டாக்டர் அமுதா, “சோ, அந்த சமயத்தில் சந்திரசேகர் சொன்னதை உண்மைன்னு நம்பினே இல்லையா?”
வனிதா, “எஸ்”
டாக்டர் அமுதா, “இருந்தாலும் வனிதா. கல்யாணம் ஆன பிறகு வேற ஒருத்தனுடன் உடலுறவு வெச்சுக்கறது உன் மனத்தை உறுத்தலை?”
வனிதா, “உறுத்துச்சுதான். ஆனா விஸ்வாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்க … ” என்றவளை தடுத்து நிறுத்திய
டாக்டர் அமுதா, “நான் காரணத்தைப் பத்தி கேட்கலை. உன் மன உறுத்தலை பத்தி மட்டும் தான் கேட்டேன்”
வனிதா, “மன உறுத்தல் இருந்ததுதான்”
டாக்டர் அமுதா, “என்ன மன உறுத்தல்?”
வனிதா, “I was worried”
டாக்டர் அமுதா, “எதைப் பத்தி?”
வனிதா, “விஸ்வாவுக்கு அது பிடிக்காதுன்னு தெரியும். அவருக்கு தெரிஞ்சா ரொம்ப அப்ஸெட் ஆவான்னு மனம் உறுத்துச்சு.”
டாக்டர் அமுதா, “ஒரு வேளை நீ விஸ்வாவுக்கு சந்திரசேகர் உன்னிடம் கேட்டதைபத்தி சொல்லி அவனும் அதுக்கு சரின்னு சொல்லி இருந்தா?”
வனிதா, “விஸ்வா நிச்சயம் அதுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்க மாட்டார்”
டாக்டர் அமுதா, “நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஒரு வேளை விஸ்வா அதுக்கு சரின்னு சொல்லி இருந்தா உன் மனத்தில் அந்த உறுத்தல் இருந்து இருக்குமா?”
வனிதா, “நோ! … I don’t know. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
டாக்டர் அமுதா, “விஸ்வாவுக்கு பிடிக்காது, அவருக்கு தெரிஞ்சா ரொம்ப் அப்ஸெட் ஆயிடுவார்ன்னு உனக்கு தோணி இருக்கு. ஆனா, வேற ஒருத்தரோட செக்ஸ் வெச்சுக்கறதே தப்புன்னு தோணலையா?”
Endi so nuga
It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .