ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

நிலாவினியைப் பார்க்க….
”ஏதாவது சொல்லனுமா..?” என்று நிலாவினி கேட்டாள்.
”இல்ல…வேண்டாம்..!”
”ஓகே… பை..!!” என்று கையசைத்தாள்.
”பை…!!” கையசைத்து நானும் விடைபெற்றேன்..!!
☉ ☉ ☉
ஞாயிற்றுக்கிழமை..!! ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான்… தொடர்ந்து கதவு தட்டப்படுவதை உணர்ந்து… கண் விழித்தேன்..! கடிகாரம் எட்டரை மணியைக் காட்டியது..! தூக்கக் கலக்கத்துடன் எழுந்து போய் கதவைத் திறந்தேன்..!
மெரூன் கலர் புடவையில்.. நீ அசத்தலாக நின்றிருந்தாய்.! வெளியே.. அப்போதுதான் மழை தூரத்தொடங்கியிருந்தது.!
”அட…! என்ன புடவைல.. அசத்தலா வந்துருக்க..?” என்றேன்.
சிரித்தாய் ”தூங்கிட்டிருந்தீங்களா..?”
”ஆமான்டி… மழைய வேற கூட்டிட்டு வந்துட்ட.. போலருக்கு..?”
”நான்.. பஸ்ல இருந்து எறங்கி.. இங்க வர்ரவரை.. மழை இல்லைங்க..! இப்பதாங்க… புடிச்சிருச்சு..!!” நீ உள்ளே வந்து.. கதவைச் சாத்த… நான் பாத்ரூம் போனேன்..!
சிறுநீர் பெய்து.. வாய் கொப்பளித்து…முகம் கழுவி… உன்னிடம் வந்தேன்..! நீ… புதுப்புடவை உடுத்தி… தலை நிறையப் பூ வைத்து… முகம் முழுக்க.. மகிழ்ச்சி தாண்டவமாட…புத்துணர்ச்சியோடு வந்திருந்தாய்..!!
”காபி வெக்கட்டுங்களா..?” என்று கேட்டாய்.
”ம்..ம்..!!” உன்னை மெதுவாக அணைத்து..” புடவைல நீ… சூப்பரா இருக்கடி..!” என்றேன்.
சிரித்த முகத்துடன்.
”சம்பளம் வாங்கி.. எடுத்தம்ங்களே.. அந்த சீலைதாங்க..! நீங்கதான… செலக்ட் பண்ணீங்க..? எனக்கும் ரொம்ப புடிச்சிதுங்க..!!” என்றாய்.
எனக்குள் உண்டான… தாபத்தின் விளைவால்… உன்னை இறுக்கி.. அணைத்து.. உன் கூந்தலில் மூக்கை நுழைத்து… ஆழமாக வாசம் பிடித்தேன். நெஞ்சு நிறைய மூச்சை இழுத்து தம் கட்டினேன்.
”எத்தனை மணிக்கு எந்திரிச்ச..?” என மெல்லிய குரலில் கேட்டேன்.
”அஞ்சரை மணிக்குங்க…”
”கிழிஞ்சுது.. போ..! எதுக்குடி.. அத்தனை நேரத்துல..?”
”நா.. எப்பமே.. ஆறு மணிக்குள்ள எந்திரிச்சுருவங்க..! எந்திரிச்சப்பறம்… வீட்ல… நான் சும்மாதாங்க இருக்கனும்..! அதாங்க…கெளம்பி இங்க வந்துட்டேன்..!”
”வந்துட்ட.. சரி..! ஆனா.. அட்டகாசமா வந்துருக்கியே..?” என்று உன் முந்தானைக்குள் கை விட்டு… ரவிக்கைக்குள் கச்சிதமாக அடங்கியிருந்த… உன் மலர்க் கொங்கைகளைப் பிடித்து… அழுத்தினேன்.
உன் கழுத்தில் முத்தமிட்டேன். முகம் நிமிர்த்தி… உன் உதட்டில்.. மென்மையாக முத்தமிட்டு… உதடுகளைக் கவ்விக் கொண்டேன்..! சிறிதே நேரம்… சிருங்காரச் சில்மிசங்களில் ஈடுபட்டுவிட்டு.. உன்னை நான் விடுவித்தேன்..!
அலங்காரமாக வந்திருந்த..உன்னை நான்… அலங்கோலப் படுத்த விரும்பவில்லை..!!
”போய் பால் வாங்கிட்டு வந்து காபி வெய்..!” என்றேன்.
”செரிங்க..!” என்று…விலகி.. முந்தானையை… சரி செய்தாய்.
ஜன்னலைத் திறந்து வைத்தேன். ஈரக்காற்று குபீரென்று வீசியது..! மழை தூறிக் கொண்டிருந்தது.!
”கொடை எடுத்துட்டு போ..” என்றேன்.
”செரிங்க..” குடையை எடுத்துக் கொண்டு நீ.. என்னைப் பார்த்துக் கேட்டாய் ”வேற.. ஏதாவது வாங்கனுங்களா..?”
”இல்ல.. ஒன்னும் வேண்டாம்.. பால் மட்டும் வாங்கிட்டு வா..”
”டிபன்… என்னங்க பண்றது..?”
”ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்..!” என்றேன்.
”சேரிங்க..!” என்று சிரித்து விட்டுக் கடைக்குப் போனாய்.
நான் டிவியைப் போட்டு விட்டு… சேரை எடுத்துப் போட்டு… ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து… முகச்சவரம் செய்ய ஆயத்தமானேன்..! நீ…பால் வாங்கி வந்து…
”காபி வெக்கறங்க..!!” என்று விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய்.
நான் சேவிங்கில் கவனம் செலுத்தியிருந்தேன்..! மழையின் ஈரக்காற்றில்.. என் உடம்பின் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றது.. ..!! ஜன்னலுக்கு வெளியே… ஓட்டிலிருந்து.. மழைநீர் கொட்டிக் கொண்டிருந்தது .! பின் பக்க வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது..! தலையை நிமிர்த்திப் பார்த்தேன்.!
‘ மேகலா..!’
அவள் வீட்டுத் தோணித் தண்ணீரைப் பிடிக்க… ஒரு வாயகண்ட பாத்திரத்தை வைத்துக் கொண்டிருந்தாள் மேகலா..!!
பாத்திரத்தை வைத்து விட்டு நிமிர்ந்து.. என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்து வைத்தேன்..! அவள்.. மழையில் லேசாக நனைந்திருந்தாள்.! அவளது புடவை ஈரமாக இருந்தது..! முழங்கால் தெரிய… புடவையத் தூக்கி… இடுப்பில் சொருகியிருந்தாள்.! இடப்பக்க முந்தானை ஒதுங்கி… அவளின் இடப்பக்க… கனிந்த மார்பு… தொங்கியவாறு தெரிந்தது..! அதை நான் ரசித்துப் பார்ப்பதை உணர்ந்தோ…என்னவோ… முந்தானையை இழுத்து…தன் முலையை மூடினாள்..!! இடுப்பில் சொருகியிருந்த… புடவையை.. கீழே இறக்கி விட்டாள்..! திடுமென என்னைப் பார்த்துக் கையை ஆட்டினாள்.
‘என்ன. ..?’ ஜாடையில் கேட்டேன்.
‘இல்லையா..?’ என்பது போல ஜாடை.
மறுபடி நான் ‘என்ன..?’
அவளும் அதேபோல.. கையை ஆட்டினாள்.
எனக்கு புரியவே இல்லை. அவளைப் போலவே கையை ஆட்டி.. உதட்டைப் பிதுக்கினேன்.
‘புரியல..’
சிரித்துக் கொண்டே.. வீட்டுக்குள் போய் விட்டாள். நான் மறுபடி… கண்ணாடி பார்த்து… மீசையைக் கத்தரியால் வெட்ட… நீ என் பின்னால் வந்து நின்றாய்.
”அந்த பொம்பள.. என்னங்க கேட்டுச்சு..?” என்றாய்.
”என்ன கேட்டுச்சுன்னு புரியல..! என்னமோ…கைய ஆட்டி.. ஆட்டி.. கேட்டுச்சு… நானும் அதுமாதிரியே கையை ஆட்டினேன்..! சிரிச்சுட்டே போயிருச்சு..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
”அது.. என்னைத்தாங்க கேட்டுருக்கும் ” என்று.. நீ இயல்பாகச் சொல்ல.. நான் திடுக்கிட்டேன்.! திகைப்பு மாறாமல் உன்னைப் பார்த்தேன்.
”உன்…னை..வா..?”
”ஆமாங்க…! நான் இங்க வந்துட்டு போறது… அதுக்கு தெரிஞ்சுருக்குமாட்டக்குதுங்க..”
‘ஆம்..! தெரியும்தான்..! அன்றே கேட்டாளே… உன்னை யாரென்று… ஆனால்.. உனக்கெப்படி…இது..????’
”என்னடி சொல்ற..?” என்று கேட்டேன்.
”ஆமாங்க..! அதுக்கதெரிஞ்சுருக்கு..” என்றாய்.
”எப்படிச் சொல்ற..?”
” அது… எங்கூட பேசுச்சுங்க..!!” என்று சிரித்துக் கொண்டு சொல்ல… நான் திகைப்பாகப் பார்த்தேன்.
” உங்கூடயா… எப்ப…?”
” இப்பத்தாங்க…கடைல…”
” இப்பவா..? என்ன பேசுச்சு..?”
”நான் யாரு… எம்பேரு என்னன்னு கேட்டுச்சுங்க..”
”நீ.. என்ன சொன்ன..?”
” பேரு… ஊரெல்லாம் சொல்லிட்டங்க…”
”அடிப்பாவி…! அதெல்லாம் எதுக்குடி சொன்ன..?” என்று நான் கேட்க…. நீ பயந்து விட்டாய். உன் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.
”ஐயோ… ஏங்க.. தப்புங்களா..?”

1 Comment

Comments are closed.