காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 62

லாவண்யாவின் கேள்விகளில் இருந்த தர்க்கம், எல்லாரையும் யோசிக்க வைத்தது. சிறிது நேர யோசனைக்குப் பின், தாத்தாதான் சொன்னார்.

நீ சொல்றது சரிதான்மா! நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன். ச்சே! அவிங்களைக் கூப்பிட்டு, கட் அண்ட் ரைட்டா, இது ஒத்து வராதுன்னு சொல்லிடுறேன்!

அதற்கும் பதில், லாவண்யாவே சொன்னாள்.

அவசரப்படாதீங்க தாத்தா! நான் சொன்னது எல்லாமே என் டவுட்டுதான். எதுவும் கன்ஃபர்ம் கிடையாது. அப்படியிருக்கிறப்ப, சந்தேகத்தின் பலனை அவிங்களுக்கும் கொடுக்கனுமில்லையா? ஒரு வேளை அவிங்க உண்மையாலுமே மனசு மாறியிருந்தா?

தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார். சரி, நான் என்ன பண்ணனும்ன்னும் நீயே சொல்லும்மா!

இதையேச் சொல்லுங்க தாத்தா. முதல்ல, பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பாசம் காட்டச் சொல்லுங்க. அவங்க, அப்பா, அம்மாவா எத்துக்குற வரைக்கும் பொறுமையா நடந்துக்கச் சொல்லுங்க. அவிங்க ஏத்துகிட்டா, நீங்க ஏத்துக்குறதுல எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லுங்க என்று சொல்லி நிறுத்தியவள்… பின் தயங்கிச் சொன்னாள்.

அதுனால, இப்போதைக்கு மதன் இங்கியேதான் படிப்பான். ஹைதராபாத்லாம் போகலைன்னு சொல்லுங்க என்றாள்.

தாத்தா சரி என்று சொன்னார். ஆனால், அக்காவோ, அவளையே யோசனையாகப் பார்த்தாள்.

என்னடி அப்படி பாக்குற? நான் சொன்னது தப்பா?

நீ சொன்னது எல்லாம் சரிதான். ஆனா, நீ இன்னும் முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலைன்னு தோணுது!

ஏய்… அப்படில்லாம் இல்லை என்று பதறினாள் லாவண்யா!