கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“இதுலேருந்து உனக்கு என்னடா புரியுது…”

“அயாம் சாரிப்பா… நிஜமாவே நான் ஒரு முட்டாள்தான்… உங்க எல்லரையுமே நான்தான் தேவையே இல்லாம அழவெச்சிக்கிட்டு இருக்கேன்.”

“மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாத்தான்டா தெரியும்..”

“ம்ம்ம்..”

“இந்த சின்ன விஷயத்தை உன்னால இன்னும் புரிஞ்சுக்க முடியலேன்னா.. சுகன்யாவையோ, அவ குடும்பத்தையோ, எப்பவுமே நீ புரிஞ்சுக்க போறதில்லேடா…” நடராஜன் தன் மகனின் தோளை பாசத்துடன் தட்டிக்கொடுத்தார்.

“நீ சொல்ல விரும்பற
“சாரி’ங்கற ஒரு வார்த்தையை, அவ வீட்டு பெரியவங்க கிட்ட இன்னைக்கே சொல்லுடா… இன்னைக்கு நீ உண்மையாகவே வருத்தபடற விஷயம், உன்னை நம்பி தங்களுடைய பொண்ணை உனக்கு நிச்சயம் பண்ணிக் குடுத்தாங்களே… அவங்களுக்கும் இன்னைக்கேத் தெரியட்டும்..” நிதானமாக பேசிய நடராஜன் எழுந்து ஹாலுக்குள் நுழைந்தார்.

வேக வேகமாக எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான் செல்வா. ஐந்தே நிமிடங்களில், முகத்தில் படர்ந்திருந்த கருமையை, சரசரவென வழித்து எறிந்தான். தட தடவென தலையில் குளிர்ந்த நீரை பக்கெட் பக்கெட்டாக ஊற்றிக்கொண்டான். உடல் சூடும், மனசின் சூடும் அடங்க நிதானமாக குளித்தவன், கமகமவென சோப்பு வாசத்துடன் வெளியில் வந்தான்.

தீர்த்த கரையினிலே
தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே… பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப்போலவே பாவை தெரியுதடி…
ஆஆ*…பாவை தெரியுதடி..”

“செல்வா நாலு மாசத்துக்கு அப்புறமா பாடறம்மா… அவன் தன்னோட பழைய மூடுக்கு வந்துட்டாம்மா…” மீனா கலகலவென நகைத்தாள். சந்தோஷத்துடன் தன் அண்ணனின் முதுகில் உப்பு மூட்டையாகி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினாள். தங்கையின் பாசத்தில் சிலிர்த்தான் செல்வா. ஹாலில் உட்கார்ந்திருந்த நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டனர்.

எப்போதோ ஆறு மாதங்களுக்கு முன் சுகன்யாவுக்கு பிடித்த கருப்புக்கலரில் வாங்கி, இதுவரை பிரிக்கப்படாமலேயே, அலமாரிக்குள் கிடந்த புத்தம் புதிய
“கார்ட்ராய் ஜீன்ஸ்’ஐயும், அதற்கு மேச்சிங்காக வாங்கி வைத்திருந்த, வெளிர் நீல நிற டீ ஷர்ட்டையும் தேடி எடுத்து, அணிந்துகொண்டான். சட்டை காலரின் பின்னால், மெல்லிய மல்லிகை மணம் கமழும் செண்டை தெளித்துக்கொண்டான் செல்வா.

“அம்மா..”

“சொல்லுடா..”

“அந்த செயினை எங்க வெச்சிருக்கம்மா..?’

“எந்த செயினை கேக்கறே? மீனா கல்யாணத்து வாங்கி வெச்சிருக்கறதையா?” மல்லிகா ஒன்றும் தெரியாதது போல் பாசங்கு செய்தாள்.

“ம்மா, அதைக் கேக்கலேம்ம்ம்மா…”

“பின்னே…?

“கிண்டல்தானே வேணாங்கறேன்…” சுகன்யா வீட்டுல எனக்கு போட்டாங்களே..”

“என் பீரோவுல லாக்கர்லே வெச்சிருக்கேன்.. எடுத்து போட்டுக்கடா..” வெகு நாட்களுக்குப்பிறகு பிள்ளையின் சிரிப்பு பொங்கும் முகத்தைப் பார்த்த மல்லிகாவின் மனசு குளிர்ந்தது.

“அப்பா… நான் இன்னைக்கே குமாரசுவாமி அங்கிளை விஷ் பண்ணிட்டு, சுந்தரி அத்தைகிட்டவும் பேசிட்டு நேரா சுகன்யா கூட ஸ்டேஷனுக்கு போயிட்டு வர்றேம்பா…” செல்வாவின் கழுத்தில் தங்கசங்கிலி மின்னிக்கொண்டிருந்தது.

“குமார் ஒரு ஃபர்ஃபெக்ட் ஜென்டில்மேன்; அப்படியே அவரோ, அவர் வைப் சுந்தரியோ, எதாவது சொன்னாலும், உன் வாயைத் தொறந்து எதுவும் பதிலுக்குப் பதில் பேசாம கேட்டுக்கோ…”

“சரிப்பா…”

* * * * *

“தாத்தா எப்டீ இருக்கீங்க…?”

வெராண்டாவில் உட்கார்ந்து தேவாரத்தைப் படித்துக்கொண்டிருந்த சிவதாணு நிமிர்ந்தார். வந்துட்டான். பிரிஞ்சு போனவன் தன்னால வீடு தேடி வருவான்னு நான் நெனைச்சது சரியாப்போச்சு…
கட்டங்கள் பொய் சொல்றது இல்லே.

சிவ சிவா… கட்டங்கள் சொல்றதை நம்மளாலே புரிஞ்சுக்க முடியலேங்கறதுதான் உண்மை. சுகன்யாவின் கட்டத்திலிருக்கும் ராகுவின் நினைப்பு அவர் மனதில் சட்டென எழுந்தது.

“வாப்பா… வா… நீ எப்படியிருக்கே?” தடுமாறி எழுந்தார்.

“நீங்க உக்காருங்க தாத்தா…” எழுந்தவர் கையை மரியாதையுடன் பற்றிக்கொண்டான் செல்வா.

“சுந்தரீ… மாப்பிள்ளை வந்திருக்காரும்ம்மா…” குரல் கொடுத்தவர் அவன் கையைப்பற்றிக்கொண்டு ஹாலை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

தாத்தா என்னை மாப்ளேன்னு சொன்னாரே? அப்பா சொன்ன மாதிரி இந்த வீட்டுல யாருமே என்னை வெறுத்துடலே; இன்னைக்கும் என்னை மாப்பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்காங்க… நான்தான் பைத்தியக்காரத்தனம் பண்ணியிருக்கேன். மனதுக்குள் அதிர்ந்த செல்வா தன் முகம் சிவந்தான்.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவாறு சுகன்யாவின் ஜீன்ஸ் ஒன்றில் விட்டுப்போயிருந்த பட்டனைத் தைத்துக்கொண்டிருந்த சுந்தரி தலையை நிமிர்த்தினாள். சட்டென எழுந்து மாமனாரை சோஃபாவில் உட்கார வைத்தாள். செல்வாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். புன்னகைத்தாள்.

“வாப்பா… செல்வா… இப்படி உக்காரு… ஏன் நிக்கறே?” அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்தார் குமாரசுவாமி.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.