ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

நிலாவினி தந்திரமாக நழுவி விட்டாள் என்பது பின்னர் தான் புரிந்தது. அவளைப் பார்த்தேன். சரலென வெளியே போய்விட்டாள். எனக்கு பயங்கரமாக வேர்த்தது. என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற பயம் என் நெஞ்சைக் கவ்வியது..!
‘சே.. நான் அவசரப்பட்டு விட்டோனோ..? ஆம்..! ச்ச.. அவசரப் பட்டிருக்கக் கூடாது.. தப்பு…! பாவம்..!! என்ன நினைப்பாள் என்னைப் பற்றி…? இவன் ஒரு காமுகன் என்றா..?’
ஆசுவாசப்படுத்திக் கொண்டு.. கைக்குட்டையால் முகம்.. கழுத்தெல்லாம் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியெ போனேன். நிலாவினி கீழே போகவில்லை. அறைக்கு வெளியே நின்றிருந்தாள். என்னை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை..!
தயங்கி…”ஸ்ஸாரி நிலா..”என்றேன்.
அவளும் கொஞ்சம் வியர்த்துப் போய்த்தான் நின்றிருந்தாள். அவளை நெருங்கி
”ஸாரி..” என்றேன்.
” ம்..ம்..” என்றாள்.
”ஸாரி.. திடிர்னு..”
”இப்படியுமா…?”
”இ..இல்ல.. கல்யாணம் பண்ணிக்க போறம்ன்ற உரிமைல….”
”முன்னால போங்க…”
”வெரி… ஸாரி…”
”நான் மொதல்ல போனா… நல்லாருக்காது..! போங்க ப்ளீஸ்…! போயிருங்க…!!” ஒரு வித வெறுப்பில் சொல்வது போலிருந்தது..!!
வியர்வைத் துடைத்துக் கொண்டே கீழே போனேன். குணா சோபாவில் உட்கார்ந்திருந்தான்.
”உக்காரு…” என்றான்.
தயங்கி உட்கார்ந்தேன்.
”ஸோ… எல்லாம் பேசியாச்சு..?” என்று கேட்டான்.
தயக்கத்துடன்..
”ம்..ம்..” எனத் தலையாட்டினேன்.
” உனக்கு ஓகே தானே..?” அவன் என்னையே பார்த்தான்.
எனக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது. தலையை ஆட்டி வைத்தேன். நிலாவினி கீழே வரவே இல்லை. என்னால்தானோ..? சிறிது நேரம் கழித்து அவளது அம்மா கூப்பிட்ட பின்தான் கீழே வந்தாள்..!!
”போலாமாடா…?” என்று என்னைக் கேட்டான் குணா.
”ம்..ம்.”சட்டென எழுந்து நின்றேன்.
எழுந்த குணா ”சரிடா.. உங்க பெரியம்மா வந்ததும் சொல்லு பேசிடலாம்…” என்றான்.
”ம்..ம்..!” தலையை ஆட்டி வைத்தேன்.
என் மனம் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தது. நிலாவினி என்ன சொன்னாள்.
” நான் முன்னால போனா நல்லாருக்காது… போங்க.. போயிருங்க..”
அவள் சொன்ன விதம் எனக்கு கவலையளித்தது. அடுத்தது… தாமரை..!!
‘மை காட்..! அவளை எப்படி நான் மறந்து போனேன்..? தாமரையைப் பற்றிக்கூட விசாரித்தாளே… நிலாவினி. நிச்சயமாக நான் சொன்னதை நம்பியிருக்க மாட்டாள். இந்த நிலையில் நான் வேறு.. அவசரப் பட்டு… கட்டிப்பிடித்து… சே..! என்ன காரியம் செய்து விட்டேன்..! நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்..? என்ன ஆனது.. எனக்கு. .?’
கார் ஸ்டேண்டில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரே தவிப்பாகவும்.. கலவரமாகவும் இருந்தது.! பேசாமல் இன்னொரு முறை அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்டு விடலாமா என்று தோன்றியது. சே… ! எப்படி மறுபடியும் அவள் முகம் பார்த்துப் பேசுவது..?
‘ ப்பூ..!’ என சிலிர்த்துக் கொண்டேன். வேண்டாத சிந்தனைகள் எதற்கு..? என்ன நடக்குமோ.. நடக்கட்டும்..!!
‘ஆஹா.. அவளை அணைத்த போதுதான் எத்தனை ஆனந்தம்..? என்னவொரு மென்மை..? அவளது வாசணையில்தான் என்ன ஒரு கிறக்கம்..? மார்புகளில்தான் என்ன ஒரு குழைவு..? அவைகள் சிவப்புத் தாமரையா..? வெள்ளைத் தாமரையா..? பார்த்துவிடலாம்..!! இத்தனை பரவசம் வேறு யாரிடம் கிடைக்கும்… நிலாவினியைத் தவிற…??’
இரவெல்லாம் நிலாவினியை நினைத்து மோகித்துக் கிடந்து.. என் தூக்கம் தொலைத்தேன். காலையில் நான் எழுந்தபோது.. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் மேகலா. அவளது பெண் கஸ்தூரி குடத்தில் தண்ணீர் பிடித்து வைக்க… மேகலா அதை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்.
”ஹாய்.. கஸ்தூரி..” என்றேன்.
என்னைத் திரும்பிப் பார்த்த கஸ்தூரி சிரித்தாள்.
”ஹாய்.. அண்ணா..”
”ஸ்கூல் இல்லையா.. இன்னிக்கு..?”
”இன்னிக்கு சண்டே.. எந்த ஸ்கூலும் இருக்காது..”
”கரெக்ட்.. அதனாலதான் நீ வீட்ல இருக்க…”
வெளியே வந்த மேகலா என்னைப் பார்த்து முறைத்து விட்டுப் போனாள். கஸ்தூரியைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டேன்.
”உங்க மம்மி ஏன் காலைலயே இவ்வளவு டென்ஷனா இருக்காங்க..?”
கஸ்தூரி உதட்டைப் பிதுக்கி.. தோள்களைக் குலுக்கினாள். ”தெரியல…”
” உங்க டாடி..?”
” போய்ட்டாரு…”
”எங்க…?”
”தெரியல…” பின்புறம் நான் அவளோடு பேசிக்கொண்டிருந்த போது.. முன்பக்கக் கதவு தட்டப்பட்டது.
முன்னால் போய் கதவைத் திறந்தேன். நீ… சிரித்தமுகத்துடன் நின்றிருந்தாய்.
”அட.. நீயா.. வா..” என்று விலகி வழி விட்டேன்.
உரிமையோடு உள்ளே வந்தாய். புடவையில் இருந்த.. உன் தலையிலிருந்த பூ மணம் கமகமத்தது..!!
”எந்திரிச்சுட்டிங்களா..?”
”ம்..ம்..! லீவா..?”
” ஆமாங்க..! எப்ப எந்திரிச்சிங்க..?”
” இப்பதான்.. கொஞ்ச முன்னால…” கதவைச் சாத்திவிட்டு உள்ளே போய்.. ஜன்னலையும் சாத்தினேன்.
”சாப்பிட்டிங்களா..?” என்று கேட்டாய்.
” பல்லு கூட வெளக்கல…”
”சாப்பிட ஏதாவது.. பண்றதுங்களா..?”
”அது.. அப்றம்..மொத உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்..” என்று உன் தோளில் கை போட்டு உன்னை அணைத்து.. கட்டிலில் உட்கார வைத்து.. உன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டேன்.
” நான் கல்யாணம் பண்ணா.. நீ.. சந்தோசப் படுவியா.. இல்ல வருத்தப்படுவியா..?”
”ஐயோ.. என்னங்க இப்படி கேக்கறீங்க.. சந்தோசந்தாங்க.. எனக்கு..”
”நெஜமா…?”
”சத்தியமாங்க…!!”
” அப்ப கேட்டுக்க..! நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்..”
உன் முகம் நிஜமாகவே மகிழ்ச்சியடைந்தது.
”நெஜமாலுங்களா..?”
”ம்..ம்..!!” உன் கன்னம் தட்டினேன்.
”ஐயோ… கேக்கவே சந்தோசமா இருக்குங்க..! எப்பங்க..?”
” இன்னும் டேட் பிக்ஸ் பண்ணல..! பொண்ணு யாருனு கேக்கமாட்டியா..?”
”யாருங்க…?”
” உனக்கும் அவள தெரியும்..?”
”அப்படிங்களா..? யாருங்க..?”
”நிலா…” என்றேன்.
”யாருங்க.. அது..?”
”என் பிரெண்டோட தங்கச்சி..! அன்னிக்கு கோயில்ல பாத்தமே..?”
” ஓ.. அந்த.. அழகா.. இருக்கும்ங்களே..?”
”கரெக்ட்.. அவளேதான்..! அதும் எப்படி தெரியுமா..?”
”எப்படிங்க..?”
”அவ.. என்னை ஒன் சைடா லவ் பண்ணியிருக்கா.. அத அவ வீட்ல வந்து சொல்லி.. ஒத்தைக் கால்ல நின்னுறுக்கா.. கட்னா.. என்னைத்தான் கட்டிக்குவேன்னு.. அப்பறம் அவ அண்ணன் வந்து என்கிட்ட கெஞ்சி கேட்டான்..! சரி… நாமளும் இனி எத்தனை நாளைக்குத்தான் பொறுக்கியாவே சுத்தறது.. லைப்ல செட்லாகலாமேனூ.. சரினு சொல்லிட்டேன்..! நீ என்ன சொல்ற..?”
” ஐயோ.. நீங்க நல்லாருந்தா.. அது போதுங்க எனக்கு..”
” மனசுல ஒன்னும் வருத்தம் இல்லியே..?”
”ஐயோ இல்லீங்க…”
”கவலப்படாத.. உன்னையெல்லாம் நான் மறக்க மாட்டேன்..!” என்றேன்.
சிரித்தாய். ”பரவால்லீங்க.. நீங்க நல்லாருந்தா எனக்கு அது போதுங்க..! கல்யாணத்துக்கப்பறம் என்னையெல்லாம் மறந்துருங்க… அதான்.. உங்களுக்கு நல்லது..”
”ஏய்.. அதெப்படிடீ உன்ன மறக்க முடியும்..?”
” நா.. ஒன்னு சொன்னா… கேப்பீங்களா..?”
”ம்ம்.. சொல்லுடி..”
”நான் படிச்சவ இல்லீங்க..! அதனால நான் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க..! ஒரு ஆம்பளை கல்யாணத்துக்கு முன்ன.. எப்படி இருந்தாலும்… கல்யாணமாகிட்டா.. வேற பொம்பளையை தேடக்கூடாதுங்க..! அப்படி போனா… குடும்பத்துல நிம்மதியா வாழ முடியாதுங்க..”
” அட…”
கண்கள் நிறைய வியப்போடு.. உன்னைப் பார்த்தேன்..! உண்மையிலேயே.. நீ வித்தியாசமான பெண்தான்..!! உன்மீது எனக்கு.. இருந்த.. என் மதிப்பு.. இன்னும் அதிகமானது…!!!!

வெகுளியாக இருந்தாலும்.. நீ அனுபவமுள்ள பெண்ணாக இருந்தாய். தப்பான இடத்தில் இருந்து வந்த நேர்மையான பெண்..! பெயருக்கு ஏற்றார் போல… சேற்றில் மலர்ந்த செந்தாமரை..!!
உன்னை நெருக்கி உட்கார்ந்து உன் இடையில் கை போட்டு அணைத்துக் கொண்டேன். உன் இடுப்பின் மெல்லிய மடிப்பை தடவினேன். என் மூக்கு உன் கன்னத்தை உரசியது.
”தாமரை…”
”என்னங்க…?”
” உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவடி..”
”இல்லீங்க.. ரொம்ப..ரொம்ப கெட்டவங்க..” என்றாய்.
”சே..சே..! அது.. உன் சூழ்நிலைனால நீ கெட்டுட்டடி..! அது ஒரு விபத்துடி.. அத மறந்துரு..! இப்பத்தான் நீ.. சரியாகிட்ட இல்ல..? இனி உனக்கேத்த மாதிரி யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. நிச்சயமா நீ.. நல்லாருப்ப..!!”
என நான் சொல்ல நீ எதுவுமே சொல்லாமல் சிரித்தாய்.
நான் மறுபடி கேட்டேன்.
”மோசமான எடத்துலருந்து வந்துருந்தாலும் நீ இவ்வளவு நல்லவளா.. நேர்மையானவளா இருக்கியே.. எப்படி தாமரை..??”
புன்னகைத்தாய்.

1 Comment

Comments are closed.