மதன மோக ரூப சுந்தரி – 5 15

“ஹ்ம்ம்… சரி இதையெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னு பாக்குறியா..?? என்ன பண்றது.. என்னோட அருமை பெருமைலாம் அப்புறம் வேற யார்ட்டபோய் நான் சொல்றது..?? இங்க தூக்கிட்டு வர்ற பொண்ணுகட்டதான சொல்லமுடியும்..?? அவங்கதான கேட்டுட்டு என் கையாலேயே செத்துப் போயிருவாங்க..?? ஹாஹாஹாஹா..!!!!” மணிமாறன் சொல்லிவிட்டு ஒரு குரூர சிரிப்பை உதிர்க்க,

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” ஆதிரா நெஞ்சுப்பந்துகள் விம்ம, உடலை முறுக்கினாள்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தார் மணிமாறன்.. கையைக்கழுவி கைக்குட்டையால் உதடுகள் ஒற்றிக் கொண்டார்.. டைனிங் டேபிளில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்..!! தரையில் புழுவாக துடித்துக் கொண்டிருந்த ஆதிராவின் அருகே வந்து நின்றார்.. எக்கச்சக்க பீதியுடன் தன்னை ஏறிட்டவளை பார்த்து, விஷமப் புன்னகையுடன் கேட்டார்..!!

“என்ன.. வெளையாட்டை ஆரம்பிக்கலாமா..??”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

‘வெடுக் வெடுக்’கென வெட்டிக்கொண்டு கிடந்த ஆதிராவின் புஜத்தை பற்றி.. அப்படியே அவளை கொத்தாக மேலே தூக்கினார் மணிமாறன்..!! சற்றுமுன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே அவளை விசிறித்தள்ளினார்.. கை, கால்கள் கட்டுண்ட ஆதிரா அந்த நாற்காலிக்குள் வசதியாக அடங்கிப் போனாள்..!! மணிமாறன் அவளது முதுகுப்புறமாக நகர்ந்தார்.. நாற்காலியின் பின்னாலிருந்த கைப்பிடியை பற்றி, அப்படியே 45 டிக்ரீக்கு அந்த நாற்காலியை சாய்த்தார்..!! நாற்காலியின் இரண்டு கால்கள் தளத்திலிருந்து உயர்ந்து.. மற்ற இரண்டு கால்கள் மட்டும் மார்பிள் தரையில் உராய்ந்து..

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!”

என காதுகளுக்கு ஒவ்வாத ஒரு இரைச்சலை எழுப்ப.. அந்த நாற்காலியோடு சேர்த்து ஆதிராவை எங்கோ இழுத்து சென்றார்..!!

சமையலறையை விட்டு வெளியேறி அந்த காரிடாரை அடைந்தார்.. இரண்டுபக்கமும் அறைகள் அணிவகுத்திருக்கிற, இடையே ஐந்தாறு அடி இடைவெளியோடு காணப்பட்ட, மிக நீளமான காரிடார்..!! ஆதிராவை நாற்காலியில் இட்டு, அந்த காரிடாரில் இழுத்து சென்றார் மணிமாறன்.. ஏதோ வேண்டாதபொருளை குப்பைவண்டியில் போட்டு இழுத்து செல்வது போல, கூலாக இழுத்து சென்றார்.. உதடுகளை குவித்து ஒரு பழைய ஹிந்திப் பாடலை விசிலடித்து ஹம் செய்தவாறே..!!

ஆதிராவோ ஒரு உச்சபட்ச பீதியில் பதறிக் கொண்டிருந்தாள்.. சாய்வாக நகர்ந்த நாற்காலியில் இருந்து எழ முயன்றாள்.. முடியவில்லை..!! அவளது தொண்டை நரம்புகள் எல்லாம் வெடித்துவிடுவதுபோல புடைத்துக்கொண்டு காட்சியளித்தன.. கழுத்திலும், நெற்றியிலும் வியர்வை பெருக்கெடுத்து வழிந்தது.. வாய்விட்டு அலறி உதவி கேட்கிற உந்துதல் எழுந்தாலும், உதடுகளை பிரிக்கமுடியாதபடி செல்லோடேப்.. மாராப்பு விலகிய மார்புப்பந்துகள் மட்டும் ‘ஜிவ்.. ஜிவ்..’வென விம்மித் துடித்தன..!!

காரிடாரின் அடுத்த மூலையில், சுவற்றோடு அறையப்பட்டிருந்தது அந்த ஓவியம்.. ஆறடி உயரத்தில் சற்றே பிரம்மாண்டமான ஓவியம்.. கழுத்தை குறுக்கி, மரக்கிளையில் ஓய்வெடுக்கிற ஒரு வல்லூறின் ஓவியம்..!! மணிமாறன் அந்த ஓவியத்தின் பக்கவாட்டில் கைவிட்டு, சுவற்றில் எதையோ அழுத்தி தடவ.. அந்த ஓவியம் இப்போது சரக்கென விலகிக்கொண்டது..!! ஓவியத்திற்கு பின்புறமாக மறைந்திருந்த அந்த மரக்கதவுகள் பார்வைக்கு வந்தன.. வெளிப்பார்வைக்கு எட்டாத, சுவற்றோடு பொருந்தியிருந்த மரக்கதவுகள்..!!

“க்க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்…!!!!”

மணிமாறன் கதவில் கைவைத்து உள்ளே தள்ளவும்.. வீட்டுக்குள்ளேயே இருந்த அந்த ரகசிய அறை, மெல்ல திறந்து கொண்டது..!! அறைக்குள் சுத்தமாக வெளிச்சம் இல்லை.. அடர்த்தியாக இருள் படிந்திருந்தது..!! கதவை திறந்ததுமே.. முகத்தை சுளிக்க வைக்கிற மாதிரியான ஒரு துர்நாற்றம்..!! அறை வாசலில் இருந்து கீழே இறங்குகிற ஏழெட்டு படிக்கட்டுகள்.. மணிமாறன் நாற்காலியை மீண்டும் சாய்த்து, அந்த படிக்கட்டுகளில் ஆதிராவை இழுத்து சென்றார்..!!

“ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்….!!!!”

ஒவ்வொரு படிக்கட்டாக நாற்காலி கீழிறங்க, அதன் கால்கள் படிக்கட்டில் மோதி பெரிதாக சப்தம் கிளப்பின.. ஒவ்வொருமுறை அந்த சப்தம் கேட்டபோதிலும், நாற்காலியில் வீழ்ந்து கிடந்த ஆதிராவின் இருதயம் ‘குபுக்.. குபுக்..’ என அதிர்ந்துபோய் துடித்தது.. அப்படியே நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவது போல..!!