காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

அந்த 8 மாதங்களில் நான், என் அக்கா, லாவண்யா என யாரைப் பற்றியும் யோசிக்காமல் வெறி பிடித்தாற் போல் வேலை செய்தேன். மாதக் கணக்கில் நான் கம்பெனி கெஸ்ட் அவுசிலும், ட்ரிப்பிலும் மட்டும் இருந்தேன். ஆஃபிஸ் பர்சனல் நம்பரைத் தவிர வேறெதையும் பார்க்கவே இல்லை. வீட்டிற்கும் அதிகம் போகவில்லை.

இது எல்லாவற்றையும் முடித்து விட்டு இனி லாவண்யாவை மீட் பண்ணி வெளிப்படையாக பேசிடனும்னு நினைத்த சமயத்தில்தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் என் கல்லூரி சீனியர் பிரேம் மூலமாக.

அது, லாவண்யாவிற்கு 1 மாதம் முன்பாகத்தான், அவளுடைய மாமா முறை சார்ந்த ஒருவருடன் (சித்தியின் தம்பி) திருமணம் நடந்திருந்தது என்ற உண்மைதான்.

அதை விட அதிர்ச்சி, அது, ஒரு வலுக்கட்டாயமாக நடந்த திருமணம் என்பதும், அவள் எதிர்பாராத தருணத்தில், அவளை கோவிலுக்கு கூட்டிப் போவது போல் சென்று, தாலி கட்டப்பட்டது என்றும், இதற்கு அவளுடைய தந்தை, சித்தி அனைவரும் உடந்தை என்பதும் தெரிய வந்தது.

நடந்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தவள், இயல்பாக பயந்த சுபாவம் கொண்டவள், மிகவும் கோபாவேசம் கொண்டு, அன்றே போலீஸ் ஸ்டேஷனில் சொந்த அப்பா முதற்கொண்டு அனைவரின் மீது புகாரும், பின் உடனே, வீட்டைக் காலி செய்து விட்டு ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என்பதும், இதெல்லாம் நடந்து 15 நாட்கள் கழித்து, அந்தத் தாலி கட்டியவன், குடித்து விட்டு ஒரு ஆக்சிடெண்டில் அடிபட்டு இறந்து விட்டான் என்பதும், அப்பொழுதும் அவளுடைய ராசிதான் இதற்கு காரணம் என்று சொந்த வீட்டினராலேயே பேசப்பட்டாள் என்பதும் மிகவும் அதிர்ச்சியளித்தது.

அவள் தேடிப்பிடித்து பார்க்கச் சென்ற போது, அவள் என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக என்னையே வெறித்துப் பார்த்தாள்.

ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு, அவள் பார்த்த பார்வை என்னை மிகவும் உலுக்கியது. ஆனால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான்! அது,

இனி என்னைப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான்.

அக்கா கேட்டான்னா, நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் வெதும்பினேன்.

சரியாக, அதற்கடுத்த நாள்தான் என் அக்கா, அவள் பிரச்சினைக்காக ஃபோன் செய்திருக்கிறாள். இவள் பிரச்சினை பற்றி தெரிந்து என்னைத் திட்டத்தான் கூப்பிட்டிருக்கிறாள் என்று நானாகவே நினைத்து, அவளிடம் சரியாக பேசவில்லை. பின் அவள் மீண்டும் வீட்டுக்கே வந்து பேச முயற்சித்த போது கூட, அவளிடம் பட்டென்று பேசினேன்.