காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

அதன் பின் சில நாட்கள் கழித்து, லாவண்யாவிற்கு வேறொரு பிரச்சினை வந்தது. அது, அவளுடைய வகுப்புத் தோழன் விஜய், லாவண்யாவிடம் ப்ரபோஸ் பண்ணியதுதான். வெறும் ப்ரபோஸ் அல்ல அது. தன்னை கண்டிப்பாக திரும்பி லவ் பண்ணியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதுதான், அவளுடைய பிரச்சினை.

ஏற்கனவே, அவன் தொடர்ந்து ஃபாலோ செய்வதும், அவளிடம் வழிவதும் என்று இருக்கும் போதே, அவன் எண்ணம் லாவண்யாவிற்கும், மதனின் அக்காவிற்கும் நன்கு தெரிந்தது. அதனாலேயே கொஞ்ச நாட்களாக அவனை அவாய்ட் செய்து வந்தாள் லாவண்யா.

அவனாக புரிந்து விலகிக் கொள்வான் என்று நினைக்கையில், திடீரென வந்து லவ்வைச் சொன்னதும், திரும்ப லவ் பண்ண வேண்டும் என்றதும் அவளுக்கு கடுப்பானது.

அவனை மீண்டும் அவாய்ட் செய்கையில், இரண்டு நாட்கள் கழித்து, அவன் நண்பன் ரமேஷூடன் வந்தவன், ஒழுங்கா லவ் பண்ணு, இல்லை ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றான்.

அதில் மிகவும் பயந்து போனாள் லாவண்யா! அதை அப்படியே மதனிடம், அவனுடைய அக்கா, லாவண்யா சொல்லக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல், அவள் இல்லாத போது சொல்லிவிட்டாள்.

இதுக்கு எதுக்கு பயப்படுறா அவ? அவன் வீடு தெரியுமில்ல? நேரா, அவிங்க அம்மாகிட்ட போயி, உங்க புள்ளை இப்படி சொல்றாரு ஆண்ட்டி, நான் அவரை லவ் பண்ணட்டுமா, இல்ல ஆசிட் அடிக்க மூஞ்சியைக் காமிக்கட்டுமான்னு கேக்கச் சொல்லு. அவன் ஒரு ஆளுன்னு, பயப்படுறா இவ, என்கிட்ட மட்டும்தான் வீராப்பெல்லாம்… என்று முணுமுணுத்து விட்டு சென்றான் மதன்.

அதே சமயம், இந்தச் சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்று நினைத்த அவன் அக்காவோ, லாவண்யாவிடம்,

ஏண்டி அந்த விஜய் ஒன்னும் சின்னப் பையன் இல்லீல்ல? ஓரளவு நல்லாதானே இருக்கான். என்னா அரியர் வெச்சிருக்கான் அவ்ளோதானே? எப்டியும் உங்க வீட்ல, ஒரு நல்ல மாப்பிள்ளையை பாக்க மாட்டாங்க. அப்ப, பேசாம இந்த விஜய்யை லவ் பண்ண வேண்டியதுதானே என்று சீண்டினாள்.

ஏய் போடி! நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு பாத்தா, அவனுக்கு பேசுற?

உனக்காகத்தாண்டி பேசுறேன். அவனுக்கென்ன குறை? உன்னை விட வயசு கம்மியா? இல்லை கல்யாணம் பண்ணா, இந்த சொசைட்டிதான் ஏதாவது சொல்லுமா? அப்புறம் என்ன? அதுதானே உன் கவலை எப்பவுமே?

லாவண்யா முறைத்தாள்.

ம்க்கும்.. எங்ககிட்டதான் இந்த முறைப்பெல்லாம். அந்த விஜய்கிட்டன்னா பம்முவ! உனக்கெல்லாம், விஜய்தான் கரெக்ட்டு. புடிச்சா லவ் பண்ணு, புடிக்கலைன்னா, புடிக்கிற வரைக்கும் காத்திருப்பேன்னு சொல்றவனை எல்லாம் கண்டுக்க மாட்டீங்க! என்னமோ பண்ணு போ! என்று சென்று விட்டாள்.

ஆனால், அவனுடைய அக்காவிற்கு தெரியும். மதனின் காதல் லாவண்யாவின் மனதில் வேரூன்றுவதற்கான வாய்ப்பை அவள் ஏற்படுத்தி விட்டாள் என்று!