காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

எனக்கு வேண்டியதெல்லாம், இந்த டைம்ல அவ ரொம்ப சந்தோஷமா இருக்கனும். தன் கணவன் மேல முழு அன்பையும் காட்டனும். ரெண்டு பேரும் நல்லா இருக்கனும். முக்கியமா, மத்தவங்க மேல மட்டும் அன்பைக் காட்டிட்டு இருந்தவ மேல, முழு அன்பைக் காட்ட ஒருத்தர் இருக்காருன்னு, அவ புரிஞ்சிக்கனும்!

எனக்குத் தெரியும், அவ மனசுக்கு, அவ எப்பவும் நல்லா இருப்பான்னு. அவ இடத்துல, நான் இருந்திருந்தா கூட, அவளை மாதிரி நடந்திருப்பேனான்னு எனக்கு தெரியாது. அந்தளவுக்கு அன்பு காட்டுறவ அவ, அப்படிப்பட்டவளோட முழு அன்பும், ஹரீசுக்கு போகனும். அதே அன்பை ஹரீஸ்கிட்ட இருந்து, அவ வாங்கனும். அதான் நான் தள்ளி நிக்குறேன். புரியுதா?

இந்தச் சமயத்துல அவ மனசுல ஹரீஸ் மட்டும்தான் இருக்கனும். அவ குழப்பத்துல இருந்தாலும் பராவாயில்லை. இந்தச் சமயத்துல ஹரீஸ் காட்டுற அன்பு, அவளுக்கு வாழ்க்கை முழுக்கச் சந்தோஷத்தைக் கொடுக்கும். எனக்கு அதுதான் வேணும்!

இதுவரை, லாவண்யாவின் மனதினுள் ஏதேனும் குழப்பம் இருந்திருந்தால், அது அத்தனையும் அன்று நீங்கியிருந்திருக்கும். அந்தளவு நான், அவள் மனதில், அந்த நிமிடம் விஸ்வரூபமெடுத்திருந்தேன். என் அக்கா வெளிப்படையாக காட்டிய தூய அன்பிற்கு, சற்றும் குறையாதது, என் அன்பு என்று அன்று நான் நிரூபித்திருந்தேன்.

சற்றே நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், ஆசையுடனும் என்னைப் பார்த்த லாவண்யா, பெரு மூச்சுவிட்டபடி திரும்பச் சென்றாள்.

சென்றவளை லாவண்யா என்று கூப்பிட்டேன்.

வந்து…இங்கப்…

நான் சொல்ல வருவதற்குள், என்னைப் புரிந்திருந்த லாவண்யாவே பதில் சொன்னாள். டோண்ட் ஒர்ரி, அவகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று புன்னகைத்தாள்.

அதன் பின் நான் மீண்டும் தனியானேன். அக்கா ஹரீசுடன் கிளம்பி விட்டாள். லாவண்யாவும் கிளம்பி விட்டாள். அக்கா இல்லாத வீட்டிற்கு, அவளால், முன்பு போல் வர முடியாது.

என் வாழ்வின் மூன்று மிக்கிய ஜீவன்கள், ஒரே நேரத்தில், என்னிடமிருந்து விலகி இருக்கும் சூழ்நிலை எனக்கு ஒருவித மனநிம்மதியின்மையைக் கொடுத்தது.

அதனாலேயே, நான் என் வெறியை, என்னுடைய நிறுவன விஸ்தரிப்பில் காட்டினேன். முதல் 4 மாதங்கள், நிறுவனத்தில் சில முக்கிய முடிவுகள் எடுத்து பெரிதாக விஸ்தரிக்க ஆரம்பித்திருந்த நான், அடுத்த 4 மாதங்களில் தான், என்னுடைய தந்தையை, என் நிறுவனத்திலிருந்து ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கும் வேலையை ஆரம்பித்தேன்.

நான் நினைத்தது போல் என் தந்தை எளிதில் விட்டுக் கொடுத்துவிடவில்லை. இதற்காகத்தானே, கட்டிய மனைவியையே ஏமாற்றினார். பல வழிகளில் அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டார். ஒரே சமயத்தில், விஸ்தரிப்பும், தந்தையின் சவால்களையும் சமாளித்து நான் விரும்பும் நிலைக்கு கொண்டு வரவும் எனக்கு அந்த 8 மாதங்கள் தேவைப்பட்டிருந்தது.