கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“சார்… இவாளோட மேரேஜ் டேட் பிக்ஸ் ஆயிடுத்தோ?” சூடாக நெய் ஒழுகும் வெங்காய ஊத்தப்பம் இருவரின் இலையிலும் வந்து விழுந்தது.

“மாமா… கவலையே படாதேள்… இவரோட கல்யாணம் சுவாமிமலையிலத்தான்… மூணு நாள் சாப்பாட்டை நீர்தான் கவனிச்சுகணும்.. ரகு சார் கிட்ட இன்னைக்கே சொல்லிடறேன்.” சீனு செல்வாவை நோக்கி கண்ணடித்தான்.

“டேய்… நீ கொட்டிக்கறதுலேயே இருடா..” எரிந்து விழுந்தான் செல்வா.

“ஏன்டா எரிஞ்சு விழறே? இந்த கல்யாணத்துல சாப்பிடறதைத் தவிர வேறே என்னடா வேலை நம்ம ரெண்டு பேருக்கும்?”

“எனக்கு என் ஆளோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்டா… அதுக்கு ஒரு வழி சொல்லுடா நாயே…”

“என்னை முழு நேர மாமாவா ஆக்கிட்டீங்கடா…! சீனுவின் சிரிப்பை செல்வா ரசிக்கவில்லை.

“சுந்தரி அத்தை என்னை எரிக்கற மாதிரி பாத்தாங்கன்னு சொன்னேன்… அதை நீ கண்டுக்கவே இல்லே…”

“பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்… அவங்க பொண்ணு கையை நீ முறுக்கி நெறிச்சா அவங்களுக்கு கோவம் வராதா?” பில்டர் காஃபியை சர்ர்ரென ஓசையெழுப்பி உறிஞ்சினான் சீனு.

“நீதானேடா அவ கையை புடிச்சிக்கிட்டு கதறுன்னே?”

“நாலு பேரு எதிர்லேயா புடிக்க சொன்னேன்? கொஞ்சமாவது உனக்கு புத்தி இருந்தாதானே?”

“மாப்ளே… இப்ப என்னடா பண்றது?”

“இதோ பாரு… சுகன்யா உன்னைப்பாத்ததும் மெழுகா உருகி நீ கையைப்புடிச்சு இழுத்ததும், சத்தம் போடாம உன் பின்னால வந்தாளே அதை நெனைச்சு சந்தோஷப்படு…”

“ஆமாம் மாப்ளே… சுகன்யா என்னை நேர்ல பாத்ததும் பிண்ணி பெடல் எடுப்பான்னுதான் நினைச்சேன். நடு ஹால்லே தகராறு பண்ணிடப்போறாளேன்னும் பயந்தேன்… ஆனா உன் தாடி மீசை எங்கடான்னு சிரிச்சிக்கிட்டே போங்கேத்தறா… இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைடா…”

“மச்சான்.. என் கிட்ட உளர்ற மாதிரி அவ எதிர்லே
“பொண்ணுங்களை”ன்னு சொல்லி அவ மூடை சொதப்பிடாதே…

“தேங்க்ஸ்டா மாப்ளே… என் நாக்குல சனிதாண்டா இருக்கான். பேசி பேசியே கெடறேன் நான்.”

“சரி விஷயத்துக்கு வா… அவகிட்டே சாரின்னு சொன்னியா நீ..?”

“என்னை மன்னிச்சுடு சுகன்யான்னு சீரியஸா மன்னிப்பு கேட்டுட்டேன்டா…”

“அனு கழுத்துல தாலி ஏறினதும், அவங்கவங்க அக்காடானு ஓய்ஞ்சு போய் உக்காருவாங்க… சுந்தரி அத்தைக்கிட்ட நான் ஏதாவது பேச்சு குடுக்கறேன்… அப்ப உன் ஆளை, சத்திரத்து மாடிக்குத்தள்ளிட்டுப் போடா…”

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.