28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

சென்னையில் இறங்கியதும், குழந்தையோடு, நேராக காயத்ரியின் வீட்டுக்கு வந்தாள். அவர்களை பார்க்க ஓடினாள். காயத்ரி, ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். நிஷாவை தனியாக கூட்டிப்போய், நான் பெரிய தப்பு பண்ணிட்டேண்டி… என்று ஓவென்று கத்தி அழுதாள்.

காயத்ரி, எல்லாமே சொன்னாள். ஒன்று விடாமல் சொன்னாள். இதைக்கேட்ட நிஷா, என்னடீ நீ!!!! இப்படி பண்ணி வச்சிருக்கே?! என்று கோபத்தில் அவளை ஓங்கி அறைய… ஆல்ரெடி வீக்காக இருந்த காயத்ரி சுருண்டு விழுந்தாள்.

நிஷாவுக்கு, உள்ளங்கையில் தீப்பிடித்ததுபோல் இருக்க, காயத்ரியை கோபத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்துக்கொண்டு கண்கலங்கி நின்றாள்.

சீனு, நிஷாவை பார்த்ததும், எழுந்து, தலை குனிந்து நின்றான். தள்ளாடியபடியே, நிற்க முடியாமல் நின்றான்.

நிஷாவால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில், கண்களை அகலமாக விரித்து அவனைப் பார்த்தாள்.

பலவருட நோயாளி போல்… ஒல்லியான தேகத்தோடு… தாடியோடு…. தூங்காத கண்களோடு…. அவன் நின்ற கோலத்தைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் நிஷா நின்றாள்.

சீனு… என்ன இதெல்லாம்? என்றபடியே இவள் அவன் கையைப் பிடிக்க…. அவன் அவள் கையை தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதான். கண்ணனுக்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன் நிஷாஆஆ… என்று அழுதான்.

நிஷா, பல வருடங்கள் கழித்து அவன் தான் செய்த தவறுக்காக… தான் செய்த துரோகத்துக்காக வருந்தி அழுவதை… கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டு நின்றாள். தான் இப்படி கண்ணீர் விட்டு அழுது, கண்ணனிடம் மன்னிப்பு கேட்ட நாட்களை நினைத்துப் பார்த்தாள். வாழ்க்கைப் பிச்சை கேட்டு கண்ணனின் வீட்டுக்கு ராஜ்ஜோடு சேர்ந்து போனதை நினைத்துப் பார்த்தாள். அங்கிருந்து அழுதபடியே திரும்பி வந்ததும், அவள் வாழ்க்கையை வெறுத்து இருண்ட பாதாளத்துக்குள் விழப்போவதற்குமுன், கதிர் வந்து அவளை பூப்போல பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டதை நினைத்துப் பார்த்தாள். அவள் கண்ணீரை துடைத்து அவளை தூக்கிக்கொண்டதை நினைத்துப்பார்த்தாள்.

கதிர் என் கண்ணீரோடு சேர்த்து என் பாவத்தையும் துடைத்தான்…

பஞ்சாயத்து தலைவராகப் போகிறேன் என்று சொன்னவனிடம், சிவில் சர்வீஸ் புத்தகங்களை கொடுத்திருக்கிறேன். அவன் படித்துக்கொண்டிருக்கிறான்….

வினய்… முடிந்தவரை தன்னைத் திருத்திக்கொண்டு, நம்பர் ஒன் பிசினஸ்மேன் என்கிற லட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறான்…

காவ்யாவின் கருணையால்… கண்ணனின் கையில் இப்போது பதக்கங்கள்… பாராட்டுக்கள்… கைதட்டல்கள்… நல்ல குடும்பம்…

இவன்??? இவன் மட்டும் ஏன் இப்படி ஆனான்? ஏன் நான் சொல்வதைக்கூட கேட்கமாட்டேன்கிறான்?

சீனு, அவள் புறங்கைகளை அவன் கண்ணீரால் இன்னும் நனைத்துக்கொண்டிருக்க , அவனை… பிச்சைக்காரன் போல் பரட்டைத் தலையுடன் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்த அவனை…. பார்க்க சகிக்காமல் அவள் வேறு பக்கம் திரும்பி, காயத்ரியைப் பார்த்தாள்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.