மதன மோக ரூப சுந்தரி – 5 15

எதோ ஒரு தைரியத்துல கையை வச்சுட்டேன்..!! இல்லாத வீட்டுப் பொண்ணு.. பணத்தை குடுத்து அவங்க குடும்பத்தைலாம் எப்படியோ சமாளிச்சுட்டேன்.. என் பொண்டாட்டியைத்தான் சமாளிக்க முடியல..!! மேட்டரை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு.. ‘நான் செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தந்தே ஆவேன்.. போலீஸ்ல என்னை போட்டுக் குடுக்கப் போறேன்..’னு கெடந்து குதிச்சா..!! கோவத்துல பட்டுன்னு அறைஞ்சேன்.. பொட்டுன்னு போய்ட்டா..!!”

“………………………………..” ஆதிரா இமைகளை விரித்து மணிமாறனை மிரட்சியாக பார்த்தாள்.

“இதே எடத்துலதான் அவளும் பொணமா கெடந்தா.. தலையை சுத்தி கசகசன்னு ஒரே ரத்தம்..!! எனக்கு கொஞ்ச நேரம் எதுவும் ஓடல.. அப்டியே படபடன்னு வந்துருச்சு..!! கட்டுன பொண்டாட்டியையே ஆத்திரத்துல கொலை பண்ணிட்டேன்.. ஜெயிலுக்கு போறதுக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. கொலையை மறைச்சாகனும்.. என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை..!!”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

“அப்பத்தான் லட்டு மாதிரி ஒரு ஐடியா வந்துச்சு.. இந்த ஊர்க்காரனுக குறிஞ்சியை பத்தி கட்டுக்கதை கட்டி விடுறதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.. அதை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு..!! அப்புறம் என்ன.. பொணத்தை கொண்டுபோய் தோட்டத்துல பொதைச்சுட்டு.. காரை கொண்டுபோய் காட்டுக்குள்ள விட்டுட்டு.. என் பொண்டாட்டி காணாம போய்ட்டான்னு கெடந்து ஒப்பாரி வச்சேன்.. குறிஞ்சியா இருக்கலாமோன்னு நானே சந்தேகத்தை கெளப்பி விட்டேன்..!!”

“………………………………..”

“சும்மா சொல்லக்கூடாது.. இந்த ஊர்க்காரனுக என்னை விட ரொம்ப ஃபாஸ்டா இருந்தானுக.. குறிஞ்சியாத்தான் இருக்கும்னு அடிச்சு சத்தியம் பண்ணுனானுக.. இருவது வருஷமா சும்மா கெடந்த குறிஞ்சி திரும்ப ஆரம்பிச்சுட்டான்னு மெரண்டு போய் பொரணி பேசுனானுக..!! பத்தாக்கொறைக்கு.. எல்லாத்துக்கும் காரணம் உன் தங்கச்சி தகட்டை எடுத்ததுதான்னு வேற ஊருக்குள்ள ஒரு நம்பிக்கை..!! ஹாஹாஹாஹா.. முட்டாப்பசங்க..!! என் வேலை ரொம்ப ஈசியா போய்டுச்சுமா.. இன்னைக்கு வரை எல்லார்ட்டயும் அதே கதைதான்..!!”

ஆதிராவின் இருதயம் இப்போது ‘படக்.. படக்’கென தாறுமாறாக அடித்துக் கொண்டது.. மார்புகள் ரெண்டும் ‘சரக் சரக்’கென விம்மி விரிந்தன.. சுவாசம் சீரற்றுப்போய் ‘தஸ்.. புஸ்..’ என்று மூச்சிரைத்தாள்.. பீதி நிறைந்திட்ட விழிகளோடு மணிமாறனையே இமைக்காமல் பார்த்தாள்..!! அவர் அருகிலிருந்த ஜாடியை எடுத்து நீர் பருகிவிட்டு.. ஸாலட் மென்றவாறு தொடர்ந்து மென்மையான குரலில் பேசினார்..!!

“ஹ்ம்ம்.. அதுக்கப்புறம்.. நான் ரொம்ப மாறிட்டேன்னுதான் சொல்லணும்.. மனசுக்குள்ள என்னன்னவோ யோசனை.. ஆசை..!! ‘ஒரு கொலையையும் பண்ணிட்டு.. இவ்வளவு சர்வசாதாரணமா தப்பிச்சுட்டமே’ன்னு நெனைக்க நெனைக்க.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? ரொம்பவே தைரியம் வந்துருச்சு.. ‘என்னவேணா செய்யலாம்.. குறிஞ்சி பேரை யூஸ் பண்ணி கரெக்டா செஞ்சோம்னா.. மாட்டிக்க சான்ஸே இல்லை’ன்னு தோணுச்சு..!!”

“………………………………..”

“அதுமில்லாம.. என் பொண்டாட்டியை கொலை செஞ்சப்போ.. அப்படியே அவ ரத்த வெள்ளத்துல கெடந்ததை பாத்தப்போ.. எனக்கு கெடைச்ச அந்த கிக்.. அந்த த்ரில்.. ச்சே.. சான்ஸே இல்லம்மா..!! எனக்கு அந்த கிக் திரும்ப திரும்ப வேணும்னு தோணுச்சு.. குறிஞ்சின்ற போர்வைல என் ஆசையைலாம் நிறைவேத்திக்க ஆரம்பிச்சேன்..!! அப்பப்போ.. எனக்கு ஆசை வர்றப்போலாம்.. ஊருக்குள்ள போய் எவளையாவது தூக்கிட்டு வந்துருவேன்.. ரெண்டு மூணு நாள் வச்சு ஜாலி பண்ணிட்டு.. அப்புறம் காலி பண்ணிருவேன்.. ஹாஹா..!!” மணிமாறன் கனைக்க,

“………………………………..” உடம்பில் ஜிவ்வென்று ஏறிய பீதியுடன், ஆதிரா பதறித் துடித்தாள்.

“ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!” முன்பொருமுறை சொன்ன டயலாக்கையே, மணிமாறன் இப்போது வேறொரு எகத்தாளமான டோனில் சொன்னார்.

“………………………………..” ஆதிரா அவரையே விழிகள் விரித்து, திகிலாக பார்த்தாள்.