கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“கிடக்கறீங்களா?”

“ஆமாம்டீ… இங்கதான் படுத்துக்கிடக்கிறேன்..” அவன் குரல் சூடாக வந்தது.

“சரி நேத்து நீங்க சாப்பிட்டீங்களா?”

“இல்லே…”

“ஏன்…?”

“நான் உன்கூட சாப்பிடலாம்ன்னு இருந்தேன்… டின்னருக்கு நீ ஏன் வரலே?” அவனிடமிருந்து எரிச்சலுடன் கேள்வி எழுந்தது.

“செல்வா நான் ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேம்பா..”

“பொய் சொல்றேடீ நீ… உன்னை நான் அழவெச்சதுக்கு பதிலுக்குப் பதில் என்னை அழவெக்கணுங்கறதுதான் உன் எண்ணம்…” செல்வா பசியில் வாயில் வந்ததை உளறினான். உளறியவன் தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டான்.

“சத்தியமா இல்லடா செல்வா..”

இன்னைக்கு நான் அவன்கிட்டா தப்பா எதுவும் பேசிடக்கூடாது. தன் இடதுகைவிரல்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். மறு நொடி தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் சுகன்யா.

“நான் உன்னைப்பாக்கறதுக்காக துடியா துடிச்சிக்கிட்டு அங்கே டின்னர் ஹால்லே உக்காந்து இருந்தேன்; என்னை விட அப்படி என்னடீ உனக்கு முக்கியமான வேலை?”

“அய்யோ… ஏன் இப்படி விஷயம் தெரியாம பைத்தியம் மாதிரி என் மனசை நோகடிக்கிறியேடா?” அவசரமாக பேசிவிட்டு தன் நாக்கை அழுத்திக் கடித்துக்கொண்டாள் அவள்.

“ஆமாம்டீ… நான் இப்ப அரைப்பைத்தியம்தான்… நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க.. நான் முழுப்பைத்தியம் ஆயிட்டா அதுக்கு காரணம் நீயும் உன் ஆசை அம்மாவும்தான்…” செல்வா அடிக்குரலில் கூவத்தொடங்கினான்.

“என்னங்க இது? ராத்திரி பூரா… யார்கிட்டவும் சொல்லாம கொள்ளாம, பீச்சுல, பட்டினியா, கடல் காத்துல இருந்திருக்கீங்க? உங்க உடம்பு என்னத்துக்கு ஆகறது? ஏன் இப்படி எல்லாரையும் தவிக்க விடறீங்கன்னு கேட்டா என்னன்னமோ பேசறீங்களே?”

“நான் படற தவிப்பை நீங்க யாரவது ஒருத்தர் புரிஞ்சுக்கிறீங்களா? இல்லே; நீதான் புரிஞ்சுக்கிட்டியாடீ? நான் தப்பு பண்ணேன்… தப்பு பண்ணேன்னு எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்களே?”

“செல்வா.. ஏன்டா நீ என்னை இப்படில்லாம் வதைக்கறே?”

“நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோம்…. தப்பு என் பேர்லதான்… அதை நான் ஒத்துக்கறேன்… ஆனா நீ என்னை வதைக்கறது போதாதுன்னு… இப்ப உன் அம்மாவும் உன்கூட சேர்ந்துகிட்டு என்னை கொல்றாங்களே? இந்தக்கொடுமையை யார்கிட்ட போய் சொல்லி அழறதுடீ நான்?”

“செல்வா… அவங்க ஏன் உன்னை கொல்லணும்? உன் மனசுல இருக்கறதை நீ என்கிட்ட சொல்லு… பொறுமையா நான் கேட்டுக்கறேன்.”

“ஏன்னா கேக்கறே? நீ சேலைடீ… உங்கம்மா நூலு… இந்த டயலாக்கை சொல்லி உன் அம்மா என்னை வதைக்கறாங்க… இப்ப அந்தக்கதையைப் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமில்லே… உங்கம்மாவை கேட்டுக்கிட்டாடீ நீ என்னை காதலிச்சே? இப்ப ஏன்டீ அவங்க சொல்றதை நீ கேக்கறே?”

“செல்வா… நீ பேசறது கொஞ்சம்கூட சரியில்லே…?”

“சரி என் மனசுல இருக்கறதை கேட்டுக்கறேன்னு சொல்றேல்லா… அப்படின்னா நான் கூப்பிட்டா உடனே ஏன்டீ வரமாட்டேங்கறே?”

“…”

“நேத்து ராத்திரியிலேருந்து உனக்காக இங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன்… அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்கே நீ வரணும்… இல்லே… இந்த கடல்லேயே குதிச்சுடுவேன்…”

“டேய் படுபாவீ.. நீ பீச்சுல உக்காந்துருக்கேன்னு எனக்கு எப்படீடா தெரியும்? ஏண்டா இப்டீல்லாம் உன் வாய்க்கு வந்ததை உளர்றே?” சுகன்யாவும் அவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பதிலுக்கு கூவ ஆரம்பித்தாள்.

“இப்ப நீ வரப்போறியா இல்லையா?”

“சரி நான் வர்றேன்… எங்கே வரணும்?”

“கடைசியா நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோமே அங்க வா… வரும் போது கையோட அந்த மோதிரத்தையும் எடுத்துக்கிட்டு வா?”

“எந்த மோதிரம்?”

“நான் கழட்டிக்குடுத்தனே அந்த மோதிரம்; அது எனக்கு இப்ப வேணும்… திரும்பவும் நீ அதை என் விரல்லே போட்டு விடணும்…” செல்வா ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்தான்.

“நீ கழட்டியாடா குடுத்தே? என் மூஞ்சியிலே விசிறியடிச்சேடா… அது எங்கேயோ மண்ணுல போய் விழுந்திச்சி.. அன்னைக்கு நான் இருந்த நிலைமையிலே அதையா நான் தேடிக்கிட்டு இருந்தேன்?”

“சரி… நீ மொதல்லே கிளம்பி வா… ரெண்டு பேருமா அதை சேர்ந்து தேடலாம்…. இப்ப நான் கரையில நிக்கணுமா? இல்லே கடல்லே இறங்கணுமா? செல்வா சுகன்யாவை மிரட்ட ஆரம்பித்தான்.

“சனியனே அது மாதிரி எதையும் பண்ணித் தொலைச்சுடாதே… அப்புறம் உன் ஆத்தாகாரி மூஞ்சியிலே இந்த ஜென்மத்துலே என்னால முழிக்க முடியாது… நீ எங்கே இருக்கியோ அங்கேயே இரு.. இப்பவே நான் வந்து தொலைக்கறேன்…”

“வாடீ.. என் நாட்டுக்கட்டை.. சீக்கிரமா வாடீ..” செல்வா மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தான்.

“என்னாது… நாட்டுக்கட்டையா?”

“ஒண்ணுமில்லேடீ தங்கம்… நீ நேல வாடீச்செல்லம்.. விலாவரியா சொல்றேன்.” செல்வாவுக்கு பித்தம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது.

“டேய் செல்வா உனக்கு பித்து பிடிச்சு போயிருக்குடா”

“ஆமாம்… உன் மேலதான் நான் பித்தனா இருக்கேன்..”

பாவி… எந்தக்காலத்து கடனோ… இவன்கூட இப்படியெல்லாம் நான் கிடந்து அவஸ்தை படவேண்டியதா இருக்கு… சுகன்யா தன் தலையில் அடித்துக்கொண்டாள். செல்லை அணைத்து இடுப்பில் இருந்த பாக்கெட்டில் செருகிக்கொண்டாள். தடதடவென ஓடி மாடிப்படிகளை இரண்டிரண்டாக தாவி தாவி குதித்திறங்கி ஹாலுக்குள் வந்தாள்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.