மதன மோக ரூப சுந்தரி – 5 15

கடைசி படிக்கட்டில் இறங்கியதும்.. கையில் பிடித்திருந்த நாற்காலியை ‘சர்ர்ர்ர்ர்ர்’ரென அறைக்குள் விசிறியெறிந்தார் மணிமாறன்..!! ‘தடதட’வென்ற சப்தத்துடன் நாற்காலி எங்கோ புரண்டோட.. தரையில் விழுந்த ஆதிரா ‘கடகட’வென கீழே உருண்டாள்..!! உருண்டவேகத்தில்.. இருட்டுக்குள் இருந்த ஒரு மரஅலமாரியில் சென்று மோதினாள்..!! அலமாரியின் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்று நழுவி.. ஆதிராவின் தலையில் இப்போது ‘சடசட’வென்று கொட்டியது..!! ஏதோ காகித அட்டைகள் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது..!!

“ஸ்ஸ்ஸர்ர்ர்ர்ரக்..!!!!” – தீக்குச்சி உரசப்படுகிற சப்தம்.

அந்த ஹிந்திப் பாடலை மீண்டும் விசிலடித்து ஹம் செய்தவாறே.. அறைக்குள் ஆங்காங்கே தோன்றிய மெழுகுவர்த்திகளுக்கு நெருப்பு வைத்தார் மணிமாறன்..!! ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் போதிய அளவு வெளிச்சத்தால் அறையை நனைத்தன.. கழிவுப் பொருட்களை அடைத்துவைக்கிற ஒரு குடவுன் மாதிரி காட்சியளித்தது அந்த அறை..!!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்.. ஆதிரா சற்று கஷ்டப்பட்டே எழுந்து, அந்த மரஅலமாரியில் சாய்ந்து அமர்ந்தாள்..!! கதவை சாத்துவதற்காக மணிமாறன் படிக்கட்டு ஏறிக்கொண்டிருக்க.. கண்களில் பீதியோடு அவரது முதுகையே மிரட்சியாக பார்த்தாள்..!! சற்றுமுன் அவளது தலையில் கொட்டி, இப்போது அவளைச்சுற்றி சிதறிக்கிடந்த அந்த காகித அட்டைகளின் மீது.. எதேச்சையாக அவளது பார்வை விழுந்தது..!! அனைத்துமே ஒரே அச்சில் பதிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள்..

“மணமகன்: அதியமான்.. மணமகள்: அகல்விழி..!!”

“காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!!”

அகல்விழியின் அம்மா அழுதபடியே உதிர்த்த வார்த்தைகள், ஆதிராவின் காதுகளுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன.. அகல்விழிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது இப்போது தெளிவாக புரிய, ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு பயசிலிர்ப்பு.. அவளது மூச்சிரைப்பு இன்னும் அதிகமாகிப்போய், மார்புகள் ரெண்டும் ‘சர்.. சர்..’ரென மேலும் கீழும் ஏறியிறங்கின.. !!

கதவை சாத்திவிட்டு படிக்கட்டு இறங்கி கீழே வந்தார் மணிமாறன்.. சரிந்து கிடந்த நாற்காலியை நேராக நிமிர்த்தி வைத்தார்..!! அதற்கருகே, அறையின் மையமாக இருந்த அந்த மரமேஜையின் பக்கமாக திரும்பினார்.. கப்போர்ட் திறந்து உள்ளிருந்த எதையோ வெளியே எடுத்தார்..!! பயத்தில் முகம் வெளிறிப்போய் ஆதிரா அவரையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவரோ உதட்டில் ஒரு புன்னகையுடன் ஆதிராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, கைகளுக்கு கையுறை அணிந்துகொண்டார்..!!

மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு துணியை உதறி, தன்மீது போர்த்திக் கொண்டார்.. அந்தத்துணியின் மேல்ப்பகுதியில் இருந்த இரண்டு நாடாக்களை, தனது கழுத்தை சுற்றிப்போட்டு முடிச்சிட்டுக் கொண்டார்..!! நீல நிறத்தில் இருந்த அந்தத்துணியின் மேற்பரப்பில்.. ஆங்காங்கே.. கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தத்திட்டுக்கள்..!!

ஆதிராவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தார்.. அவள் இப்போது மிரண்டுபோய் சப்தம் எழுப்பினாள்.. உடலை நெளித்து நகர முயன்றாள்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

ஆதிராவை நெருங்கிய மணிமாறன் சற்றே குனிந்து, விரவிக்கிடந்த திருமண அழைப்பிதழ்களில் ஒன்றை கையில் எடுத்தார்.. ஒரு ஏளனப் புன்னகையை உதிர்த்தவர், எள்ளலான குரலில் ஆதிராவிடம் கேட்டார்..!!

“ஹ்ம்ம்ம்ம்.. அகல்விழி..!!!! யார்ன்னு தெரியுதா..??”

“……………………………………”

“என் ஸ்டூடண்ட்.. உன் தங்கச்சியோட ஃப்ரண்டு..!!”

“இதுவரை எல்லா பொண்ணுகளையும் நானா போய்த்தான் தூக்கிட்டு வந்திருக்கேன்.. செவப்பு ட்ரஸ், விக்லாம் போட்டுக்கிட்டு.. அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு..!! இந்த அகல்விழி ஒருத்திதான் தானா வந்து தனியா எங்கிட்ட மாட்டுனவ..!! பாவம்.. கல்யாணம்னு சொல்லிட்டு சந்தோஷமா வந்தா.. இங்க கருமாதி நடக்கப் போறது தெரியாம..!! ஹாஹாஹாஹா..!!”