மதன மோக ரூப சுந்தரி – 5 15

அடுத்தநாள் காலை ஆரவாரமாக விடிந்தது.. அகழி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! கோயிலை சுற்றிலும் மாக்கோலமும், மாவிலை தோரணங்களும்.. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் கோவிந்தராஜனின் கணீர் குரல்..!!

“சின்னஞ்சிறு பெண் போலே..
சிற்றாடை இடை உடுத்தி..
சிவகங்கை குளத்தருகே..
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்..!!”

வெள்ளையும் காவியுமாய் புதுவர்ணப் பூச்சோடு கோயில் சுவர்கள் பளபளத்தன.. பக்கத்திற்கு ஒன்றாய் பச்சை வாழையுடன் கோயிலின் வாயில்..!! வாயிலில் இருந்து நீண்ட சாலையில் புதிது புதிதாய் நிறைய கடைகள் முளைத்திருந்தன.. பலூன் கடை, பாப்கார்ன் கடை, வளையல் கடை, வாழைப்பழ கடை.. எல்லா கடைகளின் முன்பாகவும் மக்கள் கூட்டம்..!! குழந்தைகளை ஏற்றிக்கொண்டு குடை ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. கன்னியரை சைட்அடிக்கிற காளையர் கூட்டம் ஒன்றும், ராட்டினத்துக்கு போட்டியாய் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தது..!!

ஆண்டு முழுதையும் ஒருவித அழுத்தத்திலேயே கழிக்கிற அகழி ஜனங்கள்.. இறுக்கம் தளர்ந்து சற்று சிரிக்க நினைக்கிற இரண்டு தினங்கள் இவை..!! வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு பங்குனிப் பொங்கல்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற உற்சவம்.. வேறூருக்கு பிழைக்க சென்றிருப்பவர்கள்கூட சொந்தஊருக்கு வந்தடைகிற சமயம்..!! போன வாரமே காப்பு கட்டியாயிற்று.. இந்த இரண்டு தினங்கள் இன்னும் விசேஷமானவை..!!

ஊர்மக்களில் கணிசமான விழுக்காட்டினர் புத்தாடை அணிந்து வலம்வந்தனர்.. எல்லோர் முகத்திலும் ஒரு இயல்பான மலர்ச்சியை காணமுடிந்தது..!! பெரியவர்களை காட்டிலும் சிறுசுகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.. கோயிலுக்கு முன்பு கொட்டிவைத்திருந்த மணலில், கும்மாளமாக குதித்து விளையாடின குழந்தைகள்..!!

அந்த குழந்தைகளிடம் இருந்த உற்சாகத்தின் ஓரளவு.. தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த ஆதிராவிடமும் காணப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..!! நேற்றுமுழுதும் மனதை சூழ்ந்திருந்த குழப்பமேகம், இன்று சற்றே கலைந்து விலகியிருந்தது.. ஷவரில் கொட்டிய வெதுவெதுப்பான நீரை அண்ணாந்து வாங்கிக்கொண்ட அவளது முகத்திலும் ஒருவித தெளிவை உணரமுடிந்தது..!! ஊரில் திருவிழா என்ற உள்ளுணர்வுதான் அவளது அந்த உற்சாகத்தின் ஊற்றுக்கண்..!! சிறுவயது முதலான திருவிழா தொடர்பான நினைவுகள் எல்லாம்.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் முண்டியடித்து கிளம்பின..!!

குளித்துமுடித்த ஆதிரா, உள்பாவாடையை மார்புகளுக்கு மேலாக உயர்த்திக்கட்டி முடிச்சிட்டாள்.. கூந்தலை ஒரு டவல் சுருட்டியிருக்க, இன்னொரு டவலால் தோள்களை மறைத்துக் கொண்டாள்..!! கசக்கிப் பிழிந்த உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தாள்.. திறந்ததுமே பக்கென ஒரு திகைப்புக்கு உள்ளானாள்..!! வெளியே.. வாசலை அடைத்துக்கொண்டு சிபி நின்றிருந்தான்.. அவனது உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை..!! அவனை எதிர்பார்த்திராத ஆதிரா அவ்வாறு திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே.. சிபி படக்கென கதவைத்தள்ளி உள்ளே நுழைந்தான்.. மனைவியின் புஜத்தினை பற்றியிழுத்து முரட்டுத்தனமாக அவளை அணைத்துக் கொண்டான்..!!

“ஐயோ.. என்னத்தான் இது..??” ஆதிரா சிணுங்கியவாறே நெளிந்தாள். அவன் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள்.

“தூங்குறப்போலாம் அப்படியே வந்து ஒண்டிக்கிற.. குளிக்கிறப்போ மட்டும் தனியா விட்டுட்டு வந்துடுற..??” பிடித்தபிடியை விடாமல் சிபி குறும்பாக சொன்னான்.

“ஓ.. வேற என்ன பண்ணனுமாம்..??”

“ம்ம்..?? என்னை கூப்பிட்ருக்கலாம்ல..?? குட்டிப்புள்ளயை குளிப்பாட்டி விட்ருப்பேன்ல..??”

“ம்க்கும்.. ஆசைதான்..!! ஏன்.. நைட்டு போட்ட ஆட்டம் பத்தலையாக்கும்..??”

“யானைப்பசிக்கு சோளப்பொரியை விட்டெறிஞ்சுட்டு.. பத்தலையான்னு வேற கேக்குறியா..?? இங்க கொழுப்பு இருந்தா இப்படிலாம் பேச சொல்லுமோ..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் பின்புறத்தை அழுத்தி ஒரு பிடி பிடிக்க, அவள் விழுக்கென்று கிடந்து துள்ளினாள்.