கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறைய இழுத்து நிறுத்தி மெல்ல காற்றை ஒருமுறை வெளியேற்றினாள். சுகன்யாவின் மார்புகள் மேலும் கீழும் சீரான லயத்துடன் ஏறி இறங்கின. பிரஷ்ஷில் பேஸ்ட்டைத் தடவிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பல்துலக்கி முகம் கழுவியதும் தன் முகத்தில் குளிர்ந்த நீரை வாரி வாரி அடித்துக்கொண்டாள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தாள். அனுராதா இன்னமும் கட்டிலை விட்டு எழுந்திருக்கவில்லை.

“அனு… தூங்கினது போதும்… எழுந்திருடி…” மனதில் எழும் உற்சாகத்துடன் அவள் புட்டத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் சுகன்யா.

“அடியேய்ய்ய்ய்ய் வலிக்குதுடீய்ய்ய்ய்ய்.” உரக்க சிணுங்கிய அனு எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தாள். நைட்டியின் முதல் இரண்டு பொத்தான்கள் அவிழ்ந்து கிடந்தன. தன் கைகளை உயர்த்தி முதுகை பின்னுக்குத்தள்ளியதும், முன்னெழுந்த அவளுடைய செழிப்பான மார்புகளின் அழகை காணமுடியாமல் சுகன்யா தன் முகத்தை சட்டெனத் திருப்பிக்கொண்டாள்.

“என்னடி சுகா.. நீயும் பொம்பளை… நானும் பொம்பளை… என் உடம்பைப்பாத்து ஏண்டி இப்படி வெக்கப்படறே? அவள் உரக்கச்சிரித்துக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கி தன் மார்போடு சுகன்யாவை இறுக்கிக்கட்டிக்கொண்டாள். சுகன்யாவின் கன்னத்தில் அழுத்தமாக தன் உதடுகளைப்பதித்தாள்.

“என்னை விடுடீ… என்னடிப் பண்றே நீ? பல்லு கூட துலக்கலே…? மொகம் கழுவிட்டு வந்திருக்கேன்… மூஞ்சை எச்சிலாக்கறே? மொதல்லே உன் நைட்டியோட பட்டனை ஒழுங்காப் போட்டுத்தொலைடி.” சுகன்யா அவளை விருட்டென உதறினாள்.

“சுகா… நீ ரொம்ப அழகா இருக்கேடீ… அனுராதா தன் கண்களை அகலமாக விரித்து புருவங்களை உயர்த்தினாள்.

“ஹேய்… போதும்டீ… என் அழகு என்னான்னு எனக்கு நல்லாத்தெரியும்… நான் வாக்கிங் போறேன்… நீ வர்றயா… இல்லையா? அதைச் சொல்லுடி நீ?”

சுகன்யா நைட்டியை உதறிவிட்டு, வெளிர் காக்கி நிற ஜூன்ஸை மாட்டிக்கொண்டு இடுப்பில் பட்டனை அழுத்தினாள். சிவப்பு நிற டாப்சுக்குள் தன் தலையை நுழைத்தாள். வெளேரேன்றிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவின் லேசை தளர்த்த ஆரம்பித்தாள்.

“சுகா… கிவ் மீ டூ மினிட்ஸ்… நானும் உங்கூட வர்றேன்டீ.” பாத்ரூமுமை நோக்கி துள்ளி ஓடினாள் அனுராதா.

நுழைவாயிலில், பார்க்கில் நடப்பவர்களின் வசதிக்கென அமைக்கப்பட்டிருந்த நடைபாதையின் சுற்றளவு ஒன்றரை கிலோமீட்டர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தோழிகள் இருவரும் சீரான வேகத்தில் பார்க்கை மவுனமாக இருமுறை சுற்றிவந்தார்கள்.

“சுகா… இன்னைக்குத்தானே முதல்நாள்… இரண்டு ரவுண்டு போதும்டீ…” அனு ஒரு மரத்தின் நிழலில் தன் காலை நீட்டியவாறு உட்கார்ந்துகொண்டாள்.

“நாளையிலேருந்து, நான் தினமும் பார்க்குக்கு வரப்போறேன்.” சுகன்யா சீராக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் சவாசனத்தில் கிடந்தாள்.

“காலையிலே சரியா ஆறுமணிக்கு வந்தாக்கூட போதும். நிதானமா நடந்துட்டு, ரூமுக்கு போய் குளிச்சுட்டு, ஃபிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு, கிளாஸுக்கு டயமுக்கு போயிடலாம்.” அனு சொன்னதை சுகன்யாவும் ஆமோதித்தாள். உதட்டின் மீது பூத்திருந்த வியர்வை முத்துக்களை புறங்கையால் மெல்லத் துடைத்துக்கொண்டாள்.

“திஸ் ஈஸ் ரியலி… ப்யூட்டிஃபுல் ப்ளேஸ். அயாம் வெரி வெரி ஹேப்பி டுடே..” சுகன்யா எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய முன் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.

“ரூம்ம்ம்ம்ம்… ரூம்ம்ம்ம்ம்ம்ம்…” அனுவின் செல் வண்டாக ரீங்காரமிட்டது.

* * * * * *

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.