ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

நாட்கள் நகர்ந்தன..!! வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின் நீ.. கொஞ்சம் போல மாறியிருந்தாய்.!
வேளை தவறாத உணவும்… உடல் உழைப்பு இல்லாத… நிழலிலேயே உட்காரும் வேலையும்… உன் உடம்பில்.. சிறுசிறு மாற்றங்களைச் செய்திருந்தது..! குறிப்பாக உன் கண்களைச் சுற்றியிருந்த.. கருவளையம்… மறையத் தொடங்கியிருந்தது..! நகரத்தின் பேச்சும்… நடைமுறைப் பழக்கங்களும்… உன் உடையிலும்… பேச்சிலும் தென்படத் தொடங்கியது…!!
முதல் மாதச் சம்பளம் வாங்கியதும்… நீ.. என்னைத் தேடி… கார் ஸ்டேண்டுக்கே வந்து விட்டாய்..! உன்னைப் பார்த்ததும் நான்… சட்டென வந்து… உன்னைத் தனியே அழைத்துப் போனேன்..!!
கவரை நீ.. என்னிடம் கொடுத்தாய்..!
”என்ன இது..?” வாங்கியவாறு கேட்டேன்.
”சம்பளங்க…!!” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னாய்.
” ஓ…! சம்பளம் வாங்கிட்டியா..? எவ்ளோ.. இருக்கு..?”
”நீங்களே பாருங்க..!!”
”ம்..ம்..!!” கவரைப் பிரித்து… பணத்தை எடுத்து.. எண்ணிப் பார்த்தேன்.
”அப்படியே இருக்கு..?”
”ஆமாங்க..! சம்பளம் வாங்கினதும்… அத.. உங்ககிட்ட தரணும்னுதாங்க… வந்தேன்..!!”
”ம்ம்..!! அப்ப… இந்தப் பணமெல்லாம்.. எனக்கா..?” புன்னகையுடன் கேட்டேன்.
”வெச்சுக்குங்க..!!” என்று சிரித்தாய்.
”நீ…கஷ்டப்பட்டு.. வேலை செஞ்சு சம்பாரிச்ச பணம்..! இந்தா..மனசார.. செலவு பண்ணு…!!” என்று உன்னிடமே கொடுத்தேன்.
”ஐயோ..!! நான் கஷ்டமெல்லாம் ஒன்னும் படலீங்க..!! நோகாத வேலைதான்..!!”
”சந்தோசம்..!! இப்ப வீட்டுக்கா..?”
”ஆமாங்க..!! நாளைக்கும் லீவுதாங்க..!! ”
”ஏன்…?”
” மொதலாளி.. அவங்க சொந்தத்துல ஒரு கல்யாணத்துக்கு போறாருங்களாம்..!! வரதுக்கு ரெண்டு நாளு…ஆகும்னு சொன்னாருங்க…! அதனாலதான் நாளைக்கு தரவேண்டிய சம்பளத்த… இன்னிக்கே.. தந்துட்டாருங்க..!!”
” ஓ..! அப்ப… நாளைக்கு.. என்ன பண்ணப்போற..?”
”என்னங்க…பண்றது..?”
”வீட்லதான… இருப்ப..?”
” ஆமாங்க…!!”
”நா… வரட்டுமா…?”
”ஐயோ…! வாங்க… வாங்க..!!”
”உனக்கு ஒன்னும் தொந்தரவா இருக்காதே..?”
”ஐயோ.. என்னங்க சொல்றீங்க..? நீங்க வந்தா… அதவிட எனக்கு வேற என்னங்க சந்தோசம்…இருக்கப் போகுது..? நீங்க கன்டிசனா வரனும்..!!” என்றாய்.
” நிச்சயமா வருவேன்..!!” என்றேன்..!!
அடுத்த நாள்…. உன் வீட்டில்… உன்னுடன்.. உன் தோழியும் இருந்தாள்.!
அவளுக்கும்.. ஒரு
”ஹாய்…!!” சொன்னேன்.
”வாங்க..சார்..!!” என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் அந்தக் கருப்பு விடலை..!
அவள் பெயர் உடனே.. என் நினைவுக்கு வரவில்லை. நீ பாயை விரித்தாய்.
”உக்காருங்க…”
அவளைப் பார்த்து..”அப்றம் சவுக்கியமெல்லாம் எப்படி..?” என்று கேட்டவாறு.. பாயில் உட்கார்ந்தேன்.
பற்கள் அத்தனையும் பளீரிடச் சிரித்தாள்.
”ஓ..!! நல்ல சவுக்கியம்…!!”
”காபி வெக்கறங்க..?” என்றாய் நீ..!
”இல்ல… வேண்டாம் தாமரை..! வெயிலா இருக்கு…!!”
அந்தப் பெண் ”அப்ப… கூல்ட்ரிங்க்ஸ்… குடிங்க..!!” என்றாள்.
உடனே கடைக்குக் கிளம்பி விட்டாய்..நீ !
”இருங்க.. நான் போயி.. வாங்கிட்டு வரேன்..!!”
”அட…பரவால்ல விடு..!!”
”ஏய்..! போய் வாங்கிட்டு வாடி.. எருமை..!!” என்றாள் அவள்.
நீ ”இருங்க.. போன சுடிக்கு வந்துருவேன்..!!” என்று விட்டு… நீ வெளியே போனாய்.
எனக்கு எதிராக.. கால்களை மடக்கி உட்கார்ந்தாள் அந்தப் பெண். அவளைப் பார்த்து…
”ஆமா… உன் பேரு என்ன… சொன்ன…?” என்று யோசித்தவாறு கேட்டேன்.
”அதுக்குள்ள… மறந்தாச்சா…?”
” என்ன பண்றது.. ? நீ நின்ன அளவுக்கு… உன் பேரு.. என் மனசுல நிக்கலியே…?”
”ஓ..!! நா.. நிக்கறனா… உங்க மனசுல..?”
” நிக்கறதா..? ம்..ம்..! சோபா போட்டு.. உக்காந்துட்ட…!!” என்க…
”ஆ.. .!! ” என தன் கரிய விழிகளை அகல விரித்தாள்.
”சரி..! உன் பேரு… என்னமோ.. மலரு..?”
”என்னமோ.. மலரு.. இல்ல..! தீபமலர்…!!” என்றாள்.

1 Comment

Comments are closed.