ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

” எங்கம்மா போட்டோவ…பாரு..” என்றேன்.
மேலே மாட்டியிருந்த… என் அம்மாவின் போட்டோவைப் பார்த்தாய் நீ..!
”எப்படி இருக்காங்க…?” என்றேன்.
” மகாலட்சுமியாட்டம் இருக்குங்க…”
சிரித்து ”ஏன்… இந்த.. சரஸ்வதி…பார்வதி… இவங்கள மாதிரியெல்லாம் இல்லையா..?” என்றேன்.
”போங்க…” என்று சிரித்தாய்.
”எங்கம்மா நல்லாருக்கு.. இல்ல..?”
”ஆமாங்க…!!”
” ஆனா… எங்கப்பனுக்கு.. அவளைப் புடிக்கல..!!”
”உங்ப்பாங்களா…?” உன் கண்கள் விரிந்தன.
”ம்ம்.. !! எங்கம்மா இருக்கப்பவே.. ரெண்டாங் கல்யாணம் பண்ணிட்டான்..!!”
”ரெண்டாங் கல்யாணங்களா..?” மேலும்… உன் முகத்தில் திகைப்பு.
”கல்யாண வயசுல.. எனக்கொரு தங்கச்சி கூட இருக்கா…!!”
”ஐயோ…!! தங்கச்சிங்களா..?” உன் முகத்தில் வியப்புக்கு மேல் வியப்பு.
”ம்ம்…!!”
”உ..உங்களுக்கு… யாருமே.. இல்லேன்னு சொன்னீங்க…?”
”ஆமா… சொன்னேன்..! எனக்குன்னு இருக்கற.. ஒரே சொந்தம்னு இந்த வீட்டச் சொன்னேன்..! ஆனா எனக்கு சொந்தக் காரங்களே… யாரும் இல்லேன்னு சொல்லல..!! ”
”ஆமாங்க..!! அப்படித்தான் சொன்னீங்க..!!”
”என்கூட யாரு இருக்கா..? நீயே பாக்கற இல்ல…?”
”தெரியுங்க…!” என் மார்பில் சாய்ந்து கொண்டாய் ”உங்கப்பா…?”
”சாகல… இன்னும்.. உயிரோடதான் இருக்கான்..!!”
”ஐயோ…! எங்கீங்க…?”
”வேற ஊர்ல…” உன் கன்னத்தைத் தடவி… உதட்டில் முத்தமிட்டேன்.
என் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய்.
”உங்களுக்கு.. வேற சொந்தக்காரங்க…யாரும் இலலீங்களா..?”
”ம்..! இருககாங்க..!!”
”யாருங்க…?”
” எங்கம்மாவோட அக்கா..!”
”பெரியம்மாங்களா…?”
”ம்ம்…!!”
”பேசிக்க மாட்டிங்களா…?”
”அதெல்லாம் பேசிப்போம்…!!”
”எங்கருக்காங்க… அவங்க..?”
”இங்கதான்…! நம்ம ஊர்ல..!!”
”நம்ம.. ஊர்லயேங்களா…?” மீண்டும் ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாய்.
”ம்..ம்..!!”
”நம்மூர்ல… எங்கீங்க…?”
” உனக்கு தெரிய வேண்டாம்னு.. நெனச்சேன்..!”
” ஐயோ… ஏங்க…?”
”நீ…இப்படி என்கூட இருக்கறது தெரிஞ்சா…தேவையில்லாத பேச்சு வரும்..! ”
அதற்கு மேல் நீ.. வேறு எதுவும் கேட்கவில்லை. ”செரிங்க..!! ” என்று சிரித்த.. உன் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன்..! நீயும்.. என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாய்.
இருவரும் சிறிது நேரம்… முத்தச் சுகத்தில் மூழ்கிப் பின்… விலகினோம்..!!
”தாமரை…!!”
”என்னங்க..?”
” இன்னிக்கு இது போதும்… மத்த விபரங்கள… அப்றம் பேசிக்கலாம்… ம்…?”
”செரிங்க…!!”
”போலாமா…?”
” போலாங்க…!!”
”என்னமோ… இப்ப… எனக்கு கொஞ்சம்… ஒரு மாதிரி… இதா இருக்குடி..!” ”என்னங்க…?”
”இல்ல…! நீ.. என்கூடவே இருக்கனும் போலருக்குடி..! பேசாம லீவ் போட்டுட்டு…ஜாலியா.. எங்காவது போலாமா..?” என்று நான் கேட்க…. நீ… நம்ப முடியாமல்.. என்னைப் பார்த்தாய்.
”அப்படிங்களா…?”
”இருந்தாலும்..! பரவால்ல.. நட..! ஞாயித்துக் கிழமை வேனா.. பண்ணாரி போலாம்…! சரியா..?”
”நீங்க சொன்னா… செரிங்க..!!”
நான் பெருமூச்சு விட்டு..”ம்ம்.. சரி… நட.. போலாம்..” என்று பூட்டை எடுக்க…
நீ.. என் கையைப் பற்றிக் கொண்டு கேட்டாய்.
”ஏதாவது பண்ணனுங்களா..?”
”என்னடி..?”
”அனுபவிக்கறீங்களா…?’’
சிரித்து விட்டேன்.
”ஏய்… இது.. அது இலலடி..! மனசுக்குள்ள.. ஒரு மாதிரி.. பீலிங்..!!”
”நான்.. வேனும்னா.. ஏதாவது செய்யட்டுங்களா..?”
”ஏய்.. லூசு..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! மூடிட்டு நட…!!” என்று உன் கழுத்தில் கை போட்டு… அணைத்து… உன்… உதட்டை.. செல்லமாக.. ஒரு கடி…கடித்தேன்..!
உனக்கு வலித்திருக்க வேண்டும்..! நீ கண்களைச் சுருக்கினாய்.!
உன் உதட்டை விட்டு…

1 Comment

Comments are closed.