அவ்ளோதான், லாவண்யா கடும் கோபமடைந்தாள்.
ஏய், இனி இந்த மாதிரி லூசுத்தனமா பேசுன கொன்னுடுவேன்!
உனக்கு என்னடா குறைச்சல்?
நானே உன்னை வேணாம்னு சொல்லியிருந்தாலும், ஏண்டா, அப்படிச் சொன்னோம்னு, என்னை நீ ஃபீல் பண்ண வைக்கனும்! அதான் உனக்கு கெத்து! நீ ஃபீல் பண்ண வைப்பன்னு எனக்கு தெரியும்… அதை விட்டுட்டு, இனி இப்படி உளறுன… என்று விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றாள்.
லாவண்யா ஈஸ் பேக் டூ ஃபார்ம்! நான் பாஸாம்… இவ செக்ரட்டரியாம்! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
இப்படியே இரண்டு வாரம் சென்றது! இப்பொழுதெல்லாம் என்னைக் கோபமாகப் பார்ப்பதில்லை. அதே சமயம், அவள் ஏன் அந்தச் சமயத்தில், என்னைத் தேடி வரவில்லை என்று தெரிந்து கொள்ள நெருங்கினால், என்னைப் பார்வையாலேயே முறைப்பாள்.
இடையே ஒரு முறை என்னைத் தேடி வந்தாள்!
என்ன லாவண்யா?
அந்த பர்சேஸ் இஞ்சினியர், கொஞ்சம் தப்பா பேசுறான்.
யாரு, மணியா?
ம்ம்…
என்ன பண்றான்? உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா?
அப்படி இல்ல, ஆனா, நான் இருக்கிறப்ப, அவன் ஃபிரண்டுகிட்ட வேணும்னே தப்பா பேசுறான்!
என்னான்னு?
அவள் உதடுகளைக் கடித்தாள்!
சொல்லு!
நா… நான் சின்ன வயசுலியே புருஷனை உதறிட்டு வந்தவ, அதுனால என்னை ஈசியா கரெக்ட்… அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை!
எனக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும், கேட்டேன்.