கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“சுகன்யா… உங்கம்மாகிட்ட என்னை அழைச்சுட்டு போடீ… அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாரு செல்வா…”

“ம்ம்ம்… அவன் பண்ண வேலைக்கு தனியா வந்து என் மூஞ்சைப்பாக்க வெக்கப்படறான் போல இருக்கு? செத்து போயிடுவேன்னு வேற உன்னை மிரட்டினானா? வரட்டும்; அவன் இந்த வீட்டுக்குள்ள வரட்டும்… அன்னைக்கு வெச்சுக்கறேன் மொத்தமா அவனுக்கு?”

“நீ என்னப் பண்ணிவியோ… ஏது பண்ணுவியோ? அதெல்லாம் எனக்குத்தெரியாது. இந்த வீட்டு வர்ற வழி அவருக்கு மறந்து போச்சாம். அதனாலே நம்ம வீட்டு அட்ரசை அவரு கிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன்.” சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சுந்தரியைப் பார்த்துச் சிரித்தாள்.

“கண்ணு… ஆம்பளை தப்புப்பண்ணிட்டா… பொட்டைச்சி சமாதானம் ஆகற வரைக்கும், தனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கற பொம்பளைகிட்ட அப்பப்ப இப்படீல்லாம் அவன் நடிக்கத்தான் செய்வான். அதைப்பாத்துட்டு நீ ரொம்பவும் பயப்படாதே. நீ பயந்தீன்னா, அவனுக்கு சுத்தமா பயம் வுட்டுப்போயிடும்.” சுந்தரி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்…”

“வெளியில கிளம்பும் போது எப்பவும், அரைகுறையா டிரஸ் பண்ணிக்கிட்டு இன்னைக்கு அவசர அவசரமா ஓடின மாதிரி என்னைக்கும் ஓடாதே… எதுக்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கற வேலையையும் விட்டுட்டு கொஞ்சம் தைரியமா இருடீ…” பெண்ணின் தலையை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தாள் சுந்தரி.

“சரிம்மா… அப்புறம்… செல்வா சொன்னாரு…”

“சொல்லுடி உன் செல்வா சொன்னதை…”

“சுகன்யா.. உங்கம்மாவை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடீன்னு சொன்னாரு..”

“நான் என்ன சிங்கமா புலியா…? அன்னைக்கு ஆஸ்பத்திரியில அடிபட்டு கிடந்தப்ப என்னடீ சொன்னான்…? உங்க பொண்ணுதான் எனக்கு உசுரு குடுத்தான்னு சொல்லிட்டு…. இன்னைக்கு அவ மூஞ்சைப்பாக்க புடிக்கலேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?”

“அம்மா.. நடுவுல நடந்ததையெல்லாம் நீயும் மறந்துடும்மா…’

“ஆமாம்டீ… என் பொண்ணைப் பத்தி அவன் வாய்க்கு வந்ததை உளறுவான். நீ வந்து எங்கிட்ட ஒப்பாரி வெப்பே; பத்து நாளைக்கு அப்புறம் மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டு சாரிடீன்னு உன் கையை அவன் புடிச்சிக்குவான்… ஆனா நான் எல்லாத்தையும் உடனே மறந்துடணும்… நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்…”

“அம்மா.. நீ என்னை எப்படி வேணா திட்டு… நான் பொறுத்துக்கறேன்.. ஆனா அவரு உன்னைப்பாக்க வரும் போது மட்டும் என்னைத் திட்டறமாதிரியே அவரையும் திட்டிடாதேம்மா…” சுகன்யா தன் தாயின் மடியிலிருந்து எழுந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தன் உதட்டை அவள் கன்னத்தில் ஒற்றினாள்.

“நடராஜன் என்ன சொன்னாரு?” பெண்ணின் உதடுகள் தன் கன்னத்தில் உரசியதும், சுந்தரிக்கு மனசு மொத்தமாக நெகிழ்ந்து போனது.

“அவரு ஒண்ணும் சொல்லலே… நான்தான் உங்க இஷ்டப்படியே கல்யாண டேட்டை பிக்ஸ் பண்ணுங்கன்னு சொன்னேன்..”

“என் பொண்ணை கோர்ட்ல நிக்க வெச்சு பேசற மாதிரி பேசறேன்னு சொன்னீங்களே..? உங்க ஆசைப்பொண்ணு சம்பந்தி வீட்டுல என்ன சொல்லிட்டு வந்திருக்கான்னு கேட்டீங்களா? இதுக்குத்தான் இவளை என்ன… ஏதுன்னு நோண்டி நோண்டி கேட்டேன். இப்படி இவ இஷ்டத்துக்கு நம்பளை எதுவும் கேக்காம, இவ பேசிட்டு வந்தா; அந்த செல்வாவுக்கு நம்ம கிட்ட எதாவது பயம் இருக்குமா?” சுந்தரி தன் முகத்தை நொடித்தாள்.

“சுந்தரீ…” சிவதாணு குரல்கொடுத்தார்.

“சொல்லுங்க மாமா…”

“நம்ம கொழந்தையோட சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்.. டம்ளர்லே இருக்கற பால்லே சக்கரையை போட்டா என்ன? காலியா இருக்கற டம்ளர்லே மொதல்லே சக்கரையை போட்டுட்டு அதுக்கப்புறம் பாலை ஊத்தி கலக்கினா என்ன?” சிவதாணு தன் பக்கதிலிருந்த பஞ்சாங்கத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.