ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

பேசி முடித்து.. நான் பாரிலிருந்து கிளம்பிய போது… தேவதூதனாகி இருந்தேன். என் கால்கள் தரையில் படவில்லை. ஆகாயத்தில் மிதந்தேன். மேகங்களுக்கிடையே தவழ்ந்தேன்.!!
காலிங் பெல்லை நீண்ட நேரம் அழுத்திய பின்னர் தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் அக்கா. என் பெரியம்மா பெண்.. !!
என்னைப் பார்த்துவிட்டு.. ”என்னடா இந்த நேரத்துல..?” என்று முறைத்து சுருக்கினாள்.
அவளை விலக்கி உள்ளே போனேன்.
”அம்மாள பாக்கனும்..”
”அம்மா இல்ல… சிண்ணு வீட்டுக்கு போயிருக்கா..”
”ஆ…! எப்ப..?” என்று அவள் முகத்தருகே கேட்டேன்.
”என்னடாது இப்படி நாறது..? குடிச்சிட்டு வந்துருக்கியா..?” என்று முறைத்தாள்.
”ஸாரி சிஸ்டர்…” அவள் தோளில் கை வைத்தேன் ”அம்மா எப்ப வரும்..?”
”ஏன்… என்ன விசயம்..?”
”என்னமோ… சொல்லேன்..”
”நாளைக்கு வந்துரும்..!!”
” மச்சான் எங்க..?”
”தூங்கிட்டிருக்கு…”
” பசங்க…?”
” நடு ஜாமத்துல… குடிச்சிட்டு வந்து ஏன்டா.. ஆடற..? என்ன வேனும் உனக்கு…?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டாள்.
”ஏன் சிஸ்டர் டென்ஷனா இருக்க..? மச்சான்கூட டூ வா..?” என்று நான் சிரிக்க… என் மண்டையில் கொட்டினாள்.
”ஆமா..”
”ஓகே.. அப்ப நாளைக்கு வரேன்..! நீ போய்.. திரும்பி படுத்து தூங்கு .!!” என்று நான் திரும்ப… என் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
”நில்லுடா…”
”என்ன…?”
”சாப்பிட்டியா..?”
”ம்கூம்…”
”வா…! சாப்பிட்டு போ..!”
”என்ன செஞ்சிருக்க…?”
” தோசை ஊத்தி தரேன்.. வா..”
”தோசையா..?”
”ஆ… ! வேற என்ன வேனுமாம் தொரைக்கு..?”
”நல்லா காரம் சாரமா… சிக்கனோ.. மட்டனோ.. ?”
”மூடிட்டு வா.. குடுக்கறத திண்ணுட்டு போவியாம்..” என்று சமையலறைப் பக்கம் போனாள்.
நானும் அவள் பின்னால் நடந்தேன்.
”அம்மா கூட… அடிக்கடி ஏதாவது சண்டை போடறியா..?”
”ஏன்டா.. அம்மா ஏதாவது சொன்னாளா…?”
”இல்ல. . அடிக்கடி சிண்ணு வீட்டுக்கு போயிருதே.. அதனால கேட்டேன்..”
”ஆமா.. உங்கம்மாளுக்கு வேற வேலை என்ன..? நாப்பது வயசு தாண்டிட்டாலே.. நாய் புத்திதான…?” என்று அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
”எதுக்குடா இப்ப அம்மாள பாக்க வந்த…?” என் பக்கம் திரும்பி கேட்டாள்.
”ஒரு முக்கியமான விசயமா பேசனும்..?”
”என்ன பெரிய முக்கியம்..? உனக்கு பொண்ணா பாத்துருக்க..?”
” ஆமா..!”
”எவ…?”
”நிலா…!!”
நம்ப முடியாமல் என்னைப் பார்த்தாள்.
”என்னடா ஒளர்ற..?”
” ஒளரல..! நெஜமாத்தான்..!!”
முதலில் நான் சொன்னதை விளையாட்டு என்று நினைத்து விட்டாள். இப்போது திகைப்புடன் கேட்டாள்.
”நிலாவா…?”
”ம்..ம்..!”
”என்னடா… வெளையாடறியா..?”
”ஏய் லூசு… பிரெண்டோட தங்கச்சிய வெச்சு.. இந்த மாதிரி பேசி வெளையாடுவாங்களா..?”
”அப்பறம்… எப்படிடா..?”
”அது… அப்படித்தான்…”
” என்னடா.. லவ்வா…?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..”
” அடப்பாவி… நண்பனுக்கே.. துரோகம் பண்ணிட்டியே..?” என்றாள்.
அவளது பொடனியில் ஒன்று போட்டேன்.
”ஏய்.. லூசு..! நா லவ் பண்ணல..! அவதான் என்ன பண்ணியிருக்கா…! இந்த விசயத்த என்கிட்ட சொன்னதே குணாதான்…!!” என்று குணா சொன்ன அனைத்தையும் இவளிடம் சொன்னேன்.
தோசையைத் தட்டில் போட்டு சட்னி ஊற்றிக் கொடுத்தாள்.
”என்னால நம்பவே முடியலடா..” என்றாள்.
” நம்பு சிஸ்டர் நம்பு…”
” அடக்கஷ்ட காலமே.. என்ன கொடுமை இது..?”
”ஏன்..?”
” கொரங்கு கிளிய ஆசைப்படலாம்… ஆனா.. இங்க. .. கிளி.. ஒரு கொரங்கு மேல ஆசைப்பட்றுக்கே.. அந்த கொடுமைய வேற என்னன்னு சொல்றது…?”
”ஏய்.. நீ ஒருத்தியே போதும் போலருக்கே..?”
”அந்தப் பொண்ணுக்கு ஏன்டா இப்படி புத்தி போச்சு..? புத்தி.. கித்தி கலங்கிருச்சா…?”
”ச்ச.. என்மேல.. எதுக்கு. . உனக்கு இத்தனை பொறாமை..?”
”பின்ன.. அவ இருக்கற அழகுக்கு உன்னைப் போய் லவ் பண்ணியிருக்கான்னா.. ஒன்னு அவ தலையெழுத்து மோசமா இருக்கனும்… இல்ல நீ அவள மயக்கி… உன்னோட வலைல விழ வெச்சிருக்கனும்…!!” என்றாள்.
”நாள்ளாம்.. எதுமே பண்ணல.. அவளாத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கா..! எனக்கே குணா சொல்லித்தான் தெரியும்..”
”அப்ப… நிச்சயமா அவ தலையெழுத்துதான் மோசம்..!!” என்றாள்.
”ஏன்… அதைவே இப்படி சொன்னா.. என்னவாம்..?”
”எப்படி..?”
”இவ்ளோ நாள்.. பாலைவன ஒட்டகமா திரிஞ்சுட்டிருந்த.. எனக்கும் நல்ல காலம் பொறந்துருக்கலாமில்ல…?”
”உனக்கா…?” சிரித்தாள் ”ம்..ம்.. விதி வலியது…!!”
சாப்பிட்ட பின்பும்.. சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்து விட்டே… அங்கிருந்து கிளம்பினேன்.
உற்சாக உணர்வோடு நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். தியேட்டர் அருகே இருந்த சில்லிக் கடையைக் கடக்கும் போதுதான் மூர்த்தியைப் பார்த்தேன்.
மேகலாவின் கணவன். கடை வியாபாரம் முடிந்து போயிருக்க. ..மூர்த்தி மிதமிஞ்சிய போதையில்… கடைக்காரனோடு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவரால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை.
அவரை அங்கிருந்து அப்புறப் படுத்தி.. வழியில் போன.. ஒரு ஆட்டோவை அழைத்து.. கைத்தாங்கலாக அதில் ஏற்றி.. நானும் ஏறினேன். ஆட்டோவை விட்டு இறங்கிய அவரால் சுத்தமாக.. நிற்கவே முடியவில்லை. ஆட்டோவை அனுப்பி விட்டு.. கைத்தாங்கலாகப் பிடித்து.. சந்துக்குள் கூட்டிப்போனேன்.
அவர் வீடு சாத்தியிருந்தது. அவரால் நிற்க முடியாமல் உட்கார்ந்து விட்டார். அவர் வீட்டு முன்பாக நின்று….
”கஸ்தூரி…” என்று அவரது மகள் பெயரைச் சொல்லிக் கூப்பிட… சத்தம் கேட்டு வெளியே வந்த மேகலா… உட்கார்ந்திருந்த.. தன் கணவனைப் பார்த்து…
”என்னாச்சு..?” என்று பதறியபடி ஓடிவந்தாள்.. !!

மேகலாவின் முகத்தில் சின்னதாக ஒரு பதட்டம் தென்பட்டது. தன் கணவன் பக்கத்தில் வந்து..
”எந்திரிங்க…” என்று அவரது கையைப் பிடித்து தூக்கியவாறு சகட்டு மேனிக்கு அவரைத் திட்டினாள்.
அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரை வீட்டுக்குள் கூட்டிப்போய் படுக்க வைக்க… நானும் உதவினேன். குழந்தைகள் தூங்கியிருந்தன.
”காலைல சரியாகிருவாரு…” என நான் சிரிக்க… என்னை முறைப்பாகப் பார்த்தாள் மேகலா.
”நீங்களும் குடிச்சீங்களா..?”
”அட.. வம்பே.. வழில பாத்து கூட்டிட்டு வரங்க…”
”சரிதான்..! குடிக்கற யாருதான்.. நான் குடிச்சேன்னு ஒத்துக்கறாங்க..? ம்.. உங்கள சொல்லி என்ன பிரயோஜனம்..!!”

1 Comment

Comments are closed.