அதன் பின் என் அக்கா, வீட்டுற்கு வந்தவுடன், அவளிடம் வேண்டுமென்றே, சண்டையிட்டாள்!
நேத்து, என்னான்னு தெரியாமியே அவனைத் திட்டுன? இப்ப என்ன பண்ணப் போற? அவன் எவ்ளோ ஃபீல் பண்ணான் தெரியுமா?
யாரு, அந்த சிடுமூஞ்சி ஃபீல் பண்ணுச்சா? இதை என்னை நம்பச் சொல்றியா?
ஏய், என் தம்பி சிடு மூஞ்சிதான்! நீ ரொம்ப யோக்கியமா? நீ ஏண்டி நேத்து அழு மூஞ்சியா இருந்த?
அது, இவன் எப்படி, அப்டி பண்ணலாம்னு, சின்ன கோவம்! அதான்!
அதுக்கு, அப்புடித்தான் திட்டுவியா? நானே அவனை திட்டினதில்லைடி!
விஜய் தப்புக்கு, அவன் சாரி கேட்டுட்டான்! நீ பண்ன தப்புக்கு என்ன பண்ணப் போற? போய் சாரி கேளு!
அதெல்லாம் நான் தனியா கேட்டுக்குறேன்!
நேத்து திட்டுறப்ப மட்டும், என்னை வெச்சுகிட்டே திட்டுன! இப்ப சாரி கேக்கனும்னா வலிக்குதோ!
ஏய், நான், மதன்கிட்ட பேசிக்கிறேன். நீ, உன் வேலையைப் பாரு!
அது சரி, நீங்க லவ் பேர்ட்ஸ், உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்! நமக்கெதுக்கு இந்த வம்பு என்று நக்கலாகச் சொன்னாள்?!
இது எல்லாமே, என் வீட்டில், என் முன்பே நடந்தது! நான் அதை கண்டு கொள்ளாமல் லேப் டாப்பில் நோண்டிக் கொண்டிருந்தேன்! அவள் எவ்வளவு கோபித்தாலும், உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது போல் தோன்றியது எனக்கு!
என் அக்காவின் முன் எதுவும் சொல்லாதவள், பின் கிளம்பும் போது, என்னருகே வந்து சாரி என்று மெல்லியதாகச் சொன்னாள்! பின், தாங்க்ஸ் என்றும் சொல்லி விட்டும் சென்றாள்!
அதன் பின், என் அக்கா, நான் இருக்கும் போது, அவளை அதிகம் சீண்டுவாள்! அவளுக்கும் அது லேசாக பிடித்திருக்கும் போலிருந்தது! இருந்தாலும் கோபித்துக் கொள்வாள்! கோபித்தாலும், ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள்!