காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

டேய், என்று என் சட்டையை இறுகப் பற்றினான்!

உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்ன்னா, ஒழுங்கா தள்ளி நில்லுங்க, இல்லாட்டி கேள்வி வரத்தான் செய்யும்!

இப்போது அவன் அடிக்க கை ஓங்கியிருந்தான்!

நான் அவன் கையைப் பிடித்து நிறுத்தினேன்! இதுவரையிலான எனது உடற்பயிற்சிகளும், நான் சென்றிருந்த கராத்தே கிளாஸ்களும், இதைப் பற்றி எதுவுமே தெரியாத இவர்களை, என் முன் தூசு போல் காட்டியது!

இருந்தும் சொன்னேன், நீங்க என்னை 10 அடி அடிச்சாலும் எனக்கு அசிங்கமில்லை! ஆனா, நான் திருப்பி ரெண்டு அடி அடிச்சாலும், காலேஜ்ல உங்களுக்குதான் அசிங்கம்! ஏன்னா, நீங்க சீனியர், நான் ஜீனியர்!

தவிர, நான் கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ்லாம் போயிருக்கேன், நிமிஷத்துல உங்களை என்னால அடிச்சிட முடியும். அதுனால கொஞ்சம் யோசிச்சி கை வைங்க!

எனது தைரியமும், தெனாவெட்டான பேச்சும் அவனை கொஞ்சம் யோசிக்க வைத்தது! தவிர தூரத்தில் இருந்து சிலர் இதை கவனிப்பது போலும் இருந்தது! இது தன்மானப் பிரச்சினையாச்சே?

ஆனாலும், விஜய் கொலை வெறியில் இருந்தான்! என்னா மிரட்டுறியா? அடிச்சிட்டு போயிடுவியா? எங்கன்னாலும், இங்கதான் வந்தாகனும்! சீனியர்ஸ் மேல கை வெச்சிட்டு தைரியமா இருந்துடுவியா?

ஹலோ, நான் அடிக்கல்லாம் வரலை. லவ்வைச் சொல்லத்தான் வந்தேன். நீங்கதான் சண்டைக்கு வர்றீங்க! என்னை அடிக்க வந்தா, நான் ஒண்ணும் வேடிக்கை பாத்துட்டிருக்க மாட்டேன்! பிரிச்சு மேஞ்சுடுவேன்!
இப்போதுதான், அவனுடைய இன்னொரு நண்பன் ப்ரேம் வாய் திறந்தான்? டேய், நானும் பாக்குறேன், ஓவரா போயிட்டிருக்க! என்ன நினைச்சிட்டிருக்க? உனக்கு கராத்தே தெரியும்னு திமிரா? பாத்துரலாமா?

அந்தக் கூட்டத்திலேயே நல்லவன் ப்ரேம்தான்! அதனால், அவனுக்குரிய மரியாதையை கொடுக்க நினைத்தேன்!

ஏன் சீனியர், இவிங்க சிஸ்டர்ன்னா, லவ் பண்றேன்னு சொல்றது கூட கொலைக் குத்தம்! ஆனா, இன்னொரு பொண்ணுன்னா, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிச்சிருவேன்னு கூட இவிங்க மிரட்டலாம் இல்லை?

இப்போதுதான் அவர்களுக்கு ஏதோ விஷயம் புரிவது போல் இருந்தது! ஏற்கனவே, ப்ரேம், அதற்காக விஜய்யை திட்டியிருந்தான்.

இருந்தும் இப்போதும், ரமேஷ் திமிறினான்! டேய், லாவண்யாகிட்ட லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது?

ப்ரேமை பார்த்துக் கொண்டிருந்தவன், அவனை முறைத்தேன். விஜய் தங்கச்சிகிட்ட, நான் லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது? ப்ரண்டு தங்கச்சிக்காக நீ வரலாம், அக்காவோட ஃப்ரண்டுக்காக நான் வரக் கூடாதா?