ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 33

விஸ்வா, “உனக்கு எப்படித் தெரிய வந்தது?”

சந்தியா, “எங்கிட்டே இருந்து சந்திரசேகர் சார் கெஸ்ட் ஹவுஸ் சாவியை வாங்கிட்ட பிறகு சந்திரசேகர் சாரும் வனிதா மேடமும் காரில் ஒண்ணா போயிட்டு ரெண்டு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பி வர்றதைப் கவனிச்சு இருக்கேன்”

விஸ்வா, “வேறு யாருக்காவுது இந்த விஷயம் தெரியுமா?”

சந்தியா, “I don’t think so. என்னதான் அவங்க ரெண்டு பேரும் அப்படி நடந்துகிட்டாலும் அவங்க ரெண்டு பேர் மேலயும் கம்பனியில் இருக்கறவங்களுக்கு எல்லாம் ரொம்ப மரியாதை. அப்படி நடந்துக்கக் கூடும்ன்னு யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டாங்க”

விஸ்வா, “உனக்கு இந்த விஷயம் தெரியுங்கறதை வனிதாகிட்டே சொல்லாதே”

சந்தியா, “உங்ககிட்டே நான் ஒரு பர்சனல் விஷயம் கேட்கலாமா?”

விஸ்வா, “என்ன?”

சந்தியா, “வனிதா மேடத்துக்காக இல்லைன்னாலும் உங்க ரெண்டு குழந்தைகளுக்காகவாவுது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்.”

விஸ்வா, “சேர்ந்து ஃப்ரெண்ட்ஸா குழந்தைகளுக்கு பேரண்ட்ஸா வாழ முடியும் ஆனா கணவன் மனைவியா வாழ முடியுமான்னு தெரியலை”

சந்தியா, “ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

விஸ்வா, “சாரி. அது ரொம்ப பர்சனலான விஷயம்”

சந்தியா, “அப்படின்னா சீக்கிரம் வனிதா மேடத்துக்கு விவாகரத்து கொடுத்து அவங்களுக்கு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுங்க”

விஸ்வா, “என் குழந்தைகளை வேற ஒருத்தனுக்கு விட்டுக் கொடுக்கச் சொல்லறியா?”

சந்தியா, “எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க உங்க குழந்தைகள்தான். அவங்க எதிர்காலத்தில் உங்களுக்கு அக்கறை இருந்தா அதைச் செய்யுங்க. ஆண் துணை இல்லாமல் குழந்தையை வளர்க்கறதைப் பத்தியும் அப்பா இல்லாமல் போனாலும் அந்த ஸ்தானத்தில் ஒருத்தர் இல்லாமல் வளரும் குழந்தையைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும்”

விஸ்வா, “ஏன்?”

சந்தியா, “என் குழந்தைக்கு ஏழு மாசம் ஆன போது என் வீட்டுக்காரர் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டார்”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.