காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

உண்மையைச் சொல்லு, அவிங்க இது மாதிரி ஒரு ப்ளானோட தாத்தாவை அப்ரோச் பண்ணதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற! அப்படித்தானே? அது என்னான்னு சொல்லு!

இ… இல்லடி… அது வ… வந்து.

சரி இப்பச் சொல்ல வேணாம். ஒருவேளை, நீ சொன்னது மாதிரி, தாத்தா நடந்ததுக்கப்புறம், அவிங்க ஏமாத்ததான் நினைச்சாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் நீ சொல்லு! ஓகே?!

ஓகேடி!

அப்ப, நான் நினைச்ச மாதிரியே, உண்மையாலுமே, முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலை, அப்படித்தானே?!

அக்காவின் கிடுக்கிப்புடி கேள்வியில் லாவண்யா திணறினாள்…

அக்காவோ புன்னகையுடன் சொன்னாள். சரி, நான் நினைச்சது சரியான்னு தெரிஞ்சிக்கதான் அப்படி கேட்டேன். நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறமாச் சொல்லு.

அவர்களுக்கிடையேயான புரிதல், எனக்கும், தாத்தாவுக்கும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இப்படி ஒரு நட்பிற்காக, அக்கா ஆரம்பத்தில் இருந்து, அவள் துணை நிற்பது, மிகவும் சரியே என்று தோன்றியது.

திட்டப்படியே, அவர்கள் ஊரில் இருந்து வந்தவுடன், தாத்தா கொஞ்சம் பிடி கொடுக்காமல் இருந்து, ஒரு 5 நாட்கள் கழித்து, அவர்களிடம் லாவண்யா சொன்ன படியே சொன்னார்.

நீங்க, அவிங்ககிட்ட அன்பா முதல்ல நடந்துக்கோங்க என்று சொன்ன போது கூட லேசாக கடுப்படைந்தாலும், அமைதியாக இருந்தவர்கள், மதன் இங்கதான் படிப்பான், ஹைதராபாத் போக மாட்டான் என்று சொன்னவுடன் வெளிப்படையாக கோபமடைந்தார்கள்.

கோபத்துடன், நீங்கதான் அவிங்களைக் கெடுக்குறீங்க. உங்க காலத்துக்கப்புறம் அவிங்களுக்கு யாரும் துணை வேணாமா? இப்படியே இருங்க என்று கத்தி விட்டுச் சென்றனர்.

முன்பாயிருந்திருந்தால், தாத்தா அதிர்ச்சியடைந்திருப்பாரோ என்னமோ, லாவண்யாவின் பேச்சிலேயே ஓரளவு சுதாரித்திருந்தவர், இவர்களின் கோபத்தால் அதிர்ச்சியடையவில்லை.

நான் கூட நீங்க திருந்தியிருப்பீங்களோன்னு நினைச்சேன். ஆனா, அப்படியில்லைன்னு என்கிட்ட காமிச்சதுக்காக தேங்க்ஸ் என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்துச் சொன்னார். தங்கள் குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில், அவர்கள் கோவத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

தாத்தா வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் சொன்னார். சொல்லி விட்டு, லாவண்யாவிடம்,