ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

நான் உன்னை முத்தமிட்டு விலகி எழுந்தேன். பாத்ரூம் போய் வந்து… உடை மாற்றிக் கிளம்பினேன்.! முதலில் ஸ்டேண்டுக்குத்தான் போனேன். குணா இல்லை. அவன் நெம்பருக்கு.. போன் செய்தேன்…!
அவன் எடுக்க… ”எங்கடா இருக்க..?” என்று கேட்டேன்.
”ஈரோட்லடா… ஏன்டா..?” என்றான்.
”சும்மாதான்டா..! லேட்டாகுமா..?”
” பத்து மணிக்குள்ள வந்துருவேன்..! நீ ஏன்டா ஸ்டேண்டுக்கு வல்ல..?”
” இப்ப.. ஸ்டேண்டுலதான்டா இருக்கேன்…!!!”
”காலைல.. எங்க புடுங்கப் போன..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
நான்.. அவனுக்கு பதில் சொல்லாமல்… ”சரிடா…வா… அப்றம் பேசிக்கலாம்…!!” என்று இணைப்பைத் துண்டித்தேன்..!
மேலும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு…ஸ்டேண்டிலிருந்து கிளம்பினேன்…!! இரவுக்குத் தேவையான.. சில ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு…. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி விட்டேன்..!!
பார்சல்களுடன் ஆட்டோவில் போய்.. வீட்டின் முன் இறங்கிக் கொண்டேன். கதவைத் திறந்த நீ…
”வங்துட்டிங்களா..?” என்று சிரித்தாய்.
உன் முகம் திருத்தமாக இருந்தது.! கண்ணை உறுத்தாத மேக்கப் செய்திருந்தாய்..!
”என்ன பண்ணிட்டிருந்த…?” உள்ளே நுழைந்து… கதவைச் சாத்தினேன்.
”டிவி பாத்துட்டுருந்தங்க..!!”
”நான்.. அப்படியே ஸ்டேண்டுக்கு போய்ட்டு வந்தேன்..! அதான் கொஞ்சம் லேட்..!!”
”பரவால்லீங்க…!!”
பார்சல்களை உன்னிடம் கொடுத்து விட்டு… உன் இடுப்பில் கை போட்டு.. வளைத்து உன்னை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
”சாப்பிடலாமா..?”
”செரிங்க…!”
”கமகமனு மணக்கறடி…!!” என்று.. உன் கழுத்தில் வாசம் பிடித்தேன்.
உன் அளவான இள மார்புக்கு முத்தம் கொடுத்தேன். உன் இடுப்பை இருக்கி… உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..! சில நிமிடங்களுக்குப் பிறகு… உன்னை விட்டு… விலகி.. நான் உடைமாற்ற… நீ பார்சல்களை.. ஒவ்வொன்றாக எடுத்து… கவனமுடன்.. வெளியே… வைத்தாய்..!!
நீ பீர் பாட்டில்களை எடுத்து வைக்க..
”உனக்கும் ஒரு பீரு..!!” என்றேன்.
உன் சின்னக் கண்கள் சுருங்கச் சிரித்தாய்.
”நெறைய செலவு பண்றீங்க….”
”இதெல்லாம்.. ஒரு செலவாடி..? ”
”இல்லீங்களா பின்னே..?”
”சரி… உனக்காக பண்றேன்னு வெச்சுக்கயேன்..!” என்க… உன் முகத்தில்…ஆனந்தப் புன்னகை…பூத்தது..!!
நான் லுங்கிக்கு மாறி… சேரில் உட்கார்ந்து… பீர் பாட்டில்களை.. பல்லால் கடித்து… மூடி திறந்தேன்..! உன்னிடம் ஒன்றைக் கொடுத்து…
”குடி….!!”என்றேன்.
வாங்கிக் கொஞ்சம்… கொஞ்சமாகக் குடித்தாய்..!! நானும்…குடித்தேன்..!! போதை ஏறிய பின்னரே.. சாப்பிடத் தொடங்கினோம்..!! சாப்பிட்ட..சிறிது நேரத்திலேயே… விளக்கை அணைத்து விட்டு… கட்டிலில் சாய்ந்து கொண்டு… டிவி பார்த்தவாறு… நிறையப் போசினோம்…!!
என்னை விட… நீதான் மிக… அதிகமாகப் பேசினாய்..! நிறையப் பேசினாய்..! உன் சிறு வயது அனுபவங்கள் முதற்கொண்டு… எவ்வளவோ விசயங்களை மனம் விட்டுப் பேசினாய்..!! ஒளிவு மறைவு இல்லாத…. உன் பேச்சு… என் மனதை நெகிழ்ந்து போகச் செய்தது..!!
நீண்ட நேரத்துக்குப் பின்பே… உடலுறவுக்குத் தயாரானோம்…!! இந்த முறை… காமத்துக்காக மட்டும் நம் உடற்கலப்பு நிகழவில்லை..!! அதையும் தாண்டி… நமக்குள்… ஒரு உணர்வுப் புரிதலும்… உள்ளப் புரிதலும்…நடந்தது..!! உடலுறவு முடிந்த களைப்பில்… அப்படியே தூங்கிப்போனோம்…!!

மறுபடி… அதிகாலை… மூன்று மணிக்கு… எனக்கு விழிப்பு வந்தது..!! என் அருகில் நீ… அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாய்..! என்னைப் பார்த்துப் படுத்திருந்த… உன் வாய் லேசாகப் பிளந்திருந்தது..! ஒருகாலை நீட்டி… ஒரு காலை மடக்கிய நிலையில்… ஆழ்ந்த தூக்கம்…!!
நீ… என்னுடன் இருக்கும் போதெல்லாம்.. நான் மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்..! வேறு எதைப் பற்றின… எண்ணங்களும்…கவலைகளும்…என் மனதில் எழுவதில்லை..!! இதற்கும்… நீ ஒன்றும் பெரிய அழகியும் இல்லை…! நான் உன்னைக் காதலிக்கவும் இல்லை…!! ஆயினும் நீ… என் மனதில்… ஆழமான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாய்..!!

1 Comment

Comments are closed.