காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 69

ஏய், பேசிக்காவே நான் புத்திசாலிதாண்டி! உன் கூட சேந்ததுக்கப்புறம்தான், கொஞ்சம் மழுங்கிடுச்சி என்று பதிலுக்கு கிண்டல் செய்தாலும், பின் சீரியசாகச் சொன்னாள்.

நீங்க பிரச்சினைக்கு உள்ள இருந்து யோசிச்சீங்கடி! நான் வெளிய இருந்து யோசிச்சேன். அவ்ளோதான் வித்தியாசம். எனக்கு எத்தனையோ குழப்பமான சமயத்துல, நீ கரெக்ட்டான ஐடியா கொடுத்ததில்லையா? அது மாதிரிதான் என்றாள்!

லாவண்யா பேச்சு, அவள் மேலிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாவ்ற்றையும் அனைவரிடத்திலும் கூட்டியிருந்தது.

தாத்தாதான் கேட்டார், எப்பிடியும் எங்களுக்கு இந்த விஷயம் தோணலைல்ல?! அதுவும், நீ, உன் ஃபிரண்டைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்குறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. உங்களுக்குள்ள இத்தனை வருஷப் பழக்கம் இருந்திருக்கு.

ஆனா, என்னைப் பத்தியும், மதனைப் பத்தியும் கூட சரியா தெரிஞ்சி வெச்சிருக்கியே. அது பெரிய விஷயம்தாம்மா என்று பாராட்டினார்.

அப்படில்லாம் இல்ல தாத்தா. யாருன்னு தெரியாமியே என் மேல பாசம் காமிச்ச ஆளு நீங்க. எனக்காக மதன் கிட்ட கூட சண்டைக்கு போனிங்க. அவ்ளோ நல்லவரு தாத்தா நீங்க. அதுனால உங்களைப் புரிஞ்சிக்கிறது ஈசி தாத்தா என்று சிரித்தாள் லாவண்யா!

அக்காதான் சீண்டினாள். சரி, தாத்தாவை ஈசியா புரிஞ்சிக்கலாம். மதனை எப்படி புரிஞ்சிகிட்ட? ஆரம்பத்துல என்கிட்ட எவ்ளோ கோபமா பேசியிருக்கான் தெரியுமா? ஆனா, நீ அவன்கிட்ட அதிகம் பேசுனதே இல்லையே? அப்புறம் எப்படி….?

லாவண்யா படு அலட்சியாமாய் சொன்னாள்.

யாரு அவன் கோபப்படுவானா? அதெல்லாம் சும்மா! தாத்தாவைப் புரிஞ்சிக்கிறது கூட கொஞ்சம் சிரமமா இருந்தது. மதன்லாம் ஒண்ணுமே இல்லை. அவன் கோபம் வர்ற மாதிரி நடிப்பான். அவ்ளோதான். ஆனா, உள்ளுக்குள்ள கோவமே இருக்காது.

உங்க எல்லார் மேலியும் அவனுக்கு பாசம் அதிகம். ஆனா வெளிக்காட்டிக்க மாட்டான். இவன் கோபம் எல்லாம், மத்தவிங்க தன்னை சாதாரணமா நினைச்சிடக் கூடாது, யாரும் ஏமாத்த முயற்சி பண்ணக் கூடாதுன்னு போட்டுகிட்ட முகமூடி என்றாள்.