விஸ்வா, “ஏன்னா அவ தன் உடலை வேற ஒருத்தனுக்குக் கொடுத்தா. அவளா வரவைச்சுட்டது”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, அவ உன் அனுமதி இல்லாமல் தன் உடலை வேறு ஒருத்தன்கூட பகிர்ந்துகிட்டா. அது பெரிய தப்பு. ஆனா குழந்தைகள் மேஜர் ஆகும் வரை உனக்கு இருக்கும் அதே உரிமை வனிதாவுக்கும் இருக்கு. யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும். அதனால் தான் டைவர்ஸ்ஸுக்குப் பிறகு அவ என்ன செய்யணும்ன்னு உன்னை யோசிக்கச் சொன்னேன். நாளைக்குப் பார்க்கலாம்” என விடை கொடுத்தார்.
விஸ்வாவின் மனக் குமுறல் பன் மடங்கானது …
டாக்டர் அமுதாவின் ஆலோசனை அறை …
வனிதா, “என்ன மேம். எதுக்கு வரச் சொன்னீங்க?”
டாக்டர் அமுதா, “கவுன்சிலிங்க். வேற எதுக்கு?”
வனிதா, “I thought counseling is over”
டாக்டர் அமுதா, “அதை முடிவு எடுக்க வேண்டியது நீ இல்லை”
வனிதா, “ஆனா, எனக்கும் சந்திரசேகருக்கும் இடையே நடந்த ஒவ்வொண்ணும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை”
டாக்டர் அமுதா, “ஏன்?”
வனிதா, “I am ashamed of myself”
டாக்டர் அமுதா, “சரி என் கிட்டே சொல்ல வேண்டாம். விஸ்வாகிட்டே நேரடியா சொல்லறையா?”
Endi so nuga
It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .