ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

விஸ்வா, “இப்போ மட்டும் என்ன?”

டாக்டர் மதுசூதன், “இப்போ உனக்கு ஒரு வடிகால் தேவை. அதுதான் உண்மை. Why don’t you just have sex with Vanitha. இந்தக் காதல் கல்யாணம் விவாகரத்து இதை எல்லாம் கொஞ்சம் மறந்துட்டு வாரம் ஒரு முறையோ ரெண்டு முறையோ வனிதாவை அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொல்லி ஆசை தீர கொஞ்ச நேரத்தை கழிச்சா என்ன? நீ அவளை எதிரியா பார்க்கலை. ஒரு ஃப்ரெண்டா மட்டும் நினைச்சு அமெரிக்க கலாசாரத்தில் சொல்லற மாதிரி friends-with-benefits அப்படி கொஞ்ச நாள் இருக்கலாமே?”

விஸ்வா, “அவளும் சந்திரசேகரும் இருப்பது போல் நினைச்சாலே எனக்கு மூட் போயிடுது. அவகூட என்னால் இருக்க முடியுமான்னு தெரியலை”

டாக்டர் மதுசூதன், “உனக்கு கர்னல் ஷர்மாவை நல்லா தெரியும் இல்லையா?” என்று பேச்சை வேறு திசையில் திருப்பினார்.

விஸ்வா, “எஸ் அஃப்கோர்ஸ்!”

டாக்டர் மதுசூதன், “அவரோட மண வாழ்க்கையைப் பத்தி நீ என்ன நினைக்கறே?”

விஸ்வா, “நான் பார்த்தவரை ரொம்ப் ideal couple”

டாக்டர் மதுசூதன், “Really. நான் அவரை அடுத்த முறை பார்க்கும் போது அவரிடம் சொல்லணும். ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

விஸ்வா, “என்ன?”

டாக்டர் மதுசூதன், “அவரோட மூணு குழந்தைகளுக்கும் அவர் அப்பா இல்லை”

விஸ்வா, “என்ன சொல்லறீங்க?”

டாக்டர் மதுசூதன், “அவருடைய ஸ்பர்ம் கவுண்ட் ரொம்ப கம்மி. அவரால் குழந்தை கொடுக்க முடியாது. ஆனா, அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தைகள்ன்னா உயிர். அந்த கால கட்டத்தில் Invitro-fertilisation எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. யாரோ குழந்தையை தத்து எடுத்து வளற்பதில் அவங்க ரெண்டு பேருக்கும் ஈடு பாடு இல்லை. குழந்தை பெத்துக்கறதுக்காக உடலுறவில் ஈடு படறதில் அவங்க மனைவிக்கு ரொம்ப அருவெறுப்பு. ரொம்ப செயற்கையான சேர்க்கையா இருக்கும்ன்னு அவர் மனைவி நினைச்சாங்க. ஆனா அவரோ தன் மனைவி சந்தோஷமா அப்படிப் பட்ட உடலுறவில் ஈடு படணும்ன்னு விருப்பப் பட்டார். கணவன் மனைவி ரெண்டு பேரும் தீர ஆலோசித்து முடிவு எடுத்தாங்க. அவரே அவருடைய மூணு குழந்தைகளுக்கும் அப்பாவை தேர்ந்து எடுத்தார். தேர்ந்து எடுக்கப் பட்ட ஆணுடன் மனைவியை ரகஸியமா பழக வைத்தார். அவங்க ஃபெர்டைல் சைக்கிள் சமயத்தில் ஒரு வாரம் தன் மனைவியை அவர் தேர்ந்து எடுத்த ஆணுடன் தனியா தங்க வைத்தார்.”

விஸ்வா, “வாவ், என்னால் நம்ப முடியலை. நிச்சயம் அவங்க ஐடியல் கப்பிள்தான்”

வாய்விட்டுச் சிரித்த டாக்டர் மதுசூதன், “அப்படி இருந்தும் அவர் மனைவி ரெண்டாவுது குழந்தைக்காக கருத்தரிச்ச பிறகு கணவன் மனைவிக்கு இடையே விரிசல். காரணம், தன் மனைவி தன்னை குறைவா நினைக்கறாளோன்னு அவருக்கு பயம், குழந்தை கொடுத்த ஆள் மேல் பொறாமை. அவருடைய மனைவிக்கும் குழந்தை கொடுத்தவருடன் நட்பான ஒரு நெருக்கம் அதிகமாகி இருந்தது. ஆனா உடலுறவு இல்லை. உண்மையில் அந்த சமயத்தில் அவருக்கு தன் கணவன் மேல் இருந்த காதல் உச்ச கட்டத்தில் இருந்தது. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆறு மாசம் ஆச்சு. சந்தோஷமா மூணாவுது குழந்தைக்கு தயாரானாங்க”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.