்ட மோதிரம் இருந்திச்சிடா…. அவ உன்னை எப்பவும் தன் மனசுக்குள்ளவே வெச்சிருக்கா… அதனுடைய அடையாளம்தான், அவ கழுத்துலே, அவ விரல்லே இருந்திச்சி… அவ உன்னை தூக்கி எறியவேயில்லே… நீதான் பெரிய மசுரு மாதிரி அவ போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சே…”

“தப்புத்தாண்டா…”

“மச்சான்…. சுகன்யாவுக்கு உன் மேல எந்த கோவமும் இல்லே… இது எனக்கு நல்லாத் தெரியும். சும்மாங்காட்டியும் முறுக்கறா அவ… என்கிட்ட வம்பு பண்ணுடான்னு சொல்லாம சொல்லி உனக்கு அவ பூச்சிக்காட்டறா… நீ அவளை அழ வெச்சீல்லா… அதுக்கு உன்னை பதிலுக்கு அழவெக்கணும்ன்னு அவ நினைச்சா எவ்வளவு வேணா அழவெச்சிருக்கலாம்… உன்னை இந்த அளவோட விட்டாளே.. அதை நினைச்சு சந்தோஷப்படுடா..”

“அப்படித்தாண்டா தோணுது…”

“என்னத் தோணுது? நான் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறே?

“மாப்ளே… எந்த பக்கம் போனாலும் கேட்டு போடறீயேடா…?”

“அந்த அளவுக்கு உன்னை அவ லவ் பண்றாடா… இப்ப அவளுக்குத் தேவை உன் உண்மையான அன்புடா… உன் உண்மையான அக்கறைடா…”

“மாப்ளே… அவளுக்காக நான் எது வேணா செய்யத் தயார்டா…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.